Advertisment

சொட்டு மருந்து கொடுத்த தாய்! பரிதாபமாக இறந்த பச்சிளம் குழந்தை! 

New Born baby passed away near trichy

Advertisment

திருச்சி எடமலைப்பட்டிபுதுார் துளசிங்க நகர் பகுதியைச் சேர்ந்தவர் சிவானந்தம். இவரது மனைவி சுமிதா(25). இவர்களுக்குத் திருமணமாகி சுமிதா கர்ப்பமானதால், பிரசவத்திற்காகத் திருச்சியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்குக் கடந்த 5 நாட்களுக்கு முன்பு அழகான பெண் குழந்தை பிறந்து உள்ளது. தாயும் சேயும் நலமுடன் இருக்கவே, அங்கிருந்து அவர்கள் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். வீடு திரும்பிய சுமிதா, குழந்தைக்குச் சொட்டு மருந்து கொடுத்துவிட்டு, பால் கொடுத்துள்ளார். ஆனால் குழந்தையிடம் மூச்சு, பேச்சு இல்லை. இதனால் அதிர்ந்து போன சுமிதா, உடனே குழந்தையைத் திருச்சி அரசு மருத்துவமனைக்குக் கொண்டுசென்றுள்ளார். அங்கு குழந்தையைப் பரிசோதித்த டாக்டர்கள், குழந்தை இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர். பிறந்து 5 நாட்களேயான பெண் குழந்தை இறந்தது குறித்து எடமலைப்பட்டிபுதுார் போலீசார் வழக்குப் பதிவு செய்து, குழந்தையின் உடலைக் கைப்பற்றி, விசாரணை நடத்தி வருகின்றனர்.

police trichy
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe