Advertisment

புதிதாக 530 மருத்துவர்களை நியமிக்க முதல்வர் உத்தரவு!

இந்தியாவில் கரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் மத்திய மற்றும் மாநில அரசுகள் கரோனா தடுப்பு நடவடிக்கைகளில் தீவிரம் காட்டி வருகின்றன. அதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

Advertisment

இந்த நிலையில் தமிழகத்தில் கரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 35 ஆக அதிகரித்துள்ளது. இந்த 35 பேரில் மதுரையைச் சேர்ந்த ஒருவர் உயிரிழந்த நிலையில், ஒருவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார்.

NEW 530 DOCTORS APPOINTED CM PALANISAMY ORDER

கரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து தமிழக முதல்வர் பழனிசாமியிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பிரதமர் நரேந்திர மோடி கேட்டறிந்தார். அதனைத் தொடர்ந்து முதல்வர் பழனிசாமி, தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், தலைமை செயலாளர் சண்முகம், சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ், டிஜிபி திரிபாதி உள்ளிட்டோருடன் ஆலோசனை நடத்தினார்.

Advertisment

NEW 530 DOCTORS APPOINTED CM PALANISAMY ORDER

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8252105286"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

ஆலோசனைக்கு பிறகு, புதிதாக 530 மருத்துவர்கள், 1,000 செவிலியர்கள், 1508 ஆய்வக டெக்னீசியன்களை நியமிக்க முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். மருத்துவர் பணியாளர் தேர்வாணையம் மூலம் நியமிக்கப்படும் நபர்கள் மூன்று நாளில் பணியில் சேரவும், புதிதாக 200 ஆம்புலன்ஸ்களை உடனடியாக பயன்பாட்டிற்கு கொண்டு வரவும் முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

Doctors coronavirus cm palanisamy
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe