Skip to main content

தென் மாவட்டத்தின் சிறப்பு மிக்க நெல்லைத் தேரோட்டம்....! (படங்கள்)

Published on 14/07/2019 | Edited on 14/07/2019

 

புகழ் வாய்ந்த நெல்லையப்பர் ஆலய ஆனித் திருவிழா தேரோட்டம் சிறப்பாக நடந்து வருகிறது. லட்சக்கணக்கான பக்தர்கள் கண்டுகளிக்க பக்தர்கள் தேரை இழுத்து வருகிறார்கள். இன்று காலை கோலாகலமாக நடந்தது. இதில் அமைச்சர், கலெக்டர் மற்றும் பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்று தேரை வடம் பிடித்து இழத்தனர்.

தமிழகத்தில் உள்ள பிரசித்தபெற்ற சிவாலயாங்களில் ஒன்றான நெல்லையப்பர் காந்திமதி அம்பாள் கோவில் ஆனித்தேரோட்ட திருவிழா, கடந்த 10 நாட்கள் நடைபெறும் விழாவையொட்டி தினமும் சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார தீபாராதனையும், இரவில் பஞ்ச மூர்த்திகள் வீதி உலாவும் நடைபெற்று வருகிறது.

எட்டாம் திருவிழாவான நேற்று காலை நடராஜ பெருமாள் வெள்ளை சாத்தி உள் பிரகாரம் உலா வருதலும் நண்பகலில் பச்சை சாத்தி வீதி உலாவும், மாலையில் சுவாமி கங்காளநாதர் தங்க சப்பரத்தில் வீதி உலாவும் நடந்தது. கங்காளநாதர் உலாவின்போது கொட்டும் மழையிலும் பக்தர்கள் திரண்டு தரிசனம் செய்தனர். இரவில் சுவாமி தங்க கைலாச பர்வத வாகனத்திலும் வீதி உலா நடைபெற்றது.

திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று நடந்தது. காலை 8.45க்கு கலெக்டர் ஷில்பா பிரபாகர் சதீஷ் தலைமையில் சத்தியானந்த எம்.பி., ஏ.எல்.எஸ்.லட்சுமணன் எம்.எல்.ஏ. இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் பரஞ்ஜோதி, அலுவலர் ரோஷினி மற்றும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வடம்பித்து தேர் இழுத்தனர். தேருக்கு முன்னால் கோயில் யானை காந்திமதி, அலங்கரிக்கப்பட்டு பவனியான சென்றது. அதனைத்தொடர்ந்து நெல்லை சிவகானங்கள் சார்பில் பஞ்ச வாத்தியம், சங்கு, திருசின்னம் கொம்பு, பாணி மத்தம், ட்ரெம்பெட், உள்ளிட்ட பஞ்ச வாத்தியங்கள் பழங்க 60 பேர் கொண்ட குழுவினர் பங்கேற்று ஊர்வலமாக சென்றனர். இதில் பாரதி சுழலும் படிப்பகம், இந்து ஆலய பாதுகாப்பு பக்தர்கள் பேரவை சார்பில் பக்தர்களுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்பட்டன.

அம்பாள் தேர் காலை 9.30க்கு பக்தர்கள் வெள்ளத்தில் நீந்தி வாகையடி முனையை கடந்தது. தொடர்ந்து சுவாமி நெல்லையப்பர் தேர், பக்தர்களால் வடம்பிடித்து இழுக்கப்பட்டது. தேர், போத்தீஸ் கார்னர் வரை இழுக்கப்பட்டு நிறுத்தப்பட்டது. பின்னர் அம்பாள்தேர் இழுக்கப்பட்டு வாகையடி முனையை அடைந்தது. முன்னதாக அதிகாலையில் விநாயகர், சுப்பிரமணியர் தேர்கள் இழுக்கப்பட்டன.

தேரோட்டத்தில் பங்கேற்ற பக்தர்கள் தென்னாடுடைய சிவனே போற்றி என்னாட்டவருக்கும் இறைவா போற்றி என்ற பக்தி கோஷம் முழங்கினர். இதில் பல்லாயிரக்கண்ணாகன பக்தர்கள் பங்கேற்றனர். சுவாமி, அம்பாள் தேர்கள் இழுத்து நிலையம் சேர்க்கப்பட்ட பின்னர் சண்டிகேஸ்வரர் தேர் கடைசியாக இழுக்கப்படுமு;. ஒரே நாளில் அனைத்து இழுக்கப்பட்டு நிலையை வந்தடைய ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.

தேரோட்டத்தையொட்டி மாநகர போலீஸ் கமிஷனர் பாஸ்கரன் உத்தரவுப்படி துணை போலீஸ் கமிஷனர்கள் சரவணன், மகேஷ்குமார் ஆலோசனைப்படி கீழரதவீதியில் புறக்காவல் நிலையம் அமைத்து கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. மேலும் நான்கு ரதவீதிகள் உள்பட மக்கள் கூடும் இடங்களில் 1500 போலீசாரும், சாதாரண உடையில் 300 குற்றப்பிரிவு போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். முக்கிய இடங்களில் சி.சி.டி.வி. கேமிரா மூலம் போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

ரத வீதிகள், சுவாமி, அம்பாள் சன்னதி மற்றும் உள் பிரபகாரம், வெளி பிரகாரம், தேர் நிலையங்கள் உள்ளிட்ட பல்வேறு பகுதிகள் சி.சி.டி.வி. கேமரா மூலம் கண்காணிக்கப்பட்டு வருகிறது. ஹெலிகேமரா, கண்காணிப்பு கோபுரம் மூலம் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன.

 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ட்ரோன்கள் கண்காணிப்பில் வெள்ளியங்கிரி

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Drones are the key to surveillance

வெள்ளியங்கிரி மலையில் பக்தர்கள் மட்டுமல்லாது ட்ரக்கிங் ஆர்வம் உள்ளவர்களும் மலையேறி அங்குள்ள சிவன் கோவிலில் வழிபாடு செய்வது வழக்கம். மலையேறும் பக்தர்கள் எண்ணிக்கை அங்கு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பல்வேறு மாவட்டங்களில் இருந்து மட்டுமல்லாது அண்டை மாநிலங்களில் இருந்தும் மலையேற்ற அனுபவத்தைப் பெறுவதற்காகவும், சிவ லிங்கத்தை தரிசனம் செய்யவும் வெள்ளியங்கிரி மலைக்குச் செல்கின்றனர். மொத்தமாக ஏழு மலைத்தொடர்கள் கொண்ட வெள்ளியங்கிரி மலையில் ஏழாவது மலையில் சிவலிங்கம் உள்ளது. அதனைத் தரிசிப்பதற்காகவே பக்தர்கள் கூட்டம் படையெடுக்கிறது. அதுவும் சிவராத்திரி உள்ளிட்ட முக்கிய சீசன் காலங்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து மலையேறுவர்.

அண்மையில் வெள்ளியங்கிரி மலையில் ஏறிய வேலூரைச் சேர்ந்த தமிழ்ச்செல்வன் என்ற இளைஞரும், சேலம் வீரபாண்டி பகுதியைச் சேர்ந்த கிரண் என்ற இளைஞரும் மலையேறும் போதே மூச்சுத்திணறி உயிரிழந்தது பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. அதனைத் தொடர்ந்து கடந்த 25 ஆம் தேதி தெலுங்கானாவைச் சேர்ந்த சுப்பாராவ் (வயது 68). மருத்துவரான இவர் நான்காவது மலையில் சென்று கொண்டிருந்தபோது திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார். அதேபோல் சேலத்தைச் சேர்ந்த தியாகராஜன் என்பவர் குரங்கு பாலம் என்ற பகுதியில் மயங்கி விழுந்து இறந்து போனார். மேலும் 26 ஆம் தேதி நான்கு மணி அளவில் மலையில் ஏறிக் கொண்டிருந்த தேனி மாவட்டத்தைச் சேர்ந்த பாண்டியன் என்பவரும் மூச்சுத்திணறி உயிரிழந்தார். அதேபோல் வெள்ளியங்கிரி மலையில் ஏறிய ரகுராம் (வயது 50) என்பவர் மூச்சுத் திணறல் ஏற்பட்டு உயிரிழந்துள்ளார்.

இப்படியாக வெள்ளியங்கிரி மலையேறும் பக்தர்கள் உயிரிழக்கும் சம்பவங்கள் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கும் நிலையில், இன்று சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு வெள்ளியங்கிரியில் மலையேறும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்பதால் வனத்துறை சார்பில் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. தற்போது கோடை காலம் என்பதால் காட்டுத்தீ ஏற்படும் சூழ்நிலைகளும் உருவாகியுள்ளது. பக்தர்கள் மலையேறுவதற்கான பாதையைத் தவிர்த்து வேறு பாதையைப் பயன்படுத்திவிடாமல் இருக்க கண்காணிக்கப்படுவதாற்காக ட்ரோன்கள் கொண்டு வரப்பட்டுள்ளது. இன்று காலை முதலே பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சாரை சாரையாக மலையேற தொடங்கி வரும் நிலையில் சுழற்சி முறையில் தற்போது ட்ரோன்கள் மூலம் பக்தர்களின் நடமாட்டம் கண்காணிக்கப்பட்டு வருகிறது.

Next Story

கள்ளழகர் திருவிழாவில் நிகழ்ந்த சோகம்; போலீசார் தீவிர விசாரணை!

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Tragedy at the Kalalhagar festival Police serious investigation

உலகப்புகழ் பெற்ற மதுரை சித்திரை விழாவின் முக்கிய நிகழ்வான கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்வு பெரும் விமரிசையாக ஆண்டு தோறும் நடைபெற்று வருகிறது. இதனை லட்சக்கணக்கான மக்கள், பக்தர்கள் நேரில் கண்டு களிப்பர்.  தங்கக் குதிரையில் கம்பீரமாக வலம் வரும் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவம் மிகவும் பிரசித்தி பெற்றது. இந்த சித்திரை விழாவின் ஒரு பகுதியான மீனாட்சி - சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் நேற்று முன்தினம் (21.04.2024)  நடைபெற்றது. அதாவது சித்திரைத் திருவிழாவின் 10ஆம் நாளில் முக்கிய நிகழ்வான மீனாட்சி, சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் திரளான பக்தர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது.

அதனைத் தொடர்ந்து மீனாட்சி - சுந்தரேஸ்வரர் தேரோட்டம் நேற்று (22.04.224) கோலாகலமாகத் தொடங்கியது. இதனையொட்டி பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தேரை  உற்சாகத்துடன் வடம் பிடித்து இழுத்து பரவசம் அடைந்தனர். இதற்காக அதிகாலை முதல் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்த வண்ணம் இருந்தனர். அதே சமயம் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்வுக்காக கள்ளழகர் மதுரை வந்தடைந்தார். கள்ளழகர் உடன் பாரம்பரியமாகக் கொண்டு வரப்படுகின்ற அழகர் கோயிலின் உண்டியல்கள் 3 மாட்டு வண்டிகளில் எடுத்து வரப்பட்டது.

இதனையடுத்து மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் நிகழ்வு இன்று (23.04.2024) நடைபெற்றது. கள்ளழகரை தரிசிக்க ஆயிரக்கணக்கான மக்கள் வைகை ஆற்றில் குவிந்தனர். இதனையடுத்து பச்சைப் பட்டு உடுத்தி தங்கக் குதிரையில் கள்ளழகர் வைகை ஆற்றின் கரைக்கு வருகை புரிந்தார். கள்ளழகர் வைகையாற்றில் இறங்குவதற்கு முன்பு ஆற்றங்கரையில் மாலை அணிவித்து அழகருக்கு மரியாதை செலுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து பக்தர்களின் கோஷம் விண்ணை முட்ட, தங்கக்குதிரையில் பச்சைப்பட்டு உடுத்தி வைகையாற்றில் கள்ளழகர் இறங்கினார். 

Tragedy at the Kalalhagar festival Police serious investigation

இந்நிலையில் மதுரை சித்திரை திருவிழாவில் இளைஞர்கள் பட்டாக்கத்தியுடன் மோதிக்கொண்டதில் ஒருவர் கொலை செய்யப்பட்டார். சித்திரைத் திருவிழா நடந்த மதுரை மாவட்டம் ஆழ்வார்புரம் பகுதியில் ஏற்பட்ட மோதலில் கத்தியால் ஒருவருக்கொருவர் தாக்கிக் கொண்டனர். இதில் ஆழ்வார்புரத்தைச் சேர்ந்த கார்த்திக் மற்றும் சிவகங்கையைச் சேர்ந்த சோனையை மர்ம நபர்கள் கத்தியால் குத்தினர். இதனையடுத்து மருத்துவமனையில்  சிகிச்சை பெற்று வந்த ஒருவர் உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் மதுரையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த கொலை சம்பவம் குறித்து மதுரை மாநகர போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.