நெல்லை மாநகராட்சியின் முன்னாள் மேயர் உமாமகேஸ்வரி கொலை வழக்கில் திமுக பிரமுகர் சீனியம்மாள், அவரது கணவர் சன்னாசி ஆகியோரை கைது செய்தது சிபிசிஐடி காவல்துறை.
கடந்த ஜூலை மாதம் 23- ஆம் தேதி நெல்லை முன்னாள் மேயர் உமாமகேஸ்வரி, அவரது கணவர் முருக சங்கரன், வீட்டு உதவியாளர் மாரியம்மாள் ஆகியோர் வெட்டி கொலை செய்யப்பட்டனர். இந்த கொலை வழக்கு தொடர்பாக கார்த்திக் ஏற்கனவே கைது செய்த சிபிசிஐடி காவல்துறையினர், அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், முன்னாள் மேயர் வீட்டுக்கு புகுந்த கும்பல், பயன்படுத்திய கார் சன்னாசி உடையது என்பது தெரியவந்ததை அடுத்து காவல்துறையினர் அதிரடியாக கைது செய்துள்ளன.