Skip to main content

"தமிழ் கடல்" நெல்லை கண்ணன் உடல் தகனம்

Published on 19/08/2022 | Edited on 19/08/2022

 

k;l

 

நெல்லை கண்ணன் அழுத்தமான, ஆழமான எதற்கும் அஞ்சாத சங்க நாதமாய், கலை, இலக்கியம், அரசியல், கலாச்சாரம் என்று பன்முகத் தன்மை கொண்ட பேச்சாளர். வெண்கலக் குரலாய் மாநிலம் முழுக்க ஒலித்த அந்த விற்பன்னர் நெல்லை கண்ணன் என்ற முத்திரை பெயரால் அழைக்கப்பட்டவர்.

 

உடல்நலக்குறைவால் அவர் சிகிச்சை பெற்று வந்த நிலையில், ஆகஸ்ட் 18-ஆம் தேதி அன்று நெல்லை வண்ணார்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் பகல் 10.15 மணியளவில் காலமானார். அவருக்கு வயது 78. அவரின் மறைவுக்கு தமிழக முதல்வர், பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், பிரபலங்கள் எனப் பலரும் இரங்கல்களைத் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் நெல்லையில் உள்ள அவரது சொந்த ஊரில் அவரது உடல் தகனம் செய்யப்பட்டது. இறுதி நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கானவர்கள் கலந்துகொண்டனர்.

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

“தமிழே உயிராக வாழ்ந்த தமிழ்க்கடல் மறைந்துவிட்டார்” - கமல்ஹாசன் இரங்கல் 

Published on 19/08/2022 | Edited on 19/08/2022

 

kamalhaasan mourns nellai kannan

 

பேச்சாளரும், பட்டிமன்ற நடுவருமான நெல்லை கண்ணன்(77) 1970களில் தொடங்கி தமிழக அரசியல் சூழலில் முக்கிய ஆளுமைகளாக, பிரமுகர்களாக இருந்தவர்களிடம் நெருங்கிப் பழகியவர். குறிப்பாக காமராஜர் குறித்து நெல்லை தமிழில் இவர் ஆற்றிய சொற்பொழிவுகள் மிகவும் பிரபலம். உடல்நலக்குறைவால் அவர் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில், நேற்று(18.8.2022) நெல்லை வண்ணார்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் காலமானார். இவரின் மறைவுக்கு தமிழக முதல்வர், திரைபிரபலங்கள் என பல்வேறு தரப்பினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். மதிமுக பொதுச்செயலாளர் வைகோ நெல்லை கண்ணன் உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். 

 

இந்நிலையில் நடிகரும் மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசன் நெல்லை கண்ணன் மறைவுக்கு இறங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட ட்விட்டர் பதிவில், “சிந்தித்தால் தமிழ், வாய் திறந்தால் பழம்பாடல், சொல்வதெல்லாம் மேற்கோள்கள் என, தமிழே உயிராக வாழ்ந்த தமிழ்க்கடல் நெல்லை கண்ணன் மறைந்துவிட்டார். அவரது மூவாத மேடைத் தமிழ் மூத்த செவிகளில் ஒலித்தபடியே இருக்கும். தமிழய்யாவுக்கு என் அஞ்சலி” எனக் குறிப்பிட்டுள்ளார். 

 

 

Next Story

நெல்லை கண்ணன் உடலுக்கு நக்கீரன் ஆசிரியர் அஞ்சலி!

Published on 19/08/2022 | Edited on 19/08/2022

 

நெல்லை கண்ணன் அழுத்தமான, ஆழமான எதற்கும் அஞ்சாத சங்க நாதமாய், கலை, இலக்கியம், அரசியல், கலாச்சாரம் என்று பன்முகத் தன்மைக் கொண்ட பேச்சாளர், வெண்கலக் குரலாய் மாநிலம் முழுக்க ஒலித்த அந்த விற்பன்னர் ‘நெல்லை கண்ணன்’ என்ற முத்திரை பெயரால் அழைக்கப்பட்டவர்.

 

உடல்நலக்குறைவால் அவர் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில், ஆகஸ்ட் 18- ஆம் தேதி அன்று நெல்லை வண்ணார்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் பகல் 10.15 மணியளவில் காலமானார். அவருக்கு வயது 78. அவரின் மறைவுக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், பிரபலங்கள் இரங்கல்களை தெரிவித்துள்ளனர். இந்நிலையில் நக்கீரன் ஆசிரியர் நெல்லை கண்ணன் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தி, அவரது குடும்பத்தாருக்கு ஆறுதல் கூறினார்.