Skip to main content

நெல்லை கண்ணனுக்கு மற்றுமொரு சிக்கல்...!

Published on 14/01/2020 | Edited on 14/01/2020

தமிழறிஞர்களில் ஒருவரும் மேடை மற்றும் பட்டிமன்ற பேச்சாளருமான நெல்லை கண்ணன் பொதுக்கூட்டம் ஒன்றில் பேசும் போது இந்தியப் பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷா பற்றியும் குடியுரிமை சட்ட திருத்த மசோதா மக்களிடம் எப்படி பிரிவினையை ஏற்படுத்துகிறது என்பது பற்றியும் தனக்கே உரிய பாணியில் நகைச்சுவையாக பேசினார்.

 

 nellai-kannan-issue

 



இதற்காக பா.ஜ.க.வினர் கொதித்துப் போய் ஆர்பாட்டங்கள் செய்ய மாநில எடப்பாடி அரசு உடனே நெல்லை கண்ணனை கைது செய்து சிறையில் அடைத்தது. ஒரு வாரம் கழித்து நீதிமன்றம் ஜாமீன் கொடுக்க தற்போது அவர் நிபந்தனை ஜாமீனில் உள்ளார்.

இந்நிலையில் ஈரோடு மாவட்ட பகுஜன் சமாஜ் கட்சியின்  மாவட்ட செயலாளர் கோபால் என்பவர் தலைமையில் இன்று அதன் நிர்வாகிகள் ஒரு சிலர் ஈரோடு கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து அதிகாரியிடம் மனு கொடுத்தனர். அந்த மனுவில், "நெல்லை மாவட்டம் மேலப்பாளையத்தில் கடந்த மாதம் 29ஆம் தேதி நடந்த ஒரு கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய நெல்லை கண்ணன் பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதி பற்றி தரக்குறைவாகவும்,  இழிவு படுத்தும் விதமாகவும் கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.

 



இந்திய அளவில் உள்ள ஒரு பெரிய கட்சியின் தலைவியாக  உள்ள மாயாவதியை தரக்குறைவாக பேசியுள்ளார்.  மேலும் உத்தர பிரதேசத்தின் முதல்வராக 4 முறை பதவி வகித்துள்ளார். நாடாளுமன்ற உறுப்பினராகவும் இருந்துள்ளார். இப்படிப்பட்ட ஒரு தலைவரை பற்றி தரக்குறைவாக பேசி உள்ள நெல்லை கண்ணன் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்" என கூறப்பட்டிருந்தது. 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'வாக்களித்த அனைவருக்கும் நன்றி'-பிரதமர் மோடி

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
'Thank you to all who voted' - PM Modi

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்துள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நடைபெற்ற முதல் கட்ட வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ள நிலையில் பிரதமர் மோடி வரவேற்று எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், 'முதல்கட்ட வாக்குப்பதிவு நல்ல வரவேற்பை கொண்டுவந்துள்ளது. இன்று வாக்களித்த அனைவருக்கும் நன்றி. இன்றைய வாக்கெடுப்பில் இருந்து சிறப்பான கருத்துக்கள் வருகிறது. இந்தியா முழுவதும் மக்கள் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு அதிக எண்ணிக்கையில் வாக்களிக்கிறார்கள் என்பது தெளிவாக தெரிகிறது' என தெரிவித்துள்ளார்.

Next Story

பாஜக-விசிக மோதல்; ஒருவருக்கு மண்டை உடைப்பு

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
BJP-vck clash; One suffered a fractured skull

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

அந்த வகையில் தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறவுள்ளது.  இந்நிலையில் காலை 7 மணி முதல் வாக்காள பெருமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். அதேபோன்று அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் என பலரும் தங்களின் வாக்குகளை வாக்குச்சாவடிகளில் செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் அரியலூரில் பாஜக மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி தரப்பினருக்கிடையே நடைபெற்ற மோதலில் ஒருவரின் மண்டை உடைக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே நரசிங்க பாளையத்தில் உள்ள வாக்குச்சாவடியில் பாஜக மற்றும் விசிகவினர் இடையே மோதல் ஏற்பட்டது. வாக்குச்சாவடி முகவர்களுக்கு உணவு கொடுக்க சென்ற போது ஏற்பட்ட வாக்குவாதத்தில் மோதல் வெடித்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதில் ஒருவரின் மண்டை உடைந்துள்ளது. மோதலில் காயமடைந்த அருண், அஜித் ,செல்வகுமார் ஆகியோர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனால் அங்கு வாக்குப்பதிவு ஒரு மணி நேரத்திற்கு மேலாக பாதிக்கப்பட்டுள்ளது.