Skip to main content

வயசானாலும் வீரம் குறையல...மெர்சல் காட்டிட்டாங்க...கடையம் தம்பதியின் துணிச்சலுக்கு அமிதாப், ஹர்பஜன் உள்ளிட்ட பிரபலங்களின் வாழ்த்துக்கள்!

Published on 13/08/2019 | Edited on 13/08/2019

"திருட்டு பசங்க எல்லாத்துக்கும் இந்த வீடியோ பாத்தா அல்லு விடும்.என்ன வீரம்? பாசத்துக்கு முன்னாடி நான் பனி. பகைக்கு முன்னாடி புலின்னு சொல்ற மாதிரி மெர்சல் காட்டிட்டாங்க. இது தமிழனின் நேர்கொண்டபார்வை!" என ஹர்பஜனும், "என்ன ஒரு வீர தீரம்? என அமிதாப்பச்சனும் ட்வீட் செய்துள்ளார். அவர்களுக்கு போட்டியாக உலகமெங்கும் கடையம் தம்பதியினரின் துணிச்சலைப் பாராட்டி டுவிட் பதிவிட்டு டிரெண்டாக்கி வருகின்றனர் நெட்டிசன்கள்.

 

 

NELLAI KADAYAM OLD COUPLE FIGHT WITH THIEF VIRAL VIDEO, HARBHAJAN TWEET

 

பாரதியின் செல்லம்மா பிறந்த ஊரான நெல்லை மாவட்டம் கடையத்திலுள்ளது. ஊருக்கு ஒதுக்குப்புறமான கல்யாணிபுரத்தில் சுமார் 5 ஏக்கர் அளவில் பரந்து விரிந்த எலுமிச்சை பண்ணையின் முகப்பிலேயே உள்ளது. தோப்புடன் கூடிய அந்த வீடு பல பறவைகளுக்குக் கூடு என்றாலும், விக்கிரமசிங்கபுரம் மதுரா கோட்ஸில் வேலைப் பார்த்து விருப்ப ஓய்வுப் பெற்ற சண்முகவேலுவுக்கும், அவரது மனைவி செந்தாமரைக்கும் அது தான் சொர்க்க பூமியும் கூட!! மகள் மற்றும் மகன்கள் பணி நிமித்தமாக பெங்களூரு, சென்னையில் செட்டிலாகிவிட்டாலும் இந்த தோப்பு வீட்டையும், தோப்பிலுள்ள மரங்களையும், குருவிகளையும் விட்டு பிரிய மனமில்லை இருவருக்கும், மன நிம்மதி மட்டுமின்றி வருவாயையும் ஈட்டித் தந்த அந்த தோப்பு தற்பொழுது உலகளவில் லேண்ட் மார்க் ஆகியுள்ளது குறிப்பிடத்தக்க அம்சம்.

 

NELLAI KADAYAM OLD COUPLE FIGHT WITH THIEF VIRAL VIDEO, HARBHAJAN TWEET

 

ஞாயிற்றுக்கிழமை இரவு 9.30 மணியளவில் தோப்பு வீட்டின் முகப்பில் நாற்காலியில் சண்முகவேலு ஓய்வாக அமர்ந்துக்கொண்டிருக்க, அவரின் பின் பக்கமிருந்து ஒரு முகமூடித்திருடன் ஓசைப்படாமல் முன்னேறி அவரின் கழுத்தில் துணடைப் போட்டு இறுக்கி அழுத்திய வேளையில், சப்தம் கேட்டு வீட்டின் உள்ளேயிருந்து செந்தாமரையோ கையில் கிடைத்ததையெல்லாம் அவன் மீது தூக்கி வீசுகிறார். அதே வேளையில் மறைந்திருந்த இன்னொரு முகமூடி திருடனும் வெளிப்பட்ட வேளையில், கழுத்தில் இறுக்கப்பட்ட துண்டுடன் போராடத் துவங்கினார் சண்முகவேலு. கழுத்தில் கிடந்த துண்டை முன்பக்கம் இழுத்து, அவர் உட்கார்ந்திருந்த நாற்காலியை சரிய செய்து லாவகமாக தப்பிய அவர், மனைவி துணையுடன் துணிச்சலுடன் இரு முகமூடிக் கொள்ளையர்களைத் தாக்க தொடங்கினார்.

 

 

NELLAI KADAYAM OLD COUPLE FIGHT WITH THIEF VIRAL VIDEO, HARBHAJAN TWEET

 

அதில் ஒரு முகமூடித் திருடனோ கையில் அரிவாளைக் கொண்டு வெட்டத் தொடங்கினான். மறுமுனையில் நாற்காலி, சேர்களை விட்டெறிந்த செந்தாமரைக்கு கையில் காயம் ஏற்பட்டது. இதனை சந்தர்ப்பமாக கொண்ட மற்றொரு திருடனின் கையில் செந்தாமரையின் கழுத்தில் கிடந்த நான்கரை பவுன் தங்கசங்கிலி சிக்கிக்கொள்ளவே எஸ்கேப்பாகினர் இருவரும்.! துணிச்சலுடன் போராடிய தம்பதியினரின் வீர தீரமும், கொலைக்கு முயற்சித்து தப்பித்த முகமூடித்திருடர்களும் அங்கிருந்த சிசிடிவியில் பதிவாக அந்த வீடியோ தற்போது வைரலாகியுள்ளது.

 

NELLAI KADAYAM OLD COUPLE FIGHT WITH THIEF VIRAL VIDEO, HARBHAJAN TWEET

 

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கடையம் காவல்நிலைய ஆய்வாளர் ஆதிலட்சுமி குற்ற எண் 233/19 u/s 394 IPC பிரிவில் வழக்குப் பதிவு செய்து விசாரணையைத் தொடங்கிய வேளையில், செவ்வாய்க்கிழமை அன்று சம்பவ இடத்திற்கு வந்த நெல்லை மாவட்ட காவல்துறை எஸ்.பி.அருண் சக்திகுமாரும் வயதான  தம்பதிகளைப் பாராட்டியதோடு மட்டுமில்லாமல் குற்றவாளிகளை விரைந்து பிடிக்க மூன்று தனிப்படைகளை அமைக்க உத்தரவிட்டார். இது இப்படியிருக்க, கடையம் தம்பதியின் துணிச்சல் மிக்க வீடியோ பார்த்த அனைவரும் தம்பதிகளைப் பாராட்டி வர, இந்தி திரையுலகின் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சனும், இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங்கும் தம்பதியினரைப் பாராட்டி ட்வீட் செய்துள்ளனர். இந்த ட்வீட் தற்போது வைரலாகி வருகிறது.

 

 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“இந்தியா கூட்டணியிடம் பா.ஜ.க தோல்வி பெறும்” - பா.ஜ.க அமைச்சரின் வைரல் பேச்சு

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
BJP minister's viral speech BJP will lose to India alliance in rajasthan

7 கட்டங்களாக நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் நடைபெறுகிறது. கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி முதற்கட்ட வாக்குப்பதிவு 102 தொகுதிகளில் முடிந்துள்ளது. 2வது கட்ட வாக்குப்பதிவு, ராஜஸ்தான் உள்ளிட்ட 88 தொகுதிகளில் வரும் ஏப்ரல் 26ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது.

முன்னதாக, ராஜஸ்தானில் மொத்தமுள்ள 25 மக்களவைத் தொகுதிகளில் 12 தொகுதிகளுக்கு முதற்கட்ட வாக்குப்பதிவு கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற்றது. அடுத்து உள்ள 13 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு இரண்டாம் கட்டமாக ஏப்ரல் 26 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான இறுதிக்கட்ட தேர்தல் பிரச்சாரம் நேற்று மாலை (24-04-24) முடிவடைந்தது.

இந்த நிலையில், இந்தியா கூட்டணியிடம் பா.ஜ.க தோல்வியடையும் என்று பா.ஜ.க அமைச்சர் ஒருவர் பேசியது தொடர்பான வீடியோ ஒன்று சமூகவலைத்தளங்களில் வெளியாகி பா.ஜ.க தரப்பில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

BJP minister's viral speech BJP will lose to India alliance in rajasthan

ராஜஸ்தான் மாநிலத்தில் முதல்வர் பஜன் லால் ஷர்மா தலைமையில் பா.ஜ.க ஆட்சி நடைபெற்று வருகிறது. முதல்வர் பஜன் லால் ஷர்மா அமைச்சரவையில் மருத்துவத் துறை அமைச்சராக கஜேந்திர சிங் பொறுப்பு வகித்து வருகிறார். இந்நிலையில், பா.ஜ.க அமைச்சர் கஜேந்திர சிங் தனது ஆதரவாளர்களுடன் பேசியது தொடர்பாக வைரலான வீடியோவில், “முதற்கட்ட தேர்தலில் நாம் மோசமாக செயல்பட்டுள்ளோம். நாகௌர் மக்களவைத் தொகுதியில் இந்தியா கூட்டணியிடம் பா.ஜ.க தோல்வியைத் தழுவும். நமது வாக்காளர்கள் வெளியே வரவில்லை. மற்ற இடங்களையும் இழக்கலாம்” என்று கூறியதாக சொல்லப்படுகிறது. இது பா.ஜ.க தரப்பில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

'பஞ்சுமிட்டாய் போல தடை செய்யப்படுமா நைட்ரஜன் பிஸ்கட்?-அதிர்ச்சியை ஏற்படுத்திய சிறுவனின் வீடியோ

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
'Will Nitrogen Biscuits be Banned Like Cotton Candy'- Boy's Shocking Video

நைட்ரஜன் பிஸ்கட் சாப்பிட்ட சிறுவன் ஒருவன் துடிதுடிக்கும் வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் நிலையில் நைட்ரஜன்  பிஸ்கட்டுக்கு எதிராக பலரும் குரல் எழுப்பி வருகின்றனர்.

அண்மையில் சமூக வலைத்தளத்தில் வெளியான வீடியோ ஒன்றில் நைட்ரஜன் பிஸ்கட் சாப்பிட்ட சிறுவன் ஒருவன் சம்பவ இடத்திலேயே துடிதுடித்தான். இது தொடர்பான தகவல்கள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இந்த வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. இதில் அந்தச் சிறுவன் உயிரிழந்து விட்டதாகவும் கூறப்படுகிறது.

திரவ நைட்ரஜனை பிஸ்கட் உடன் சேர்த்து சாப்பிடும் பொழுது புகைப்பது போன்று வாய் மற்றும் மூக்கில் இருந்து புகை வரும். இதை ஒரு ஃபன் ஆன உணவாக பல்வேறு பொது இடங்களில் மற்றும் சுற்றுலா தளங்களில் விற்கப்பட்டு வருகிறது. கோவை, திருச்சி, சென்னை தீவுத் திடல் உள்ளிட்ட பகுதிகளில் நடக்கும் பொருட்காட்சிகளில் நைட்ரஜன் பிஸ்கட் விற்கப்படுவதைப் பார்க்க முடிகிறது. திரவ நிலையில் மைனஸ் 196 செல்சியஸ் வெப்பநிலையில் இருக்கும் திரவ நைட்ரஜன் பிஸ்கட்டில் சேர்த்து பயன்படுத்துவது ஆபத்து என்கின்றனர் உணவுத்துறை வல்லுநர்கள்.

பொதுவாக உணவுப் பொருள்களை உறைய வைக்கவே ஆண்டாண்டு காலமாக திரவ நைட்ரஜன் பயன்படுத்தப்பட்டு வருகிறது. உணவுப் பொருட்களைப் பதப்படுத்துவதற்கு திரவ நைட்ரஜன் பயன்படுத்தப்பட்டாலும் அது ஆபத்து நிறைந்ததாகவும் உள்ளது. ஒரே நொடியில் பொருட்களை உறைய வைக்கும் தன்மை கொண்டது. திரவ நைட்ரஜனை சிறிது திரவ நிலையில் எடுத்துக் கொண்டாலும் வயிற்றில் சென்று திரவ நைட்ரஜன் எவாபரேஷன் நடைபெற்று கடும் உடல் உபாதை ஏற்படுத்துவதோடு மரணத்திற்கும் இட்டுச் செல்லும் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

குறைந்த அளவில் திரவ நைட்ரஜனை குறைவாக பயன்படுத்தும் பொழுது எந்த ஆபத்தும் இருக்காது எனவும் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். இந்நிலையில் சமூக வலைத்தளத்தில் வெளியாகிய  இந்த வீடியோ பலருக்கும் அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது. அண்மையில் பஞ்சு மிட்டாயில் உள்ள நிறமி வேதிப்பொருள் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் என உறுதி செய்யப்பட்ட நிலையில் அதனை அரசு தடை செய்திருந்தது குறிப்பிடத் தகுந்தது.