Skip to main content

உறியடி பகையால் நிகழ்ந்த கொலை; உடலை வாங்க மறுத்த உறவினர்கள்

Published on 24/11/2022 | Edited on 24/11/2022

 

nellai incident ;Relatives refuse to buy the body

 

சீரியல் கொலைகளால் பதற்றத்திலிருக்கிறது தென் மாவட்டங்கள். கடந்த சில தினங்களுக்கு முன்பு பாளையின் சீவலப்பேரி படுகொலை பதற்றம் ஒரு வாரமாக நீடித்துத் தணிந்த பின்பு நேற்றைய தினம் நெல்லையின் பேட்டைப் பகுதியில் நடந்த கொலை மீண்டும் கொதிப்பைக் கீறியுள்ளது.

 

நெல்லையிலுள்ள சுத்தமல்லியை அடுத்த நடுக்கல்லூரைச் சேர்ந்தவர் நம்பிராஜன். பேட்டையிலுள்ள சிட்கோ தொழிற்பேட்டையில் தனியார் நிறுவனத்தில் வேலை பார்க்கும் கூலித் தொழிலாளி. இவரது மனைவி பேச்சியம்மாள். 8 மாதங்களுக்கு முன்புதான் திருமணம் நடந்திருக்கிறது. தற்போது அவர் 6 மாத கர்ப்பிணியாக உள்ளார்.

 

நேற்று முன்தினம் இரவு நம்பிராஜன் வழக்கம்போல் தனது நிறுவனத்திற்கு வேலைக்கு பைக்கில் சென்றிருக்கிறார். அவரை வேவு பார்த்து 2 பைக்குகளில் பின்தொடர்ந்து வந்த கும்பல் ஒன்று நம்பிராஜனை சுற்றி வளைத்தவர்கள் சரமாரியாக கூரிய ஆயுதங்களால் தாக்கிவிட்டுத் தப்பிச் சென்றனர். தகவலறிந்து சம்பவ இடம் வந்த நெல்லை மாநகர துணை ஆணையர் சரவணக் குமார் தலைமையிலான போலீசார், ரத்த வெள்ளத்தில் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த நம்பிராஜனை மீட்டு நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்க, அங்கு அவர் மரணமடைந்திருக்கிறார்.

 

nellai incident ;Relatives refuse to buy the body

 

இதையடுத்து போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் நடுக்கல்லூரில் கிருஷ்ண ஜெயந்தி விழாவின் போது உறியடி நிகழ்ச்சியை ஒரு தரப்பினர் வெகு விமரிசையாகக் கொண்டாடியிருக்கின்றனர். அது மற்றொரு தரப்பினருக்கு ஆத்திரத்தை ஏற்படுத்த அது சமயம் ஒரு வாலிபரை மற்றொரு தரப்பினர் தாக்கியுள்ளனர். அந்த வாலிபர் விழா நடத்தும் இளைஞர்களிடம் தெரிவித்திருக்கிறார். இதையடுத்து நம்பிராஜன் உள்ளிட்ட இளைஞர்கள் மற்றொரு தரப்பினரின் பகுதிக்குள் சென்று தட்டிக் கேட்டுள்ளனர். இதன் காரணமாகவே இரு தரப்பினருக்குமிடையே பகைமை வளர்ந்திருக்கிறது. இந்தப் பகைமை முன்விரோதம் காரணமாக நம்பிராஜனை வேவு பார்த்து கொலை செய்தது தெரிய வந்துள்ளது என்கின்றனர் காவல்துறை தரப்பினர்.

 

இந்தக் கொலைச் சம்பவம் நடுக்கல்லூர், சுத்தமல்லி பகுதிகளைப் பதற்றமாக்க, பாதிக்கப்பட்ட தரப்பினர் அ.தி.மு.க. எம்.ஜி.ஆர். மன்ற மாநில இணைச் செயலாளரான கல்லூர் வேலாயுதம் தலைமையில் நடுக்கல்லூரில் சாலை மறியலில் ஈடுபட்டனர். மறியல் போராட்டம் நீடிக்கவே அவர்களிடம் போலீசார் மற்றும் கோட்டாட்சியர் சந்திரசேகர் உள்ளிட்ட அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். அவர்களிடம், உண்மைக் குற்றவாளிகளையும் தூண்டுதலாக இருந்தவர்களையும் கண்டறிந்து கைது செய்ய வேண்டும். நம்பிராஜனின் மனைவிக்கு நிவாரணம், அரசு வேலை வழங்க வேண்டும். கோரிக்கை நிறைவேறும் வரை உடலை வாங்க மாட்டோம் என்றனர். போலீசாரின் உறுதிமொழியை ஏற்று போராட்டம் வாபஸ் பெறப்பட, சம்பவம் தொடர்பாக பாலசுந்தர், சிவமணி, ஆதி வேலாயுத பெருமாள் உள்ளிட்ட 6 பேரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

திருமணத்தை மீறிய உறவு; பெண்ணை பெட்ரோல் ஊற்றி எரித்த நடத்துநர்

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Conductor who doused woman with petrol and her in Krishnagiri

கிருஷ்ணகிரியைச் சேர்ந்தவர் திருப்பதி. இவரது மனைவி சிவகாமி(பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவருக்கும் கிருஷ்ணகிரி பாத்திமா நகரைச் சேர்ந்த அரசு பேருந்து நடத்துனர் மாதவன் என்பவருக்கும் கடந்த ஐந்து ஆண்டுகளாக திருமணத்தை மீறிய உறவு இருந்துள்ளது. இந்த நிலையில் மாதவனுக்கு வேறு சில பெண்களுடன் தொடர்பு  இருப்பதாக கருதிய லட்சுமி மாதவன் உடனான உறவை துண்டித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து மாதவன் சிவகாமிக்கு தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று இரவு வீட்டிற்கு வெளியே சென்று லட்சுமியைப் பின் தொடர்ந்து வந்த மாதவன் சிவகாமியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். மேலும் தன்னுடன் பேசுமாறு வற்புறுத்தியுள்ளார். ஆனால்   இதற்குச் சிவகாமி மறுப்பு தெரிவிக்க, ஆத்திரமடைந்த மாதவன் சிவகாமி மீது பெட்ரோலை ஊற்றி உயிரோடு எரித்துள்ளார். பின்னர் வீட்டின் அருகே உள்ள முட்புதிரில் தீயில் கருகி நிலையில் உயிருக்கு போராடி கொண்டிருந்த சிவகாமியைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக அவரை மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இந்த நிலையில் இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் சிவகாமிடம் விசாரணை செய்ததில் மேற்கண்ட விவரங்கள் தெரியவந்துள்ளது. இதை அடுத்து மாதவன் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

Next Story

தீ விபத்து; பலி எண்ணிக்கை 6 ஆக உயர்வு!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
incident for hotel near Patna Railway Station Bihar

பீகார் மாநிலம் பாட்னா ரயில் நிலையம் அருகே உள்ள ஹோட்டலில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு படை வீரர்கள் தீயை அணைக்கும் பணியிலும், மீட்புப் பணியிலும் ஈடுபட்டனர். இந்த தீ விபத்தில் சிக்கிய 12 பேர் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக முதற்கட்டமாக அனுப்பி வைக்கப்பட்டனர். இச்சம்பவம் பாட்னாவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருந்தது. இந்த தீ விபத்தில் சிக்கி 3 பேர் உயிரிழந்ததாகவும், 7 பேர் பலத்த காயமடைந்துள்ளனர் என பாட்னா போலீஸ் எஸ்.எஸ்.பி. ராஜீவ் மிஸ்ரா தெரிவித்திருந்தார்.

இது குறித்து பாட்னா தீயணைப்புத் துறை போலீஸ் டிஜி, ஷோபா ஓஹட்கர் கூறுகையில், “தீயணைப்புத் அணைக்கும் மேற்கொண்டோம். இதுபோன்ற நெரிசலான பகுதிகளில் விபத்துகளை தடுக்க தொடர்ந்து சிறப்பு கவனம் செலுத்தி வருகிறோம். இதுபோன்ற சம்பவங்களைத் தடுக்க நாங்கள் தொடர்ந்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம். சிலிண்டர் வெடித்ததால் இந்த தீ விபத்து நடந்தது. இருப்பினும் தற்போது தீ முற்றிலும் அணைக்கப்பட்டது” எனத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் பாட்னா சட்டம் மற்றும் ஒழுங்கு போலீஸ் டிஎஸ்பி கிருஷ்ணா முராரி கூறுகையில், “இந்த தீ விபத்தில் 5 முதல் 6 பேர் வரை இறந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சுமார் 30க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டுள்ளனர். அதில் பலத்த காயம் அடைந்த 7 பேர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்” எனத் தெரிவித்தார்.