Skip to main content

குப்பையில் கிடந்த ஈ கொல்லி மருந்து பாக்கெட்...தின்ற சிறுவன் பலி.

Published on 19/08/2019 | Edited on 19/08/2019

நெல்லை மாவட்டம் பாப்பாக்குடி அருகில் உள்ள நத்தம் காலனியைச் சேர்ந்தவர் கண்ணனின் மகள் முன் உபானா (4), அதே காலனியைச் சேர்ந்த பச்சாத்து என்பவரின் மகன் சுதன்ராஜ் (இரண்டரை வயது), இவர்கள் இருவரும் அங்குள்ள பால்வாடியில் படிப்பவர்கள். கடந்த வெள்ளிக் கிழமையன்று காலை இவர்கள், அப்பகுதியைச் சேர்ந்த சில குழந்தைகளோடு வீட்டருகே விளையாடிக் கொண்டிருந்தனர். அது சமயம் அங்கு குவிக்கப்பட்டுள்ள கழிவுகளில் கிடந்த ஈ கொல்லி மருந்து பாக்கெட்டை எடுத்திருக்கிறார்கள். அதிலிருந்து மிட்டாய் போன்ற வாசனை வரவே, அதை மிட்டாய் என்றெண்ணி சுதன்ராஜீம், உபானாவும் சாப்பிட்டிருக்கிறார்கள். 

 

nellai district two children's eat in some chemical Packet in the trash

 

சிறிது நேரத்தில் அழுதபடி மயங்கி விழுந்தார்கள். இது பற்றி தகவலறிந்து பதறியபடி வந்த பெற்றோர்கள், அருகிலுள்ள குழந்தைகளிடம் விசாரித்த போது, கீழே கிடந்த ஈ கொல்லி பாக்கெட் பொருளை சாப்பிட்டது தெரிய வந்தது. உடனே அவர்களை அம்பை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்பு, மேல் சிகிச்சைக்காக பாளை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனார். அங்கு சிகிச்சை பலனின்றி சிறுவன் சுதன்ராஜ் நேற்றிரவு பரிதாபமாக இறந்தான். சிறுமி உபானா தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

 

இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த பாப்பாக்குடி போலீசார் கழிவு பொருட்களோடு ஈ கொல்லி மருந்து பாக்கெட்டை வீசியது யார்? என்ற விசாரணையிலிறங்கியுள்ளனர். இந்தக் குழந்தைகளின் பெற்றோர்கள் அடிப்படை விவசாய கூலி வேலை செய்பவர்கள். இந்த சம்பவத்தால் அந்தப் பகுதி மக்களிடையே கடும் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது.





 

சார்ந்த செய்திகள்

Next Story

18 மாவோயிஸ்டுகள் பலி; சத்தீஸ்கரில் பரபரப்பு!

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
nn

சத்தீஸ்கர் மாநிலத்தில் 18 மாவோயிஸ்டுகள் சுட்டுக் கொலை செய்யப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

சத்தீஸ்கர் மாநிலம் கன்கர் மாவட்டத்தில் நக்சலைட்டுகள் மற்றும் பாதுகாப்பு படைகளுக்கு இடையே துப்பாக்கிச் சூடு நடைபெற்றது. இதில் மொத்தமாக 18 மாவோயிஸ்டுகள் சுட்டுக்கொலை செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இந்தத் தாக்குதலில் பாதுகாப்புப் படையைச் சேர்ந்த மூன்று வீரர்கள் படுகாயம் அடைந்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

மொத்தமாக 18 மாவோயிஸ்டுகளின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. அவர்கள் பயன்படுத்திய துப்பாக்கிகள், மெஷின் கன்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதில் ஒரே ஒரு எல்லை பாதுகாப்பு வீரரின் காலில் துப்பாக்கி குண்டு பாய்ந்து இருப்பதாகவும் ஆனால் உயிருக்கு எந்தவிதமான சேதம் இல்லை என்று தகவல் வெளியாகியுள்ளது. தேர்தல் நேரத்திற்கு முன்பாக நடைபெற்ற தாக்குதல் சம்பவத்தில் 18 மாவோயிஸ்டுகள் கொலை செய்யப்பட்டிருப்பது முக்கிய சம்பவமாக பார்க்கப்படுகிறது.  நக்சலைட்டுகள் ஆதிக்கம்  அதிகம் இருக்கும் சத்தீஸ்கரில் இந்தச் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Next Story

சாலையோரத்தில் கருகி உயிரிழந்து கிடந்த இளம் பெண்; விசாரணையில் வெளியான பகீர் தகவல்

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
A young woman was burnt to on the roadside; Bagheer information revealed in the investigation

கேரளாவில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு சாலையோரத்தில் இளம்பெண் கருகிய நிலையில் உயிரிழந்த சம்பவத்தில், முறையற்ற தொடர்பால் பெண் கொலை  செய்யப்பட்டது விசாரணையில் தெரியவந்துள்ளது.

கேரள மாநிலம் பாலக்காடு காங்காட்டுபடி பகுதியைச் சேர்ந்தவர் பிரவியா(31). கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு பிரவியா காணாமல் போன நிலையில் அவரை பல்வேறு இடங்களில் உறவினர்கள் தேடி வந்தனர். இந்நிலையில் பட்டாம்பி எனும் பகுதிக்கு அருகேயுள்ள சாலையோரத்தில் கருகிய நிலையில் கிடந்த சடலத்தைக் கைப்பற்றிய போலீசார் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அது பிரவியாவின் உடல் என்பது தெரிய வந்தது.

தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில் ஆலுரைச் சேர்ந்த சந்தோஷ் என்பவர் கொலை செய்தது தெரிய வந்துள்ளது. ஏற்கெனவே திருமணமான பிரவியா கருத்து வேறுபாட்டால் கணவரைப் பிரிந்து வாழ்ந்து வந்தார். சந்தோஷ் வைத்திருந்த ஜெராக்ஸ் கடையில் வேலை பார்த்து வந்துள்ளார் பிரவியா. அப்பொழுது அவருக்கும் சந்தோஷிற்கும் முறையற்ற தொடர்பு ஏற்பட்டுள்ளது.

சந்தோஷுக்கும் திருமணமாகி குழந்தைகள் உள்ளது. இந்த நிலையில் சில நாட்களாக சந்தோஷிடம் பேசாமல் தவிர்த்து வந்துள்ளார் பிரவியா. அந்த நேரத்தில் பிரவியாவிற்கு வேறு ஒருவருடன் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டது. வரும் 21ஆம் தேதி திருமணம் நடைபெற திட்டமிடப்பட்டிருந்தது. இந்த நிலையில் சந்தோஷிடம் பேசுவதை முற்றிலுமாக பிரிவியா தவிர்த்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சந்தோஷ் அவரை கடத்திச் சென்று எரித்து கொலை செய்து, உடலை சாலை ஓரத்தில் வீசிவிட்டுச் சென்றுள்ளார். எப்படியும் போலீசார் உடலைக் கைப்பற்றி விசாரித்து தன்னைப் பிடித்து வருவார்கள் எனக்கருதிய சந்தோஷ், வீட்டிற்கு சென்று தற்கொலை செய்து கொண்டார். இந்தச் சம்பவம் கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.