நெல்லை மாவட்டத்தின் திருவேங்கடம் அருகே விருதுநகர் மாவட்ட எல்லையை ஒட்டியுள்ள வரகனூர் கிராமத்திலுள்ள பட்டாசு தொழிற்சாலையில் கடந்த பிப்ரவரி 22 அன்று ஏற்பட்ட விபத்தில் 5 தொழிலாளர்கள் பலியானார்கள். அத்தனை அறைகளும் தரைமட்டமனது. அதனையடுத்து அந்தப் பட்டாசு ஆலைக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர். ஆனால் ஆலையின் தென்கோடியிலுள்ள பட்டாசு ஸ்டாக் இருக்கும் அறையை அவர்கள் சீல் வைக்க மறந்து விட்டனர்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/varaganur1.jpg)
இதனிடையே அந்த ஆலைப்பக்கம் உள்ள அந்த பட்டாசு அறையை ஒட்டியுள்ள காடுகளில் கருவேல மரம் வெட்ட வந்த மாங்குடியைச் சேர்ந்த 5 பேர்கள் அந்த அறையை ஒட்டி சமையல் செய்த பின் நெருப்பை அணைக்க மறந்து விட்டனர். பின்னர் அவர்கள் 5 பேரும் அந்த அறை பக்கம் அமர்ந்து உணவு சாப்பிட ஆரம்பித்த போது காற்றில் தீப்பொறி பறந்து பட்டாசு ஆலை வெடித்துச் சிதறியதில் 5 பேரும் உடல் கருகி படுகாயமடைந்தனர். அன்று மாலை கோபால் என்பவர் பலியானார். நக்கீரன் இணையதளம் ஏற்கனவே இது தொடர்பான செய்தியை வெளியிட்டிருந்தது.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/varaganur3.jpg)
படுகாயமடைந்த நான்கு பேர்களும் நெல்லை மற்றும் சிவகாசி அரசு மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தனர்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/varakanur2.jpg)
இவர்களில் குருசாமி, கனகராஜ், அர்ஜூன் மூவரும் அடுத்தடுத்து சிகிச்சை பலனின்றி இறந்தனர். தொடர்ந்து பாளை ஐகிரவுண்ட் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைபெற்று வந்த காமராஜ் (58) நேற்றிரவு இறந்தார். இதனால் வெடிவிபத்தில் படுகாயமடைந்த 5 பேர்களும் பலியானார்கள்.
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="8689919482" data-ad-format="link" data-full-width-responsive="true">
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
இந்த விபத்து குறித்து திருவேங்கடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)