Skip to main content

திரளான பக்தர்கள் வடம் பிடிக்க அசைந்தாடி வந்த ஆடித்தேர்!

Published on 11/08/2019 | Edited on 11/08/2019

ஆதிசிவன் ஒரு பாகமும், மறு பாகம் ஹரியாகவும் ஒருசேர அவதாரமெடுத்து சைவமும் விஷ்ணுவும் ஒன்றே என்று உலகுக்கு உணர்த்தி, ஒற்றுமையை ஏற்படுத்திய சிவபெருமான், அன்னை உமையவள் ஸ்ரீகோமதியம்பிகைக்கு அவரின் அருந்தவப்படி அத்திருக்காட்சியைக் காட்டியருளிய பூமி புன்னைவனம் என்கிற பொதிகையடி. இந்த அரிய தபசுக்காட்சி நடந்த இடமே தற்போது நெல்லை மாவட்டத்தின் சங்கரன்கோவில் நகராகியது. தென் மாவட்டத்தின் சங்கரநாராயணர், ஸ்ரீகோமதியம்பிகைக்காக பாண்டிய மன்னர், உக்கிரபாண்டிய மன்னரால் மிகப்பெரிய ஆலயம் சங்கரன்கோவிலில் அமைக்கப்பட்டதாக வரலாறு.

 

 

nellai district sankarankovil temple festival ther peoples police collector

 

ஆடி மாதத்தில் ஆதிக் கடவுள் சிவபெருமானின் இந்த அரிய காட்சி நடந்ததால், சங்கரன்கோவிலில் ஆடித்தபசு என்று அழைக்கப்பட்டு பத்து நாட்கள் திருவிழாவாக மண்டகப்படிதாரர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. அக்காட்சியைக்காண லட்சக்கணக்கான மக்கள் திரள, வரும் 13ம் தேதி ஆடித்தபசுக் காட்சி நடக்க உள்ளது. அதன் முன்னோட்டமாக, 9ம் திருநாளான இன்று ஸ்ரீசங்கரநாராயணர், ஸ்ரீகோமதியம்பிகையின் திருத்தேரோட்டம் காலையில் நடந்தது. பக்திப்பரவசத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம்பித்து இழுக்க, அசைந்தாடியபடி வந்தது ஆடித்தேர்.

 

nellai district sankarankovil temple festival ther peoples police collector

 

தேர் வடம் பிடிக்கும் மக்களோடு மக்களாகக் கலந்து, ஆரம்ப கட்டம் முதல், தேர் நிலையம் வந்து சேரும் வரை, தேரை வடம் பிடித்து இழுத்து வந்தார் நெல்லை மாவட்ட எஸ்.பி.யான அருண்சக்திகுமார். தேரோட்டத்தில் கலந்து கொண்ட மாவட்டக் கலெக்டர் ஷில்பாவும் தேரை வடம் பிடித்து இழுத்தார்.




 

சார்ந்த செய்திகள்

Next Story

பிரான்ஸ் வீரர்களுக்கு தற்காப்புக்கலைகளை கற்றுக்கொடுக்கும் தமிழக வீரர்கள்

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Tamil Nadu players teaching martial arts to French players

மாமல்லபுரத்தை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் சர்வதேச மஞ்சூரியா குங்ஃபூ தற்காப்புக் கலையின் சார்பில் இந்தோ பிரான்ஸ் தற்காப்புக் கலை சிறப்பு பயிற்சி முகாம் பிரான்ஸில் நடைபெற்று வருகிறது.

பிரான்ஸ் நாட்டின் ஃபெவ்ரி நகரில் மாஸ்டர் ஷி ஷிஃபூ மேத்யூ  தலைமையில் ஏப்ரல் 22 துவங்கி 28 வரை 7 நாட்கள் நடைபெற்று வரும் இந்தச் சிறப்பு பயிற்சி முகாமில் கல்பாக்கம் அணுபுரத்தைச் சேர்ந்த மாஸ்டர் சந்தோஷ், திண்டுக்கல் மாவட்டம் பழனி நாகூரைச் சேர்ந்த யோகா மாஸ்டர் பிரகாஷ் ஆகிய இருவரும், பிரான்ஸ் நாட்டு வீரர்களுக்கு  குங்ஃபூ தற்காப்புக் கலை, தெக்கன் களரி சிலம்பக்கலை, பதஞ்சலி ஹத யோகா, ஆகியவற்றை கற்பித்து வருகின்றார்கள். நேற்று யோகா குறித்து விளக்கம் அளித்து அதை செய்தும் காண்பித்துள்ளார்கள்.

Next Story

4 கோடி ரூபாய் சிக்கிய விவகாரம்; ஹோட்டல் ஊழியர்கள் காவல் நிலையத்தில் ஆஜர்

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
 4 crore rupees issue; Hotel staff present at police station

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19.04.2024 அன்று தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வாக்குப்பதிவு முடிந்தது. வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

முன்னதாக தமிழகத்தில் தேர்தல் பரப்புரைகள் தீவிரமாக சென்று கொண்டிருந்த நேரத்தில் சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து திருநெல்வேலிக்கு செல்லும் ரயிலில் தாம்பரம் ரயில் நிலையத்தில் கடந்த 06.04.2024 அன்று இரவு உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்ல முயன்ற ரூ.4 கோடி மதிப்பிலான ரொக்கம் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது. 6 பைகளில் கட்டுக்கட்டாக இருந்த 500 ரூபாய் நோட்டுகளைப் பறக்கும் படையினர் அதிரடியாகப் பறிமுதல் செய்தனர்.

இதையடுத்து இந்தப் பணத்தை எடுத்து வந்த புரசைவாக்கம் தனியார் விடுதி மேலாளரும் பாஜக உறுப்பினருமான சதீஷ், அவரின் சகோதரர் நவீன் மற்றும் லாரி ஓட்டுநர் பெருமாள் ஆகிய 3 பேரும் கைது செய்யப்பட்டனர். திருநெல்வேலி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு, இந்தப் பணத்தைக் கொண்டு செல்ல முயன்றதாக மூவரும் பகீர் வாக்குமூலம் கொடுத்ததாகத் தகவல் வெளியாகி இருந்தது. இச்சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

சம்பவத்தில் ரொக்கமாக நான்கு கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பாக நயினார் நாகேந்திரன் ஆஜராகி பதிலளிக்கும்படி காவல்துறை தரப்பில் சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. ஆனால் நயினார் நாகேந்திரன் விசாரணைக்கு ஆஜராகாத நிலையில் விசாரணைக்கு ஆஜராக பத்து நாட்கள் அவகாசம் வேண்டும் என நயினார் நாகேந்திரன் தரப்பில் காவல்துறைக்கு பதில் கடிதம் கொடுக்கப்பட்டுள்ளது.

நெல்லையில் நான்கு கோடி ரூபாய் பணம் கைப்பற்றப்பட்டது தொடர்பாக நயினார் நாகேந்திரனின் ஹோட்டலில் பணியாற்றிய  ஊழியர்கள் மற்றும் உறவினர்களுக்கு காவல்துறை சார்பில் நேரில் ஆஜராக சம்மன் அனுப்பட்டிருந்தது. தாம்பரம் காவல் நிலையத்தில் ஆஜராகி இது தொடர்பாக விளக்கம் அளிக்க உத்தரவிடப்பட்டிருந்தது. இந்நிலையில் நயினார் நாகேந்திரனின் ஹோட்டலில் பணியாற்றிய இரண்டு ஊழியர்கள் தற்போது தாம்பரம் காவல் நிலையத்தில் விசாரணைக்கு ஆஜராகி உள்ளனர். ராஜேந்திரனின் உறவினர் ஆஜராகவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் நயினார் நாகேந்திரனின் உறவினர் முருகன் என்பவரிடம் இன்று மாலை விசாரணை நடத்த தாம்பரம் போலீசார் முடிவு செய்திருப்பதாகவும்  தகவல்கள் வெளியாகி உள்ளது.