Skip to main content

திரளான பக்தர்கள் வடம் பிடிக்க அசைந்தாடி வந்த ஆடித்தேர்!

Published on 11/08/2019 | Edited on 11/08/2019

ஆதிசிவன் ஒரு பாகமும், மறு பாகம் ஹரியாகவும் ஒருசேர அவதாரமெடுத்து சைவமும் விஷ்ணுவும் ஒன்றே என்று உலகுக்கு உணர்த்தி, ஒற்றுமையை ஏற்படுத்திய சிவபெருமான், அன்னை உமையவள் ஸ்ரீகோமதியம்பிகைக்கு அவரின் அருந்தவப்படி அத்திருக்காட்சியைக் காட்டியருளிய பூமி புன்னைவனம் என்கிற பொதிகையடி. இந்த அரிய தபசுக்காட்சி நடந்த இடமே தற்போது நெல்லை மாவட்டத்தின் சங்கரன்கோவில் நகராகியது. தென் மாவட்டத்தின் சங்கரநாராயணர், ஸ்ரீகோமதியம்பிகைக்காக பாண்டிய மன்னர், உக்கிரபாண்டிய மன்னரால் மிகப்பெரிய ஆலயம் சங்கரன்கோவிலில் அமைக்கப்பட்டதாக வரலாறு.

 

 

nellai district sankarankovil temple festival ther peoples police collector

 

ஆடி மாதத்தில் ஆதிக் கடவுள் சிவபெருமானின் இந்த அரிய காட்சி நடந்ததால், சங்கரன்கோவிலில் ஆடித்தபசு என்று அழைக்கப்பட்டு பத்து நாட்கள் திருவிழாவாக மண்டகப்படிதாரர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. அக்காட்சியைக்காண லட்சக்கணக்கான மக்கள் திரள, வரும் 13ம் தேதி ஆடித்தபசுக் காட்சி நடக்க உள்ளது. அதன் முன்னோட்டமாக, 9ம் திருநாளான இன்று ஸ்ரீசங்கரநாராயணர், ஸ்ரீகோமதியம்பிகையின் திருத்தேரோட்டம் காலையில் நடந்தது. பக்திப்பரவசத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம்பித்து இழுக்க, அசைந்தாடியபடி வந்தது ஆடித்தேர்.

 

nellai district sankarankovil temple festival ther peoples police collector

 

தேர் வடம் பிடிக்கும் மக்களோடு மக்களாகக் கலந்து, ஆரம்ப கட்டம் முதல், தேர் நிலையம் வந்து சேரும் வரை, தேரை வடம் பிடித்து இழுத்து வந்தார் நெல்லை மாவட்ட எஸ்.பி.யான அருண்சக்திகுமார். தேரோட்டத்தில் கலந்து கொண்ட மாவட்டக் கலெக்டர் ஷில்பாவும் தேரை வடம் பிடித்து இழுத்தார்.




 

சார்ந்த செய்திகள்

Next Story

'முந்தியது எந்த மாவட்டம்?'- தலைமை தேர்தல் அதிகாரி வெளியிட்ட தகவல்

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
'Which district was the first?'- the information released by the Chief Electoral Officer

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று தற்போது முடிந்துள்ளது. மாலை 6:00 மணிக்குள் வாக்குச்சாவடிகளுக்கு வாக்களிக்க வந்தவர்களுக்கு டோக்கன் வழங்கி வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் அரசியல் கட்சியினர் முன்னிலையில் வாக்கு இயந்திரங்கள் சீல் வைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

தமிழகத்தில் இறுதி நிலவரப்படி 72.09 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த மாநில தேர்தல் ஆணையர் சத்யபிரதா சாஹு பேசுகையில், ''தமிழகத்தில் ஏழு மணி நிலவரப்படி 72.09 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. வாக்குப் பெட்டிகளுக்கு சீல் வைத்து வாக்கு எண்ணும் மையத்திற்கு எடுத்துச் செல்லும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் அதிகபட்சமாக கள்ளக்குறிச்சியில் 75.67 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. மத்திய சென்னையில் 67.37 சதவீதம், தென்சென்னையில் 67.82 சதவீதம், வட சென்னையில் 69.26 சதவீதம், தர்மபுரி மக்களவைத் தொகுதியில் 75.44 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது. சில வாக்குச்சாவடிகளில் டோக்கன்கள் கொடுக்கப்பட்டு வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. மாலை 3 மணிக்கு மேல் ஏராளமான மக்கள் அதிக அளவில் தங்கள் வாக்குகளை செலுத்தியுள்ளனர். தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் சட்ட ஒழுங்கு பிரச்சினை இன்றி அமைதியான முறையில் நடந்துள்ளது'' என்றார்.

திருவள்ளூர்-71.87 சதவீதம், வடசென்னை-69.26 சதவீதம், தென் சென்னை-67.82 சதவீதம், ஸ்ரீபெரும்புதூர்-69.79 சதவீதம், காஞ்சிபுரம்-72.99 சதவீதம், அரக்கோணம்-73.92 சதவீதம், வேலூர்-73.04 சதவீதம், கிருஷ்ணகிரி-72.96 சதவீதம், தர்மபுரி-75.44 சதவீதம், திருவண்ணாமலை-73. 35 சதவீதம், ஆரணி-73.77 சதவீதம், விழுப்புரம்-73.49 சதவீதம், சேலம்-73.55 சதவீதம், நாமக்கல்74.29 சதவீதம், ஈரோடு-71.42 சதவீதம், திருப்பூர் -72.02 சதவீதம், நீலகிரி-71.07 சதவீதம், கோவை-71.17 சதவீதம் வாக்குகள் பதிவாகியள்ளது.

Next Story

தமிழகம், புதுவையில் முடிந்தது வாக்குப்பதிவு

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
Polling has ended in Puduvai, Tamil Nadu

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று தற்போது முடிந்துள்ளது. மாலை 6:00 மணிக்குள் வாக்கு சாவடிகளுக்கு வாக்களிக்க வந்தவர்களுக்கு டோக்கன் வழங்கி வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அரசியல் கட்சியினர் முன்னிலையில் வாக்கு இயந்திரங்கள் சீல் வைக்கும் பணி நடைபெற்று வருகிறது.