Skip to main content

தீராத கோரிக்கைகளும் ஓயாத போராட்டங்களும்...

Published on 20/02/2020 | Edited on 20/02/2020

சி.ஏ.ஏ எனப்படும் குடியுரிமைச் சீர்திருத்தச் சட்டத்தை எதிர்த்து தமிழகமெங்கும் போராட்டங்கள் தொடர்ந்து கொண்டிருக்கும் நிலையில், நெல்லையைப் பிரித்து பதிய தென்காசி மாவட்டத்துடன் இணைப்பதை எதிர்த்து, தொலைதூர கிராம மக்களின் போராட்டங்கள் 40 நாட்களாக நீடித்த நிலையில் தற்போது வெளியான ஏரியா வரையறைக்குப் பின்பு எதிர்ப்பு போராட்டம் நெல்லை மாவட்டத்தின் பல பகுதிகளில் தீவிரமடைத்துள்ளது.

இந்த மாவட்டத்தின் திருவேங்கடம் தாலுகாவைச் சேர்ந்த மலையான்குளம் பஞ்சாயத்திலடங்கிய இந்திரா நகர், பாத்திமா நகர், ஜே.டி.நகர் யோகநாதபுரம் உள்ளிட்ட கிராமங்கள் அருகிலுள்ள குருவிகுளம் ஒன்றியத்திலிருக்கிறது. 

இந்தக் கிராமங்களைப் பிரித்து தொலை தூரமுள்ள மேலநீலிநல்லூர் யூனியனுடன் இணைப்பதற்கான மறு வரையறை வெளியானதை எதிர்த்து அந்தக் கிராமங்களின் மக்கள் திரண்டு வந்து இணைப்பிற்கு எதிர்ப்புத் தெரிவித்து திருவேங்கடம் தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்டனர். வழக்கறிஞர் கண்ணன் தலைமையில் போராடிய மக்கள், தங்களின் ரேசன் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை ஆதார் கார்டு போன்றவைகளைத் தாசில்தார் பாலசுப்பிரமணியத்திடம் ஒப்படைக்க வந்தனர்.


பேச்சுவர்த்தையில் ஈடுபட்ட தாசில்தார் அதிகாரிகளின் பார்வைக்கு அவர்களின் மனுவை அனுப்பிவைப்பதாக ஒப்புதலளித்த பின்பே அமைதியானார்கள். காலம் காலமாக எங்கள் பஞ்.கிராமங்கள் 5 கி.மீ. தொலைவிலுள்ள குருவிகுளம் யூனியனில்தானுள்ளது. பஸ் வசதியும் உள்ளது, கால்நடையாக, சைக்கிள் மூலமாகவும் சென்றுவிடுவோம்.

எங்களின் தேவைகள் நடந்தேறியுள்ளன. இதைவிடுத்து எங்கள் கிராமங்களை போக்குவரத்து வசதியற்ற 26 கி.மீ. தொலைவிலுள்ள மேலநீலிநல்லூர் யூனியனுடன் இணைப்பது மக்கள் நலன் பொருட்டா. அதே சமயம் அந்த யூனியனின் 8 கி.மீ. தொலைவிலுள்ள சாயமலை பஞ்சாயத்தை எங்கள் பஞ்சாயத்திற்குப் பதிலாக 23 கிமீ. தொலைவிலுள்ள குருவிகுளம் யூனியனில் இணைக்கிறார்கள் இதெப்படியிருக்கு. இங்குள்ள ஆளும் கட்சியின் அரசியல் புள்ளியின் சுயலாபத்திற்காக மக்களைப் பந்தாடுவதா?. அதனால் தான் இந்த எதிர்ப்பு, கோரிக்கை. நிறைவேறா விட்டால். வரும் தேர்தலைப் புறக்கணிப்பதோடு சாலை மறியலிலிலும் ஈடுபடுவோம் என்கிறார்கள் காட்டமாக.


இங்கே இப்படி என்றால் நெல்லை மாவட்டத்தின் அம்பை சமீபம் உள்ள பாப்பாக்குடி ஒன்றியத்தின் இடைகால், பள்ளகால் பனஞ்சாடி ராங்கசமுத்திரம் அடைச்சாணி உள்ளிட்ட கிராமத்தினர் தங்கள் கிராமங்களை தென்காசி மாவட்டத்தில் இணைப்பதற்குக் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர். 5 கி.மீ. தொலைவு சமீபம் உள்ள அம்பை தாலுகா சென்று வர வசதியுள்ள தங்கள் பகுதிகளைப் பிரித்து போக்குவரத்து வசதியற்ற 40 கி.மீ. தொலைவிலிருக்கும் தென்காசியோடு இணைப்பதை 40 நாட்களாக எதிர்த்துப் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனிடையே அடைச்சாணி தவிர்த்து மற்றக் கிராமங்கள் மட்டும் நெல்லையுடன் இணைக்கப்பட்டது. இதனால் அடைச்சாணி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து குழந்தைகளைப் பள்ளி்க்கு அனுப்பாமல் புறக்கணிப்பும் செய்தனர். இந்நிலையில் தங்கள் பகுதிகளை நெல்லையுடன் இணைத்து அறிவிக்காமலிருப்பதைக் கண்டித்து நேற்று (19/02/2020) 500- க்கும் மேற்பட்ட மக்கள் அடைச்சாணி ஆலயத்தில் திரண்டனர். 


ஆனாலும் அதிகாரிகள் யாரும் வராமல் போகவே. அனைவரும் சாலை மறியலில் ஈடுபடக் கிளம்பினர். அடைச்சாணி கிராம விலக்கில் சாலை மறியலில் ஈடுபட்டனர். அது சமயம் அங்கு வந்த தென்காசி தாசில்தார் சண்முகம், அம்பை டி.எஸ்.பி. சுபாஷினி ஆகியோர் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும் மக்களின் நலன் பொருட்டுத்தான் அரசு. 5 கி.மீ தொலைவை விடுத்து 40 கி.மீ. தொலைவு மக்களை அலைய விடுவதா?. மக்களைப் பந்தாடுவதா?. என்றும் கேள்வி எழுப்பினர்.
 

 

அம்மக்களைச் சமாதானப்படுத்திய அதிகாரிகள், கோரிக்கைப்படி கண்டிப்பாக நெல்லையுடன் இணைக்க கலெக்டர் மூலமாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று தாசில்தார் சண்முகம் உறுதியளித்ததனடிப்படையில் தற்காலிகமாக போராட்டம் விலக்கப்பட்டதாகத் தெரிவித்தினர். இது தொடர்பாக மாவட்டக் கலெக்டரை சந்திக்கப் போவதாகவும் தெரிவித்தினர்.
 

மக்களுக்காகத் தான் அரசு. அரசுக்காக மக்கள் அல்ல என்பதை உணர்த்தவதாக இருந்தது மக்களின் போராட்டம்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

4 கோடி ரூபாய் சிக்கிய விவகாரம்; ஹோட்டல் ஊழியர்கள் காவல் நிலையத்தில் ஆஜர்

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
 4 crore rupees issue; Hotel staff present at police station

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19.04.2024 அன்று தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வாக்குப்பதிவு முடிந்தது. வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

முன்னதாக தமிழகத்தில் தேர்தல் பரப்புரைகள் தீவிரமாக சென்று கொண்டிருந்த நேரத்தில் சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து திருநெல்வேலிக்கு செல்லும் ரயிலில் தாம்பரம் ரயில் நிலையத்தில் கடந்த 06.04.2024 அன்று இரவு உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்ல முயன்ற ரூ.4 கோடி மதிப்பிலான ரொக்கம் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது. 6 பைகளில் கட்டுக்கட்டாக இருந்த 500 ரூபாய் நோட்டுகளைப் பறக்கும் படையினர் அதிரடியாகப் பறிமுதல் செய்தனர்.

இதையடுத்து இந்தப் பணத்தை எடுத்து வந்த புரசைவாக்கம் தனியார் விடுதி மேலாளரும் பாஜக உறுப்பினருமான சதீஷ், அவரின் சகோதரர் நவீன் மற்றும் லாரி ஓட்டுநர் பெருமாள் ஆகிய 3 பேரும் கைது செய்யப்பட்டனர். திருநெல்வேலி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு, இந்தப் பணத்தைக் கொண்டு செல்ல முயன்றதாக மூவரும் பகீர் வாக்குமூலம் கொடுத்ததாகத் தகவல் வெளியாகி இருந்தது. இச்சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

சம்பவத்தில் ரொக்கமாக நான்கு கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பாக நயினார் நாகேந்திரன் ஆஜராகி பதிலளிக்கும்படி காவல்துறை தரப்பில் சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. ஆனால் நயினார் நாகேந்திரன் விசாரணைக்கு ஆஜராகாத நிலையில் விசாரணைக்கு ஆஜராக பத்து நாட்கள் அவகாசம் வேண்டும் என நயினார் நாகேந்திரன் தரப்பில் காவல்துறைக்கு பதில் கடிதம் கொடுக்கப்பட்டுள்ளது.

நெல்லையில் நான்கு கோடி ரூபாய் பணம் கைப்பற்றப்பட்டது தொடர்பாக நயினார் நாகேந்திரனின் ஹோட்டலில் பணியாற்றிய  ஊழியர்கள் மற்றும் உறவினர்களுக்கு காவல்துறை சார்பில் நேரில் ஆஜராக சம்மன் அனுப்பட்டிருந்தது. தாம்பரம் காவல் நிலையத்தில் ஆஜராகி இது தொடர்பாக விளக்கம் அளிக்க உத்தரவிடப்பட்டிருந்தது. இந்நிலையில் நயினார் நாகேந்திரனின் ஹோட்டலில் பணியாற்றிய இரண்டு ஊழியர்கள் தற்போது தாம்பரம் காவல் நிலையத்தில் விசாரணைக்கு ஆஜராகி உள்ளனர். ராஜேந்திரனின் உறவினர் ஆஜராகவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் நயினார் நாகேந்திரனின் உறவினர் முருகன் என்பவரிடம் இன்று மாலை விசாரணை நடத்த தாம்பரம் போலீசார் முடிவு செய்திருப்பதாகவும்  தகவல்கள் வெளியாகி உள்ளது.

Next Story

மயிலாடுதுறையில் சிறுத்தை; அம்பாசமுத்திரத்தில் கரடி; வைரலாகும் வீடியோ காட்சிகள்

Published on 11/04/2024 | Edited on 11/04/2024
Leopard in Mayiladuthurai; Bear in Ambasamudra; Videos go viral

கோடை காலம் தொடங்கிவிட்ட நிலையில் வனவிலங்குகள் கிராமங்களை நோக்கி படையெடுக்கும் நிகழ்வுகள் அரங்கேறி வருகிறது. மயிலாடுதுறையில் அண்மையில் தென்பட்ட சிறுத்தையை பிடிக்கும் பணியானது ஏழு நாட்களுக்கும் மேலாக இன்று வரை தொடர்ந்து வருகிறது. இந்த நிலையில், அம்பாசமுத்திரத்தில் வனப்பகுதியில் இருந்து ஊருக்குள் புகுந்த கரடி பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்த, நபர் ஒருவரை கரடி துரத்துவதும், அந்த நபர் தலைதெறிக்க ஓடும் சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரத்தை ஒட்டியுள்ள மேற்குத் தொடர்ச்சி மலையில் புலி, சிறுத்தை, கரடி, யானை, காட்டெருமை உள்ளிட்ட வனவிலங்குகள் இருக்கும் நிலையில், தற்போது கோடை காலம் தொடங்கியுள்ளதால் அவ்வப்போது வனப்பகுதியை விட்டு மலை ஓரத்தில் உள்ள கிராமங்களில் விலங்குகள் தஞ்சம் புகுவது வாடிக்கையாகி வருகிறது.

Leopard in Mayiladuthurai; Bear in Ambasamudra; Videos go viral

இந்த நிலையில் இன்று அதிகாலை கல்லிடைக்குறிச்சி பகுதிக்கு கரடி ஒன்று வந்துள்ளது. அதிகாலை வீட்டை விட்டு வெளியே வந்த ஒருவர், கரடியைப் பார்த்தவுடன் வேட்டியை மடித்துக் கட்டிக்கொண்டு மின்னல் வேகத்தில் அங்கிருந்து தப்பி ஓடினார். இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது. இது குறித்து தகவலறிந்து அங்கு வந்த அம்பாசமுத்திரம் வனச்சரகர் நித்யா தலைமையிலான வனத்துறையினர் ஊருக்குள் புகுந்த கரடியைத் தேடி வருகின்றனர். பொதுமக்களுக்கு எச்சரிக்கையும் கொடுக்கப்பட்டு வருகிறது.