Skip to main content

‘நாங்குநேரியில் தோழமைக் கட்சிப் பெண்ணிடம்..’ -விருதுநகர் அதிமுக வில்லங்க அரசியல்!

Published on 30/10/2019 | Edited on 30/10/2019

‘தோழமைக் கட்சி பெண்ணிடம் இப்படியா நடப்பது? நாங்குநேரியில் மறைக்கப்பட்ட விவகாரம்!’ என்னும் தலைப்பில் கடந்த 26-ஆம் தேதி நக்கீரன் இணையத்திலும், அதனைத் தொடர்ந்து அக்டோபர் 30 நக்கீரன் இதழிலும் வெளிவந்த செய்தியானது,  விருதுநகர் மற்றும் திருநெல்வேலி மாவட்ட அதிமுக மற்றும் அதன் தோழமைக் கட்சி வட்டாரத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்திய வண்ணம் உள்ளது.  

NELLAI DISTRICT NANGUNERI ADMK PARTY


 

அக்கட்டுரையில் ‘இளைஞர்’ என்று பெயர் குறிப்பிடாமல் சுட்டிக்காட்டப்பட்டிருந்த  விருதுநகர் அதிமுகவைச் சேர்ந்த கண்ணன் “உண்மையிலேயே நடந்தது என்னவென்றால்?” என நம்மிடம் விரிவாகப் பேசினார். 
 

“தோழமைக் கட்சியைச் சேர்ந்த அந்த அம்மாவின் மகளோடு நான் அப்போது பேசியதும், அதை ஒரு பிரச்சனையாக விருதுநகர் மாவட்ட அதிமுக அவைத்தலைவர் விஜயகுமாரிடம் சிலர் கொண்டு சென்றதும், அவர் எனக்கு அறிவுரை கூறியதும் உண்மைதான்.  இன்று வரையிலும் அம்மாவும் மகளும் என்னுடன் பேசிக்கொண்டுதான் இருக்கிறார்கள். சம்பந்தப்பட்ட மகளோ, அம்மாவோ எனக்கெதிராக எந்தப் புகாரும் அளிக்கவில்லை. ஒன்றுமே இல்லாத இந்த விஷயத்தை விவகாரமாக்கிய பின்னணியில் ‘அரசியல்’ இருக்கிறது.” என்று பொடி வைத்துப் பேசிய அவர், மகள் மற்றும் அம்மா தன்னுடன் பேசிய ஆடியோவை நமக்கு அனுப்பினார். கண்ணனுடன் அந்த அம்மாவின் மகள் அப்படியென்ன பேசினாரென்று பார்ப்போம்!|

NELLAI DISTRICT NANGUNERI ADMK PARTY

 

“ஒரு பெரிய பிரச்சனையே ஆயிருச்சு.  சரின்னு சொல்லிட்டு வந்துட்டேன்.”
“என்ன பிரச்சனை?” 
“நீங்க என்னைப் பத்தி கம்ப்ளைன்ட் பண்ணிட்டீங்களாம். அட்வகேட் சார்கிட்ட.”
“நீங்க பண்ணுன மெசேஜெல்லாம் செல்வம் பார்த்தாரு. நான் அப்ப வேன்ல இருந்தேன். நீங்க மெசேஜ் தட்டிவிட்டுக்கிட்டே இருந்தீங்களா?”
“ஓ.பி.எஸ். பாய்ன்ட்ல வச்சி..” 
“நீங்க எங்க கண்ணன் மாமாகிட்ட என்னமோ சொல்லிருக்கீங்க..”
”சரி.. விடுங்க.. உங்க ஏரியாவுல நல்லா வொர்க் பண்ணி அதிமுகவுக்கு அதிக ஓட்டு வாங்கிக்கொடுங்க.”
”நீங்கதான் எங்க கண்ணன் மாமாகிட்ட என்னமோ சொல்லிருக்கீங்க. அங்கே இருந்தவங்கள்ல எனக்குத் தெரிஞ்ச கண்ணன் நீங்க மட்டும்தான்.”
“சத்தியமா சொல்லுறேன். நான் எதுவும் சொல்லல.. கண்ணன்னா நான் மட்டுமா?  ஒன்றியம் பேரு கண்ணன். இப்படி எத்தனையோ கண்ணன் அப்ப என்கூட இருந்தாங்க.”
“எங்க கண்ணன் மாமாகிட்ட நீங்கதான் சொன்னீங்கன்னு. அவங்க வீட்ல வந்து பிரச்சனை.. பெரிய பிரச்சனையை இழுத்து விட்டுட்டாங்க. ஆட்டோ கண்ணன்தான் எனக்கு மாமா.. அவங்கதான் சொன்னாங்க.. நீங்க சொன்னீங்கன்னு. செல்வமும் உங்க மருமகளும் ரொம்ப டீப்பா பழகுறாங்க; வைக்கிறாங்க; பேசிக்கிட்டிருக்காங்கன்னு.”
“நான் இங்கே வந்திருக்கிறது கட்சி வேலை பார்க்கிறதுக்கு. நீங்க பேசினீங்க; பழகினீங்க. பேசினோம்; வச்சோம். அவ்வளவுதான். ஒண்ணுமில்ல. முடிஞ்சிருச்சு. நான் இதை கம்ப்ளைன்டா சொல்லல. என்னைக் கூப்பிட்டு அட்வைஸ் பண்ணுனாங்க. அட்வகேட் விஜயகுமார் சார் எனக்கு வெல்விஷர் மாதிரி. உங்களுக்கு ஒண்ணும் என்மேல வருத்தம் இல்லைல்ல.”
“உங்ககூட உள்ளவங்க பேசிருக்காங்க. நீங்களும் சேர்ந்து பேசிருக்கீங்க. மறுபடியும் உங்ககிட்ட இருந்து மெசேஜ் வந்திறக்கூடாதுல்ல. அதான் உங்க நம்பர பிளாக் பண்ணிட்டேன். எனக்கு யாரையுமே தெரியாது. யார்கிட்டயும் கம்ப்ளைன்ட் பண்ணல.”  
 

தீபாவளி முடிந்தபிறகு கண்ணனிடம் அந்த தோழமைக் கட்சியைச் சேர்ந்த அம்மா என்ன பேசினாரென்று பார்ப்போம்! 

“என்ன செய்யுறது? தீபாவளி செழிப்பில்லை. யாருமே கவனிக்கல. நீங்க எல்லாருமே போயிட்டீங்க. லாஸ்ட்ல கவனிக்கிறேன்னு சொல்லிட்டு எல்லாரும் ஓடிட்டீங்களே. எம்.எல்.ஏ. வந்துட்டாரா இல்லியான்னு தெரியல. எம்.எல்.ஏவை போயி பார்க்கணும். நான் போயி சால்வையெல்லாம் போட்டுட்டுத்தானே வந்தேன். என்ன உதவின்னாலும் கேளுங்க. செய்யறேன்னு சொல்லிருக்காரு. எனக்கு வேற எதுவும் பண்ண வேண்டாம். இடையன்குளம் பஞ்சாயத்துல இலவச இடம் மட்டும் தரணும். எங்க வீடு வேற பஞ்சாயத்துல இருக்குல்ல.”  

NELLAI DISTRICT NANGUNERI ADMK PARTY



 

வேறொரு  ‘சங்கதி’ குறித்து நம்மிடம் பேசிய அந்த விருதுநகர் மாவட்ட நிர்வாகி 

“மேலோட்டமாகப் பார்த்தால் இவையிரண்டும் சாதாரண உரையாடல்தான். அந்த அம்மாவும் மகளும் கண்ணன் மீது ஏன் புகார் அளிக்கவில்லை தெரியுமா? அவர்களுக்குத் தேவைகள் அதிகமாக இருக்கின்றன. தேர்தல் பணிக்காக விருதுநகர் மாவட்டத்திலிருந்து நாங்குநேரி தொகுதிக்குச் சென்ற அதிமுகவினர் பலருக்கும் அங்கு நடந்த இன்னொரு விவகாரம் நன்றாகவே தெரியும். விருதுநகரிலிருந்து சென்ற ஆளும்கட்சிக்காரர் ஒருவர் நாங்குநேரியில் கட்சியினர் அனைவரும் தங்கிய இடத்தில் தங்கவில்லை. அந்தம்மாவின் மகளோடு நெருக்கமாகி வெளியே ஒரு இடத்தில் 10 நாட்களுக்கு மேல் தங்கினார். இதை கட்சியினர் யாரும் பெரிதுபடுத்தவில்லை. ஆனால்,  அந்தப் பெண்ணோடு கண்ணன் செல்போனில் சாட் பண்ணியதையும், வெறுமனே பேசியதையும்  பூதாகரமாக்கிவிட்டார்கள். இதற்குக் காரணம் லோக்கல் பாலிடிக்ஸ்தான்.” என்றார்.    
 

‘அதென்ன அரசியல்?’ என்று கேட்டபோது நிலவரத்தைக் கூறினார் அந்த அதிமுக பிரமுகர். 

“விருதுநகர் டவுணில் நாடார் சமுதாயத்தினரே மெஜாரிட்டியாக உள்ளனர். 2011 வரையிலும் அந்த சமுதாயத்தைச் சேர்ந்தவர்களே நகரச் செயலாளராக இருந்தார்கள். அதன்பிறகு,  டி.ஆர்.பாண்டி, வாடியான் பாலன் போன்றவர்கள் கட்சியிலிருந்தே ஒதுக்கப்பட்டனர். குடைச்சலைத் தாங்கமுடியாமல்,  நகரச் செயலாளராக இருந்த ஆண்டவர் திமுகவிற்கு சென்றுவிட்டார். சிம்னி அசோகன் என்ற நகரச் செயலாளர் மீது ஏதேதோ கூறி கட்சியை விட்டே நீக்கினார்கள். அதிமுக எதிர்க்கட்சியாக இருக்கும்போது, நாடார் சமுதாயத்தினர் நகரச் செயலாளர் ஆவதும், ஆளும்கட்சி ஆனதும் கழற்றிவிடப்படுவதும், அசிங்கப்படுத்தி ஒதுங்கச் செய்வதும்தான் நடக்கிறது. 
 

தற்போது விருதுநகர் அதிமுக நகரச் செயலாளராக இருக்கிறார் முகமது நயினார். இவரது வார்டில் கடந்த பாராளுமன்ற தேர்தலின்போது பதிவான 1200 வாக்குகளில் அதிமுக பெற்ற வாக்குகள் 76 மட்டுமே. அதனால், பொறுப்பு பறிபோகும் நிலைக்கு ஆளானார். ஆனாலும், மா.செ.வும் அமைச்சருமான கே.டி.ராஜேந்திரபாலாஜியிடம்  ‘டிசம்பரில் என் மகனுடைய திருமணத்தை பிரம்மாண்டமாக நடத்தவிருக்கிறேன். அதுவரையிலும் நானே பொறுப்பில் இருக்கிறேன்.’ என்று கேட்க, அவரும் சம்மதித்திருக்கிறார். இந்த நிலையில்தான்,  நாடார் சமுதாயத்தைச் சேர்ந்த கண்ணனுக்கு நகர துணைச் செயலாளர் பொறுப்பு தருவதாக பேச்சு எழுந்தது. கண்ணன் பொறுப்புக்கு வருவது தொழில் பார்ட்னர்களான நகரத்துக்கும் ஒன்றியத்துக்கும் அறவே பிடிக்கவில்லை. ஏனென்றால், ஊடகத்துறையில் மாவட்ட அளவில் பணியாற்றியதால், விருதுநகர் மாவட்டத்தில் கண்ணனைத் தெரியாத கட்சிக்காரர்கள் இருக்க மாட்டார்கள்.  அதனால்தான், நாங்குநேரி விவகாரத்தைக் கையில் எடுத்து கண்ணனின் பெயரை  வெகுவாக ‘டேமேஜ்’ பண்ணிவிட்டார்கள். புதிதாக ஒருவர் கட்சியில் பெரிய பொறுப்புக்கு வந்துவிடக்கூடாது என்று காய் நகர்த்தியிருக்கிறார்கள். இன்னொரு கொடுமை என்ன தெரியுமா? அந்த தோழமைக் கட்சி பெண்ணின் போட்டோவை ஆளாளுக்கு தங்கள் மொபைலில் வைத்திருக்கிறார்கள்.” என்றார்.  

NELLAI DISTRICT NANGUNERI ADMK PARTY


 

நாம் விருதுநகர் அதிமுக நகரச் செயலாளர் முகமது நயினாரிடம் பேசினோம். “அந்த நாங்குநேரி விவகாரம் எனக்கு இப்போதுதான் தெரியும். சாதி சிந்தனை என்பது என்னிடம் எப்போதும் கிடையாது. கண்ணனுக்கு நகரப் பொறுப்பு தரவேண்டும் என்று சிபாரிசு செய்ததே நான்தான். நான் சரியாக கட்சி வேலை பார்க்கவில்லையென்றால் கட்சித் தலைமை நிச்சயம் நடவடிக்கை எடுக்கும். என் மகனுடைய திருமணம் என்பது பெர்சனல். அதை அரசியலோடு இணைத்துப் பேசுவது சரியல்ல.” என்றார். 
 

மொத்தத்தில், விருதுநகர் மாவட்டத்திலிருந்து திருநெல்வேலி மாவட்டத்துக்கு தேர்தல் பணிக்காகச் சென்ற ஆளும்கட்சியினரில் ஒருசிலரும், தோழமைக் கட்சியினரில் ஓரிருவரும்,  ‘கூடுதல்’ வேலை பார்த்ததுதான் வினையாகி, சந்தி சிரிக்க வைத்திருக்கிறது.  



 

சார்ந்த செய்திகள்

Next Story

ட்ரோல் செய்ய வந்த இடத்தில் ட்ரோலில் சிக்கிய அ.தி.மு.க. சரவணன்

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
ADMK Saravanan got trolled where he came to troll

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.

அதிமுக சார்பாக மதுரையில் டாக்டர் சரவணன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு பரப்புரைகள் தொடங்கப்பட்டுள்ளது. முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு அவரை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்ட நிலையில், பிரேமலதா விஜயகாந்த் அதிமுக வேட்பாளர் சரவணனை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டார்.

இந்நிலையில், மதுரையில் நடைபெற்ற பரப்புரை கூட்டத்தில் பேசிய வேட்பாளர் சரவணன், “இங்கிருந்த பாராளுமன்ற உறுப்பினரை சு.வெ என்று சொல்வார்கள். சும்மாவே இருந்தார்; இருக்கப் போறாரு என்று தெரிந்ததால் அவருக்கு அப்படி பெயர் வந்ததா என தெரியல. அவர் ஒரு ட்விட்டர் அரசியல்வாதி. ஆன்லைனில்  மட்டும் தான் இருப்பார். அவருடைய செயல் ஆன்லைனில் மட்டும் தான் இருக்கும். மக்களை சந்தித்ததே கிடையாது. அவர் கதை எழுதிக் கொண்டிருந்தார். இப்பொழுது கதை விட்டுக் கொண்டிருக்கிறார். கடைசியாக மூன்று மாதம் வந்து ஒன்று இரண்டு திட்டங்களை செய்து கொண்டிருக்கிறார். அவர் இவ்வளவு திட்டங்களை சொல்லி இருக்கிறாரே அந்த திட்டங்கள் எல்லாம் நடந்து இருக்கா என்று பார்ப்பதற்காக பைனாகுலரோடு நான் வந்திருக்கிறேன். எங்காவது கடந்த பாராளுமன்ற உறுப்பினர் வெங்கடேசன் செஞ்ச திட்டம் கண்ணுல படுதா என்று பார்க்கிறேன்'' என கூறியவாறே கையில் இருந்த பைனாகுலரில் பார்த்தார். ஆனால் இறுதி வரை சரவணன் பைனாகுலரில் முன்பக்கம் இருந்த லென்ஸ் கவரை திறக்காமல் பார்த்துக் கொண்டிருந்தார். இந்த காட்சிகள் சமூக வலைத்தளங்களில் ட்ரோல் செய்யப்பட்டு வருகிறது.

Next Story

“திருச்சி அதிமுக வேட்பாளர் வெற்றிக்கு ஒற்றுமையுடன் பாடுபட வேண்டும்” - தங்கமணி

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
 Trichy AIADMK candidate must work together for victory says Thangamani

திருச்சி மாவட்டம் முசிறி தா.பேட்டை ரோட்டில் அமைந்துள்ள தனியார் மண்டபத்தில் பெரம்பலூர் பாராளுமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் சந்திரமோகன் அறிமுகம் மற்றும் செயல் வீரர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு திருச்சி புறநகர் மாவட்டச் செயலாளர் பரஞ்சோதி தலைமை வகித்தார். முன்னாள் எம்எல்ஏக்கள் செல்வராசு, மல்லிகா, இந்திரா காந்தி, பரமேஸ்வரி, முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னாள் அமைச்சர்கள் மோகன், எம்.ஆர். விஜயபாஸ்கர், நாமக்கல் மாவட்டச் செயலாளரும் பெரம்பலூர் பாராளுமன்றத் தொகுதி பொறுப்பாளருமான தங்கமணி ஆகியோர் அதிமுக வேட்பாளரை ஆதரித்துப் பேசினார்.

அப்போது முன்னாள் அமைச்சர் தங்கமணி பேசியதாவது: பண பலமா? அதிகார பலமா? என்று நிரூபிக்கின்ற இந்த தேர்தலை பொறுத்தவரை நாம் வீடு வீடாகச் சென்று திண்ணைப் பிரச்சாரம் மேற்கொண்டு வாக்குகள் சேகரிக்க வேண்டும் எனவும்,  பூத்துக்கு 500 வாக்குகள் பெற்றால் கூட நாம் வெற்றி பெற முடியும். 15 நாள் உழைப்பு அடுத்த ஐந்து வருடத்திற்கான மக்கள் பலனை தரும். திருச்சி மாவட்டம் அதிமுகவின் கோட்டை என்பதை நாம் மீண்டும் நிரூபிக்க வேண்டும். ஒவ்வொரு வீட்டிற்கும் ஐந்து முறை சென்று கழக தொண்டர்கள் வாக்குகள் சேகரிக்க வேண்டும். இறந்து போனவர்கள், வெளிநாட்டில் இருப்பவர்கள் வாக்குகளை கண்டறிந்து கள்ள வாக்குகளை நாம் தடுக்க வேண்டும். அதிமுக ஆட்சியில் விலைவாசி கட்டுக்குள் இருந்தது. திமுக ஆட்சியில் விலைவாசி மற்றும் அனைத்து கட்டணங்களும் உயர்ந்துள்ளது.

நகை கடன் அனைவருக்கும் தள்ளுபடி என்று கூறிவிட்டு 45 லட்சம் பேரில் 12 லட்சம் பேருக்கு மட்டுமே தள்ளுபடி செய்துள்ளனர். 10 ஆண்டுகளில் தாலிக்கு தங்கம், லேப்டாப், இலவச சைக்கிள், மகளிர் திருமண உதவித் திட்டம் உள்ளிட்ட பல்வேறு மக்கள் திட்டங்களை நாம் நிறைவேற்றியுள்ளோம். 2026 ஆம் ஆண்டு எடப்பாடி பழனிசாமி தான் மீண்டும் முதலமைச்சர் என உறுதிமொழி ஏற்போம். உள்ளாட்சி தேர்தலுக்கும், வரும் 2026 ஆம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலுக்கும் இந்த நாடாளுமன்றத் தேர்தல் அடித்தளமாக அமையும். பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் சந்திரமோகனுக்கு இரட்டை இலை சின்னத்தில் பெருவாரியான வாக்குகள் பெற்று வெற்றி பெற செய்ய வேண்டுமாய் கழக தொண்டர்கள் அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன் என்று பேசினார்.

வேட்பாளர் சந்திரமோகனை அறிமுகப்படுத்தி விஜயபாஸ்கர் பேசியதாவது: தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றியவர் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா. ஏழைகளுக்கு 20 கிலோ அரிசி, தாலிக்கு தங்கம், மாணவர்களுக்கு லேப்டாப் கொடுத்தார். ஆனால் இந்த திமுக ஆட்சியில் அந்த திட்டத்தை எல்லாம் நீக்கி விட்டனர். நீட் ஒழிக்கிறேன் என்று சொல்லி இப்போது மத்தியில் காங்கிரஸ் ஆட்சி வந்த உடன் நீக்குகிறோம் என்று சொல்லி பொய் பிரச்சாரம் செய்து வாக்கு கேட்டு செல்வார்கள். அந்த பொய் பிரச்சாரத்தை முறியடிக்கும் வகையில் நமது திண்ணை பிரச்சாரம் இருக்க வேண்டும் என செயல் வீரர்களுக்கு ஆலோசனைகள் வழங்கினார்.

இதனை அடுத்து வேட்பாளர் சந்திரமோகன் பேசியதாவது:  என்னை எந்த நேரத்திலும் பொதுமக்கள் தொடர்பு கொள்ளலாம். நான் வெற்றி பெற்றவுடன்  இப்பகுதிகளுக்குரிய தேவைகளை கவனத்தில் கொண்டு நிறைவேற்ற பாடுபடுவேன் எனப் பேசினார்.

முன்னதாக முன்னாள் எம்எல்ஏ செல்வராஜ் அனைவரையும் வரவேற்றுப் பேசினார். கூட்டத்தில் தேமுதிக மாவட்டச் செயலாளர் குமார், புதிய தமிழகம் கட்சி மாவட்டச் செயலாளர் சின்னையன் , வளரும் தமிழகம் கட்சி மாவட்ட செயலாளர் தமிழன் துரைராஜ், எஸ்டிபிஐ கட்சி மாவட்டச் செயலாளர் அசாருதீன் உட்பட கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர். நிறைவில் நகரச் செயலாளர் எம்.கே. சுப்ரமணியன் நன்றி கூறினார்.