Skip to main content

தரையதிர வந்தார் நடராஜர்... பக்தர்கள் ஆனந்தக் கண்ணீர்.

Published on 24/09/2019 | Edited on 24/09/2019

நெல்லை தாமிரபரணிக் கரையோரம் உள்ள கல்லிடைக்குறிச்சியின் பக்கமுள்ள அறம் வளர்த்த நாயகி சமேத குலசேகரமுடையார் ஆலயம், சுமார் 700 ஆண்டுகளுக்கு முன்பாக குலசேகரப்பாண்டியன் மன்னரால் கட்டப்பட்டதாக வரலாற்று தகவல்கள் கூறுகின்றனர். தங்கத்தாலும், வைரத்தாலும் இளைத்த சிலைகளை, அந்த மன்னர் அங்கே பிரதிஷ்டை செய்தாராம்.

குறிப்பாக இரண்டரை அடி உயரமுள்ள நடராஜர் சிலை ஐம்பொன்னில் வடிவமைக்கப்பட்டது. அதன் தற்போதைய மதிப்பு 30 கோடிகளுக்கும் மேல் என்று அதிகாரிகள் கூறுகின்றனர். அந்த நடராஜர் 1982- ஆம் ஆண்டு ஏப்ரலில் மர்ம நபர்களால் கொள்ளையடிக்கப்பட்டது. அப்போதைய டிரஸ்டி பாபநாச முதலியார் புகார் செய்தார். இந்நிலையில் விசாரணை நடத்திய கல்லிடைக்குறிச்சிப் போலீசாரின் புலன் விசாரணையில் முன்னேற்றமின்றி இருந்தது. 

NELLAI DISTRICT KALLIDAIKURICHI NATARAJAR STATUE IG PON MANICKAVEL


அதனை தற்போது மறுபடியும் விசாரணைக்கு எடுத்த ஐ.ஜி.பொன்மாணிக்கவேல் தலைமையிலான டீம், சிலை ஆஸ்திரேலியாவுக்கு கடத்தப்பட்டு அங்குள்ள அடிலாய்டு அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டிருப்பது தெரிய வர ராஜ்ஜிய உறவுகள் மூலம் அதன் அதிகாரிகளான ஜேன்ராபின்சன் மற்றும் ஜேம்ஸ் பென்னட் ஆகியோரிடமிருந்து நடராஜரைப் பெற்றுத் திரும்பிய பொன்மாணிக்கவேல், அதனை முறைப்படி கும்பகோணம் சிலைத் தடுப்பு நீதிமன்றத்தில் ஆஐர்படுத்தினார். பின்னர் இன்று பொன்மாணிக்கவேல் தலைமையிலான போலீசார் காலை 08.00 மணியளவில் கல்லிடைக்குறிச்சி கொண்டு வந்தனர். இந்து அறநிலையத்துறை நெல்லை மாவட்ட உதவி ஆணையர் சங்கர், கோவிலின் செயல் அலுவலர் வெங்கடேஸ்வரன் அர்ச்சகர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் வசம் ஒப்படைக்கப்பட்ட நடராஜா தரையதிர கல்லிடைக்குறிச்சி நகர் வந்தார்.
 

ஆலய பட்டார்களின் பூஜைகள், புனஷ்கார தீப ஆராதனைக்குப் பின்பு, அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் ஊர்வலமாக வந்த நடராஜரை ஆண் பெண் பக்தர்கள் ஊரே திரண்டு வந்து ஆனந்தக் கண்ணீரோடு நடராஜரைத் தரிசித்தனர். மேள தாளம் முழங்க காலை 10.15 மணிக்கு கம்பீராக ஆலயப் பிரவேசம் செய்தார் நடராஜர். பின்னர் ஆகம விதிகளின்படி பிரதிஷ்டை செய்யப்படுவார் என்று தெரிகறது.

NELLAI DISTRICT KALLIDAIKURICHI NATARAJAR STATUE IG PON MANICKAVEL

சிலையை மீட்டு வந்த பொன்மாணிக்கவேல் நிஜ ஹரோவாகத் தெரிந்தார் நகர மக்களுக்கு. அவரைப் பாராட்டிய பொது மக்கள் அவரைத் தெருவெங்கிலும் அழைத்துச் சென்று மரியாதை செலுத்தி, செல்ஃபி எடுத்துக் கொண்டனர்.
 

பின்பு செய்தியாளர்களை சந்தித்த ஐ.ஜி.பொன் மாணிக்கவேல், நடராஜர்  சிலை வைக்கப்பட்டுள்ள கோவிலுக்கு பாதுகாப்பு கூடுதலாக அளிக்கப்படும். சிலை ஒப்படைப்பது எங்களுடைய பொறுப்பு. ஆன்மீகவாதிகள் சாமி நன்றாக கும்பிட்டதால் சிலை கிடைத்தது. மற்ற மூன்று சிலைகள் கண்டுபிடிப்பது என்னுடைய பொறுப்பு விரைவில் கண்டு பிடிப்பேன். கைதானவர்கள் குறித்து இப்போதைக்கு கூற முடியாது. கல்லிடைக்குறிச்சி கோவில் குறித்த கேள்வி மட்டும் என்னிடம் கேள்வி எழுப்புங்கள். நடராஜர் சிலை பாதுகாப்பு குறித்து குழு அமைக்கப்பட்டுள்ளது அவர்களே முழு பொறுப்பும். நடராஜர் சிலையை பாதுகாக்க பெட்டகம் அமைக்கும் வரை கூடுதல் பாதுகாப்பு அளிக்கப்படும். மீட்கப்பட்ட நடராஜர் சிலை 28 கோடி முதல் 30 கோடி வரை மதிப்புடையது. கோவில் சிலைகளை மீட்பதில் இடையூறு ஏற்படுத்தினால் அவர்கள் ஜெயிலுக்குள் செல்வார்கள். இது வரை யாரும் இடையூறும் இல்லை. சட்டப்படி ஜெயிலுக்குள் தள்ளுவேன் என்று ஆவேசத்துடன் கூறினார் பொன்மாணிக்கவேல்.



 

சார்ந்த செய்திகள்

Next Story

பிரான்ஸ் வீரர்களுக்கு தற்காப்புக்கலைகளை கற்றுக்கொடுக்கும் தமிழக வீரர்கள்

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Tamil Nadu players teaching martial arts to French players

மாமல்லபுரத்தை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் சர்வதேச மஞ்சூரியா குங்ஃபூ தற்காப்புக் கலையின் சார்பில் இந்தோ பிரான்ஸ் தற்காப்புக் கலை சிறப்பு பயிற்சி முகாம் பிரான்ஸில் நடைபெற்று வருகிறது.

பிரான்ஸ் நாட்டின் ஃபெவ்ரி நகரில் மாஸ்டர் ஷி ஷிஃபூ மேத்யூ  தலைமையில் ஏப்ரல் 22 துவங்கி 28 வரை 7 நாட்கள் நடைபெற்று வரும் இந்தச் சிறப்பு பயிற்சி முகாமில் கல்பாக்கம் அணுபுரத்தைச் சேர்ந்த மாஸ்டர் சந்தோஷ், திண்டுக்கல் மாவட்டம் பழனி நாகூரைச் சேர்ந்த யோகா மாஸ்டர் பிரகாஷ் ஆகிய இருவரும், பிரான்ஸ் நாட்டு வீரர்களுக்கு  குங்ஃபூ தற்காப்புக் கலை, தெக்கன் களரி சிலம்பக்கலை, பதஞ்சலி ஹத யோகா, ஆகியவற்றை கற்பித்து வருகின்றார்கள். நேற்று யோகா குறித்து விளக்கம் அளித்து அதை செய்தும் காண்பித்துள்ளார்கள்.

Next Story

4 கோடி ரூபாய் சிக்கிய விவகாரம்; ஹோட்டல் ஊழியர்கள் காவல் நிலையத்தில் ஆஜர்

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
 4 crore rupees issue; Hotel staff present at police station

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19.04.2024 அன்று தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வாக்குப்பதிவு முடிந்தது. வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

முன்னதாக தமிழகத்தில் தேர்தல் பரப்புரைகள் தீவிரமாக சென்று கொண்டிருந்த நேரத்தில் சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து திருநெல்வேலிக்கு செல்லும் ரயிலில் தாம்பரம் ரயில் நிலையத்தில் கடந்த 06.04.2024 அன்று இரவு உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்ல முயன்ற ரூ.4 கோடி மதிப்பிலான ரொக்கம் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது. 6 பைகளில் கட்டுக்கட்டாக இருந்த 500 ரூபாய் நோட்டுகளைப் பறக்கும் படையினர் அதிரடியாகப் பறிமுதல் செய்தனர்.

இதையடுத்து இந்தப் பணத்தை எடுத்து வந்த புரசைவாக்கம் தனியார் விடுதி மேலாளரும் பாஜக உறுப்பினருமான சதீஷ், அவரின் சகோதரர் நவீன் மற்றும் லாரி ஓட்டுநர் பெருமாள் ஆகிய 3 பேரும் கைது செய்யப்பட்டனர். திருநெல்வேலி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு, இந்தப் பணத்தைக் கொண்டு செல்ல முயன்றதாக மூவரும் பகீர் வாக்குமூலம் கொடுத்ததாகத் தகவல் வெளியாகி இருந்தது. இச்சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

சம்பவத்தில் ரொக்கமாக நான்கு கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பாக நயினார் நாகேந்திரன் ஆஜராகி பதிலளிக்கும்படி காவல்துறை தரப்பில் சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. ஆனால் நயினார் நாகேந்திரன் விசாரணைக்கு ஆஜராகாத நிலையில் விசாரணைக்கு ஆஜராக பத்து நாட்கள் அவகாசம் வேண்டும் என நயினார் நாகேந்திரன் தரப்பில் காவல்துறைக்கு பதில் கடிதம் கொடுக்கப்பட்டுள்ளது.

நெல்லையில் நான்கு கோடி ரூபாய் பணம் கைப்பற்றப்பட்டது தொடர்பாக நயினார் நாகேந்திரனின் ஹோட்டலில் பணியாற்றிய  ஊழியர்கள் மற்றும் உறவினர்களுக்கு காவல்துறை சார்பில் நேரில் ஆஜராக சம்மன் அனுப்பட்டிருந்தது. தாம்பரம் காவல் நிலையத்தில் ஆஜராகி இது தொடர்பாக விளக்கம் அளிக்க உத்தரவிடப்பட்டிருந்தது. இந்நிலையில் நயினார் நாகேந்திரனின் ஹோட்டலில் பணியாற்றிய இரண்டு ஊழியர்கள் தற்போது தாம்பரம் காவல் நிலையத்தில் விசாரணைக்கு ஆஜராகி உள்ளனர். ராஜேந்திரனின் உறவினர் ஆஜராகவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் நயினார் நாகேந்திரனின் உறவினர் முருகன் என்பவரிடம் இன்று மாலை விசாரணை நடத்த தாம்பரம் போலீசார் முடிவு செய்திருப்பதாகவும்  தகவல்கள் வெளியாகி உள்ளது.