Skip to main content

பேட்டை தொழிற்பேட்டை அவலங்கள்! 

Published on 19/06/2021 | Edited on 19/06/2021

 

    
 

nellai district industry peoples tn govt


    
திருநெல்வேலி பேட்டை உருவாக்கப்பட்டதற்கே தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சி முன்னேற வேண்டும் என்பதற்காகத்தான். டான்சி என்ற பெயரே தமிழ்நாடு சிறுதொழில் வளர்ச்சிக் கழகம் என்பதாகும். சிறுதொழில் வளர்ச்சி கழகம், சிறு தொழில் வளர்ச்சி நிறுவனம், தொழில் முதலீட்டு மையம், சிறுதொழில் சேவை நிறுவனம், மாநில தொழில் மேம்பாட்டு கழகம், சிறு தொழில் வர்த்தக கூட்டமைப்பு, தொழில் மற்றும் தொழில்நுட்ப ஆலோசனை கழகம், சிறு, மற்றும் குறு தொழில் வளர்ச்சிக் கழகம் என்று பல பெயரிட்டு குறு மற்றும் சிறு தொழில்களை ஊக்குவிப்பதாக சொன்னார்கள். 

 

நாட்டின் தொழில் வளர்ச்சி பெருக வேண்டும் என்பதற்காக 1958- ஆம் ஆண்டு அன்றைய சென்னை ராஜ்யத்தின் பல்வேறு பகுதிகளில் தொழிற்பேட்டைகள் அமைக்கப்பட்டன. இவ்வாறு அமைக்கப்பட்ட தொழிற்பேட்டைகளில் மிக முக்கியமான இடத்தை பெற்றிருந்தது திருநெல்வேலி பேட்டை பகுதியிலுள்ள தொழிற்பேட்டை.

 

64 சிறு தொழில்களை மேம்பாடு செய்வதற்காக 668. 61 கோடி ரூபாயில் தமிழ்நாடு சிறுதொழில் வளர்ச்சிக் கழகம் (TANSI) உருவாக்கப்பட்டது. இக்கழகத்தின் நோக்கம் பயிற்சி கொடுப்பது, பொருள்களை செயல்முறைப் படுத்துவது, 'அரசு ' என்று முத்திரை இட்டு விற்பனை செய்வது.

 

வேளாண்மை உற்பத்தி கருவிகளை உற்பத்தி செய்து விற்பனை செய்வதற்கான தொழிற்சாலைகளும் இப்பேட்டையில் உருவாக்கப்பட்டன. தொழில் மற்றும் வர்த்தகத் துறையின் கீழ் தொழில் வளர்ச்சியை உருவாக்குவதற்காக ஏற்படுத்தப்பட்ட பேட்டை இன்றைக்கு அவலத்திற்கு உள்ளாகி இருக்கின்றது.

 

சிறு குறு தொழில்களை ஊக்குவிக்கிறோம். அதற்காக நாட்டின் பல்வேறு நிறுவனங்களை உருவாக்கி இருக்கிறோம் என்பவர்கள் திருநெல்வேலி பேட்டையின் அவலத்தை நேரில் பார்க்க வேண்டும். படித்தோ, படிக்காமலோ வேலை செய்வதற்கு தயார் என்று சொல்லி பல்லாயிரக்கணக்கான இளைஞர்கள் இன்றைக்கு இருக்கின்றார்கள். இந்தியாவிலேயே மிகப் பிரதானமான வளர்ச்சிக்கு காரணியாக இருப்பவை சிறு குறு நடுத்தரத் தொழில்கள்.

 

தேசிய உற்பத்தியில் 8 சதவீதமும் மாநில உற்பத்தியில் 45 சதவீதமும் இத்தகைய தொழில்களே நிரப்புகின்றன. தமிழ்நாட்டில் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு தரக்கூடியது சிறு குறு தொழில்கள்.

 

தென் மாவட்டங்களில் ஜாதி கலவரங்கள் உருவாக காரணம் வேலையின்மையை போக்காததே என்று ரத்னவேல் பாண்டியன் விசாரணை கமிஷன் சொல்லி தொழில் வளர்ச்சிக்கு திட்டமிட வேண்டும் என்று வழிகாட்டியது.

 

தொழில் வளர்ச்சி ஏற்படவில்லை என்பதை விட இருக்கும் தொழில்களும் மூடப்பட்டு இருப்பது வேதனைக்குரிய அடித்தளமாக இருக்கின்றது.

 

இங்கு உள்ள அலுவலகம் திறக்கப்படுவது அபூர்வமான ஒரு காட்சியாகும். வேளாண்மை உற்பத்திக் கருவிகளை தயாரிக்கும் ஆலையும் மூடப்பட்டிருக்கிறது. மாநில அரசுக்குச் சொந்தமான டான்சி நிரந்தரமாக மூடப்பட்டு இருக்கின்றது.

 

புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு மூடியிருக்கும் தென்னிந்திய கூட்டுறவு நூற்பாலையை மீண்டும் இயக்குவதுடன், மூடப்பட்டிருக்கும் டான்சி மற்றும் வேளாண்மை இயந்திர உற்பத்தி ஆலைகளை இயக்க வேண்டும். அல்லது இளம் தொழில் முனைவோரிடம் இவற்றை கொடுத்து இயக்குவதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும்.

 

இவைகளை இயக்குவதன் மூலமாக 10 ஆயிரம் இளைஞர்கள் வேலைவாய்ப்பைப் பெறக்கூடிய நிலைமை ஏற்படும். தமிழக அரசு இதனை நிறைவேற்ற வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள் பொதுமக்கள்.  

 

- காசி விஸ்வநாதன்

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

மயிலாடுதுறையில் சிறுத்தை; அம்பாசமுத்திரத்தில் கரடி; வைரலாகும் வீடியோ காட்சிகள்

Published on 11/04/2024 | Edited on 11/04/2024
Leopard in Mayiladuthurai; Bear in Ambasamudra; Videos go viral

கோடை காலம் தொடங்கிவிட்ட நிலையில் வனவிலங்குகள் கிராமங்களை நோக்கி படையெடுக்கும் நிகழ்வுகள் அரங்கேறி வருகிறது. மயிலாடுதுறையில் அண்மையில் தென்பட்ட சிறுத்தையை பிடிக்கும் பணியானது ஏழு நாட்களுக்கும் மேலாக இன்று வரை தொடர்ந்து வருகிறது. இந்த நிலையில், அம்பாசமுத்திரத்தில் வனப்பகுதியில் இருந்து ஊருக்குள் புகுந்த கரடி பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்த, நபர் ஒருவரை கரடி துரத்துவதும், அந்த நபர் தலைதெறிக்க ஓடும் சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரத்தை ஒட்டியுள்ள மேற்குத் தொடர்ச்சி மலையில் புலி, சிறுத்தை, கரடி, யானை, காட்டெருமை உள்ளிட்ட வனவிலங்குகள் இருக்கும் நிலையில், தற்போது கோடை காலம் தொடங்கியுள்ளதால் அவ்வப்போது வனப்பகுதியை விட்டு மலை ஓரத்தில் உள்ள கிராமங்களில் விலங்குகள் தஞ்சம் புகுவது வாடிக்கையாகி வருகிறது.

Leopard in Mayiladuthurai; Bear in Ambasamudra; Videos go viral

இந்த நிலையில் இன்று அதிகாலை கல்லிடைக்குறிச்சி பகுதிக்கு கரடி ஒன்று வந்துள்ளது. அதிகாலை வீட்டை விட்டு வெளியே வந்த ஒருவர், கரடியைப் பார்த்தவுடன் வேட்டியை மடித்துக் கட்டிக்கொண்டு மின்னல் வேகத்தில் அங்கிருந்து தப்பி ஓடினார். இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது. இது குறித்து தகவலறிந்து அங்கு வந்த அம்பாசமுத்திரம் வனச்சரகர் நித்யா தலைமையிலான வனத்துறையினர் ஊருக்குள் புகுந்த கரடியைத் தேடி வருகின்றனர். பொதுமக்களுக்கு எச்சரிக்கையும் கொடுக்கப்பட்டு வருகிறது.

Next Story

அமைச்சரின் ஆலோசனைக் கூட்டத்தில் தள்ளுமுள்ளு; திமுக நிர்வாகிகள் வாக்குவாதம்

Published on 06/04/2024 | Edited on 06/04/2024
Pushing in Minister's Advisory Meeting; DMK officials argue

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாக தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

இந்தியா கூட்டணி சார்பில் அக்கூட்டணியில் உள்ள திமுக தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில் நெல்லை மாவட்டம் திசையன்விளை பகுதியில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் முன்னிலையில் தேர்தல் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. நெல்லையில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் ராபர்ட் புரூஸ் போட்டியிடும் நிலையில் திசையன்விளை நகரப் பகுதிக்கு தேர்தல் பொறுப்பாளர்களை அறிவிப்பதில் திமுகவின் ஒன்றிய செயலாளர் ஜெகதீசனுக்கும், நகரச் செயலாளர் ஜான் கென்னடிக்கும் இடையே மேற்பட்ட வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் இது கோஷ்டி பூசலாக மாறியது.

இதில் இரு தரப்பினரும் மாறி மாறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இறுதியாக தள்ளுமுள்ளு ஏற்பட்டது. காங்கிரஸ் கட்சி தொண்டர்களும் தங்களுக்கு கூட்டணியில் மரியாதை இல்லை எனக் கூறி  ஆதரவுகளுடன் வெளிநடப்பு செய்தனர். இதனால் இந்த பகுதியில் கூச்சல் குழப்பம் ஏற்பட்டு பரபரப்பானது.