Advertisment

நெல்லையில் தொல்லை தரும் கரோனா.... தொற்று எண்ணிக்கை உயர்வு!

mn,

உலகம் முழுவதும் கரோனா பாதிப்பு உச்சத்தில் இருந்து வருகிறது. இதுவரை ஒரு கோடிக்கும் அதிகமானவர்களை இந்த நோய்த் தாக்கியுள்ளது. 5 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் இந்த நோயினால் உயிரிழந்துள்ளனர்.

Advertisment

உலகின் பல நாடுகளுக்கு கரோனா வைரஸ் பரவியுள்ள நிலையில், இதனைத் தங்களது நாட்டில் பரவாமல் தடுக்க உலக நாடுகள் பலவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. பல நாடுகள் தங்கள் நாடுகளில் ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தியுள்ளன. உலகம் முழுவதும் இதுவரை 1,30,34,955 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் கரோனா பரவல் அதிகரித்து காணப்படுகின்றது. மராட்டியத்திற்கு அடுத்ததாக தமிழகத்தில் கரோனா தொற்று அதிக அளவு இருந்து வருகிறது.தமிழகத்தில் இதுவரை கரோனா உறுதி செய்யப்பட்டோர் எண்ணிக்கை ஒரு லட்சத்து 38 ஆயிரத்து 470 ஆக உள்ளது. குறிப்பாக தென் தமிழகத்தில் கரோனா பாதிப்பு மின்னல் வேகத்தில் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், நெல்லை மாவட்டத்தில் மேலும் 53 பேருக்கு கரோனா தொற்று உறுதியான நிலையில், பாதிப்பு எண்ணிக்கை 1,811 ஆக அதிகரித்துள்ளது.

Advertisment

corona virus
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe