Skip to main content

சரியான அளவில் சுடிதார் தராத கடைக்கு அபராதம் விதித்த நீதிமன்றம்!

Published on 03/12/2019 | Edited on 03/12/2019

நெல்லை மாவட்டத்தில் சிறுமி ஒருவருக்கு சரியான அளவில் சுடிதார் தராத துணிக்கடைக்கு அபராதம் விதித்து நுகர்வோர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 
 

நெல்லை மாவட்டத்தை சேர்ந்த சிறுமி மகாலட்சுமி, கடந்த 2017- ஆம் ஆண்டு தீபாவளியின் போது அபிராமி ரெடிமேட்ஸ் கடையில் அனார்கலி சுடிதார் வாங்கினார். பேண்ட் சரியான அளவில் இல்லாமல் இருந்ததால், சிறுமி மகாலட்சுமி தீபாவளி தினத்தன்று புதிய ஆடை (சுடிதார்) அணிய முடியாத நிலை ஏற்பட்டதாக கூறப்படுகிறது. 

 consumer court order

இந்நிலையில் சிறுமியின் தாயார் ரெடிமேட்ஸ் கடையின் மீது நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதனையடுத்து இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, வாடிக்கையாளரான சிறுமிக்கு ரூபாய் 20,000 இழப்பீடு வழங்கவும், அத்துடன் சுடிதாரின் விலையான ஆயிரம் ரூபாயையும் திருப்பிக் கொடுக்க ரெடிமேட்ஸ் கடை நிர்வாகத்துக்கு நெல்லை மாவட்ட நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் நுகர்வோருக்கு சரியான அளவில் சுடிதார் கொடுக்காதது முறையற்ற வணிகமாகும் என்று நீதிபதி கருத்து தெரிவித்துள்ளார். 


 

சார்ந்த செய்திகள்

Next Story

விமான ஓடுதளத்தில் உணவருந்திய பயணிகள்; இண்டிகோ நிறுவனத்துக்கு அபராதம்

Published on 18/01/2024 | Edited on 18/01/2024
Penalty for Indigo for Passengers eating on the runway

டெல்லியில் இருந்து கோவாவிற்கு சுமார் 18 மணி நேரம் தாமதமாக இண்டிகோ விமானம் ஒன்று கடந்த 16ஆம் தேதி புறப்பட்டுச் சென்றது. தொடர்ந்து விமானம் பனிமூட்டம் காரணமாக நடுவழியிலேயே திருப்பி விடப்பட்டது. மும்பையில் தரை இறங்கியதால் பயணிகள் அவதிக்குள்ளாகினர்.விமானத்திலிருந்து இறங்கிய பயணிகள் விமானத்தின் அருகிலேயே அமர்ந்து சாப்பிட்டதோடு, அங்கேயே ரெஸ்ட் எடுத்தனர். இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி இருந்தது.

இதுகுறித்து ஒன்றிய விமான போக்குவரத்துத்துறை அமைச்சர் ஜோதிர் ஆதித்ய சிந்தியா நள்ளிரவில் மூத்த அதிகாரிகளுடன் அவசர ஆலோசனை மேற்கொண்டார். இது தொடர்பாக இண்டிகோ விமான நிறுவனம் மற்றும் மும்பை விமான நிலையம் ஆகியவை உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என மத்திய விமான போக்குவரத்து பாதுகாப்பு ஆணையம் உத்தரவிட்டிருந்தது. மேலும், அன்றைய தினத்திற்குள் இது தொடர்பாக விளக்கம் அளிக்காவிட்டால் அபராதம் விதிக்கப்படும் எனவும் எச்சரிக்கை கொடுக்கப்பட்டது. 

ஆனால், இந்த சம்பவம் குறித்து தகவல் தெரிவிக்கவில்லை என இண்டிகோ விமான நிறுவனத்துக்கும், மும்பை சர்வதேச விமான நிலைய நிறுவனத்துக்கும் விமான போக்குவரத்து பாதுகாப்பு ஆணையம் நோட்டீஸ் அனுப்பியது. இந்த நிலையில், இண்டிகோ நிறுவனத்துக்கு ரூ.1.20 கோடி மற்றும் மும்பை சர்வதேச விமான நிலைய நிறுவனத்துக்கு ரூ.60 லட்சம் என விமான போக்குவரத்து பாதுகாப்பு ஆணையம் அபராதம் விதித்துள்ளது. அதுமட்டுமல்லாமல், மும்பை சர்வதேச விமான நிலைய நிறுவனத்துக்கு டி.ஜி.சி.ஏ ரூ.30 லட்சம் அபராதம் விதித்துள்ளது. 

Next Story

மத்திய அரசுக்கு அபராதம் விதித்த உயர்நீதிமன்றம்!

Published on 03/01/2024 | Edited on 03/01/2024
The High Court fined the Union Government

பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த ஹர்பஜன் கவுர் என்பவரது நிலம் மத்திய அரசால் கடந்த 1987 ஆம் ஆண்டு கையகப்படுத்தப்பட்டுள்ளது. அப்போது அவரது நிலத்திற்கு வழங்கப்பட்ட இழப்பீடு போதுமானது அல்ல எனக் கூறி ஹர்பஜன் கவுர் குர்தாஸ்பூர் மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த மாவட்ட நீதிமன்றம் ஹர்பஜன் கவுருக்கு சந்தை மதிப்பின் அடிப்படையில் கூடுதல் இழப்பீடும், தாமதமான காலத்திற்கு வட்டியும் வழங்க உத்தரவிட்டிருந்தது.

கூடுதல் இழப்பீடும், தாமதமான காலத்திற்கு வட்டியும் வழங்க உத்தரவிட்டிருந்த தீர்ப்பை எதிர்த்து மத்திய அரசின் பாதுகாப்பு அமைச்சகம் சார்பில் பஞ்சாப் - ஹரியானா உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டிருந்தது. இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டதுடன் குர்தாஸ்பூர் மாவட்ட நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் இழப்பீடு வழங்கவும் உத்தரவிட்டிருந்தது.

மேலும் இந்த உத்தரவை எதிர்த்து மத்திய அரசு தாக்கல் செய்த மறு ஆய்வு மனுவில் வட்டி வழங்கும் உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. அப்போது கூடுதல் சந்தை மதிப்பு என்பது இழப்பீட்டின் ஒரு பகுதியே என உச்ச நீதிமன்றம் ஏற்கனவே தெளிவுபடுத்தியுள்ளது என நீதிபதி தெரிவித்தார். இருப்பினும் உச்ச நீதிமன்ற தீர்ப்பை மீறி மத்திய அரசின் வழக்கறிஞர் வட்டி வழங்கும் உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தினார். இந்நிலையில் நீதிமன்றத்தின் நேரத்தை வீணடித்ததாக கூறி மத்திய அரசுக்கு 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து பஞ்சாப் உயர்நீதிமன்ற  நீதிபதி ரஜ்பீர் சேராவத் அதிரடி உத்தரவிட்டுள்ளார்.