Skip to main content

ஆக்கிரமிப்பில் ஆவின் பாலகம்... பொது மக்கள் தவிப்பு!

Published on 12/12/2019 | Edited on 12/12/2019

நெல்லை மற்றும் தென்காசி ஒருங்கிணைந்த மாவட்டத்தின் ஆவின் தலைவராக அண்மையில் நியமிக்கப்பட்டவர் அ.தி.மு.க.வின் அமைப்புச் செ.வான நெல்லையைச் சேர்ந்த சுதா.பரமசிவன் கடந்த வாரம் திடீரென்று இவரது தலைமையைக் கொண்ட ஆவின் பாலகம் பரபரப்பான ஜனரஞ்சகமுள்ள ஜங்ஷன் சூப்பர் மார்க்கெட் பகுதியில் ஆவின் தயாரிப்பு பொருட்களை விற்கிற பாலகத்தின் விற்பனையகத்தை திறந்து வைத்தது. அதில் பால் சம்பந்தமான உணவுப் பொருட்கள் விற்கப்படுகின்றன.

உணவுப் பொருளகம் திறக்க வேண்டியது தான். ஆனால் அதன் விற்பனையகம் பொது மக்களின் போக்குவரத்திற்கு இடையூறு. இல்லாமல் இருக்க வேண்டும் என்கின்றனர் அந்தப் பகுதியைச் சார்ந்தவர்கள்.

 

nellai avin


பாலகம் அமைந்திருக்கும் பகுதி பரபரப்பான சூப்பர் மார்க்கெட்டைக் கொண்ட குறுகிய சாலை. அருகிலுள்ள ஜங்ஷன் பேருந்து நிலையம் மூடப்பட்டு ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் அடிப்படையில் புதிய பேருந்து நிலையமாக அமைக்கப்படுவதால் ஏற்கனவே மக்கள் நடமாட்டம் நெருக்கமான இந்தப் பகுதியில் பாலகத்தின் ஆக்கிரமிப்பால் கூடுதல் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. தவிர இரண்டும் பெரிய தியேட்டர்கள் இங்கே உள்ளதால் அன்றாடம் இதற்கு திரளும் கூட்டத்தின் போக்குவரத்தும் இங்கே தான் உள்ளது. மட்டுமல்ல, ஜங்ஷனின் முக்கியமான சாலைக்குமரன் கோவில் இந்தப் பகுதியிலிருப்பதால் கார்த்திகை தீபத்திருவிழாவின் போது சொக்கப்பனை பெரிய தீபம் வழக்கமாக இந்தப் பகுதியில் தான் ஏற்றப்படுவதுண்டு. அப்போது பக்தர்கள் கூட்டம் திரளும் கடந்த 10ம் தேதியன்று கார்த்திகைத் திருநாளில் சொக்கபனை மெகா தீபம் ஏற்றப்படும் போது கூட ஆக்கிரமிப்பால் அந்தப் பகுதியின் கடைகளின் முன் பகுதிகள் அகற்றப்பட்டு மிகவும் திணறிய நிலையில் தீபம் ஏற்றப்பட்டது எனவே பொது மக்களின் நடமாட்டத்திற்கு இடையூறாக உள்ள இந்தப் பகுதியின் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் ஆதங்கப்படுகிறார்கள்.

கடையோ, டெப்போவோ புதிதாக ஆரம்பிக்க வேண்டுமானால் மாநகராட்சியிடம் முறைப்படி முன் அனுமதிபெற வேண்டும் அந்த வட்டாரங்களில் நாம் விசாரித்த போது, பாலகம் விற்பனைக் கடைக்கு அனுமதி வழங்கவில்லை என்கிறார்கள்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

நீரோடையில் மிதந்த சடலம்; போலீசார் விசாரணையில் அதிர்ச்சி

Published on 27/03/2024 | Edited on 27/03/2024
A body lying in a stream; Police investigation shocked

தந்தையைக் கொலை செய்தவரைப் பழிக்குப் பழி கொலை செய்து நீரோடையில் வீசிய சம்பவம் நெல்லையில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

நெல்லை மாவட்டம் தெற்கு ஏறாந்தை கிராமத்தில் வசித்து வருபவர் தேவபாலன். லாரி ஓட்டி வந்த தேவபாலன் திடீரென காணாமல் போன நிலையில், உறவினர்கள் அவரைத் தேடி வந்தனர். இறுதியில் ஊருக்கு ஒதுக்குப்புறமாக உள்ள நீரோடை ஒன்றில் சடலம் ஒன்று மிதப்பதாகத் தகவல் பரவியது. இந்த தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த திசையன்விளை போலீசார் ஆய்வு செய்ததில், வெட்டுக் காயங்களுடன் ஒருவர் கொலை செய்யப்பட்டு நீரோடையில் வீசப்பட்டது தெரிய வந்தது.

உடலைக் கைப்பற்றி விசாரணை நடத்தியதில், அது காணாமல் போன தேவபாலன் என்பது தெரியவந்தது. இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில், தேவபாலன் கொலை வழக்கு தொடர்பாக சாத்தூர் நீதிமன்றத்தில் உத்திரகுமார், சுரேஷ்குமார், சேர்மதுரை உள்ளிட்ட மூன்று பேர் சரணடைந்தனர். மூவரும் சகோதரர்கள். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், பழிக்குப் பழியாக லாரி டிரைவரை கொலை செய்தது தெரியவந்தது.

2017 ஆம் ஆண்டு துரைபாண்டியன் என்பவர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் தேவபாலனுக்கு தொடர்பு இருந்ததாகத் தெரிகிறது. ஆனால் நீதிமன்றத்தில் குற்றம் நிரூபணம் ஆகாததால் அவர் விடுவிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், துரைபாண்டியனின் மகன்களான சுரேஷ்குமார், உத்திர குமார், சேர்மதுரை ஆகிய மூன்று பேரும் பல வருடங்கள் கழித்து தேவபாலனை வெட்டிக் கொலை செய்தது விசாரணையில் தெரிய வந்தது.

Next Story

மது போதையில் ரகளை; தட்டிக் கேட்டவர் கொலை; சுட்டுப் பிடித்த போலீசார்

Published on 08/03/2024 | Edited on 08/03/2024
Intoxicated with alcohol; Police shot

சிறையில் இருந்து வந்த இளைஞர் மது போதையில் சாலை பணியாளரை அரிவாளால் வெட்டி கொன்றுவிட்டு காவலரையும் வெட்டிக் கொல்ல முயன்ற சம்பவம் நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

நெல்லை மாவட்டம் வெள்ளங்குளி பகுதியை சேர்ந்த பேச்சிதுரை என்ற நபர் வழக்கு ஒன்றில் சிக்கி கடந்த வாரம் பாளையங்கோட்டை சிறையில் இருந்து வெளிவந்த நிலையில், தன்னுடைய நண்பர் சந்துரு என்பவருடன் சேர்ந்து காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது மது போதையில் இருந்த இருவரும் சாலையில் காரை நிறுத்தி ரகளை செய்து கொண்டிருந்தனர். அந்த பகுதியில் வேலை செய்து கொண்டிருந்த சாலை பணியாளர் கருப்புசாமி என்பவர் இதனைத் தட்டிக் கேட்டுள்ளார்.

போதையில் ஆத்திரமடைந்த பேச்சிதுரை சாலைப் பணியாளர் கருப்பசாமியை அரிவாளால் வெட்டிக்கொலை செய்துள்ளார். அதன் பிறகு அந்த வழியாக வந்த அரசு பேருந்தின் முன் பக்க கண்ணாடியை அடித்து நொறுக்கி ரகளையில் ஈடுபட்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து தகவலறிந்து அங்கு வந்த தலைமைக் காவலர் செந்தில்குமார் விசாரணை நடத்திக் கொண்டிருந்த போது, அவரையும் அரிவாளால் வெட்டிவிட்டு அருகிலிருந்த வாழை தோப்புக்குள்  பேச்சிதுரை தலைமறைவானான்.

Intoxicated with alcohol; Police shot

இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்த உடனடியாக காவல்துறையினர் பலர் அந்த பகுதியில் முகாமிட்டனர். தொடர்ந்து நடத்தப்பட்ட தேடுதல் வேட்டையை அடுத்து வாழை மர தோப்பில் பதுங்கி இருந்த பேச்சிதுரையை போலீசார் சுட்டுப் பிடித்தனர். அதன் பிறகு அவனுடன் சேர்ந்து ரகளையில் ஈடுபட்ட சந்துருவையும் போலீசார் கைது செய்துள்ளனர். மதுபோதையில் நிகழ்ந்த இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.