Skip to main content

அமர்க்களப்படும் கள்ளச்சாராய உற்பத்தி!

Published on 27/04/2020 | Edited on 27/04/2020

கரோனா தொற்று அச்சுறுத்தலால் கடந்த மார்ச் 24 முதல் தேசமே 144 லாக் டவுணில் நீடித்து வருகிறது. வாழ்க்கைக்குத் தேவையான அத்யாவசியப் பொருள்களான மருந்து மளிகை சாமான்கள், காய்கறிகள் உள்ளிட்ட கடைகள் மட்டுமே திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளன.


ஆனால் ஆண்டாண்டு காலம், அரசு மது வகைகளையே குடித்து உடல் முழுக்க ஆல்கஹால் ஏறிப் போன மதுப் பிரியர்கள் மது கிடைக்காமல் மன அழுத்தத்திற்குத் தள்ளப்பட்டுள்ளனர். ஏனெனில் அரசு மதுக் கடைகள் ஆரம்பிக்கப்பட்ட காலம் தொட்டு கொரோனா காலம் வரை வேறு எந்த வகை பொருட்களுக்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டாலும், மதுக்கடைகளுக்கு மட்டும் தடையே விதிக்கப்பட்ட வரலாறில்லை. காரணம் அரசுகளுக்கு வருமானம் பாதிப்பே. ஆனால் மதுக்கடைகளில் கூட்டம் திரளுவதால் கரோனா தொற்றிற்கு சுளுவாக வழிவகுத்து விடும், என்ற அச்சம் காரணமாகவே லாக்ட்வுண் ஆரம்பித்த போதே அரசு மதுக்கடைகளும் மூடப்பட்டு விட்டன.
 

 

nellai and thoothukudi district police raid lockdown time

திடீரென டாஸ்மாக் மூடப்பட்டதால் மது உபயோகிப்பவர்கள் ஒரு லெவலுக்கு மேல் அதற்காக திண்டாடித் திணறி இருக்கிறார்கள். உயிரைத் தக்கவைக்க போதையைத் தேடியவர்கள் மாற்றுப் போதையான கஞ்சா, மற்றும் உயிருக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்துகிற மெத்தனால் ஸ்பிரிட் வரையும் போய் விட்டனர்.

nellai and thoothukudi district police raid lockdown time

போதைக்காக அல்லாடும் குடி அன்பர்களின் தவிப்பை கள்ளச்சாராய உலகம் கவனிக்காமல் இல்லை. போதைக்காக என்னவிலையேனும் கொடுப்பார்கள் என்பதால் அடங்கிக் கிடந்த கள்ளச்சாராய ஊறல் உற்பத்தி உயிர் பெற்றது. தென்மாவட்டத்தில் குறிப்பாக நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களின் கிராமப்புறங்கள் கள்ளச்சாராயம் காய்ச்சுவது என்பது தற்போதைய கரோனா முடக்க காலத்தில் தொழிலாகவே மாறியிருக்கிறது. நாங்குநேரி, ஸ்ரீவைகுண்டம், சாத்தான்குளம் ஏரியாவின் காட்டுப்புறப்பகுதிகளில் கள்ளச் சாராயம் காய்ச்சுவது குடிசைத் தொழிலாகவே மாறிப் போனது. காரணம் குவார்ட்டர் மது, கள்ளச் சந்தையில் 300- 400 என்றான நிலையில் அதே அளவு கொண்ட சாராயம் 150– 200 விலை என்பது காய்ச்சுபவர்களுக்கு கொள்ளை லாபம் தான்.

nellai and thoothukudi district police raid lockdown time

சாத்தான்குளம் அருகிலுள்ள மீரான்குளம் வாழைத் தோட்டத்தின் மத்தியில் உறவினர்களான மூக்காண்டியும், ராஜ்குமாரும் தங்களின் குடும்ப சகிதம், கள்ளச்சாராய ஊறல் வைத்து சாராயம் காய்ச்சி விற்பனையை மேற் கொண்டிருக்கிறார்கள், இந்த தகவல் மாநில உளவுப் பிரிவையும் தாண்டி மத்திய உளவுப் பிரிவு கண்காணித்து தகவல் தர, தூத்துக்குடி மாவட்டத்தின் மதுவிலக்குப் பொறுப்பு நெல்லை அதிகாரிகள் திடீர் ரெய்ட் அடிக்க, மூக்காண்டியும், ராஜ்குமாரும், 50 லிட்டார் ஊறல் மற்றும் 5 லிட்டர் கள்ளச்சாராயத்தோடு சிக்கியிருக்கிறார்கள்.

nellai and thoothukudi district police raid lockdown time

பொறுப்பு மது விலக்குப் பிரிவினர் பிடிபட்டவர்களையும் ஊறல் மற்றும் சரக்கு காய்ச்சுவதற்குப் பயன்படுத்தப்பட்ட அனைத்து சாதனங்களையும் சாத்தான்குளம் காவல் நிலையத்தில் ஒப்படைக்க, அங்கே அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

 

சார்ந்த செய்திகள்

Next Story

பார் மேற்கூரை இடிந்து 3 பேர் உயிரிழப்பு; 12 பேர் மீது வழக்கு

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
Bar roof collapses, 3 lost live Case against 12 people

சென்னை ஆழ்வார்பேட்டையில் தனியாருக்குச் சொந்தமான கேளிக்கை விடுதியில் மேற்கூரை இடிந்து விழுந்து ஏற்பட்ட விபத்தில் 3 பேர் உயிரிழந்த நிலையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

சென்னை ஆழ்வார்பேட்டையில் தனியாருக்குச் சொந்தமாக இயங்கி வந்த பாரின் முதல் தளத்தின் மேற்கூரை நேற்று இரவு திடீரென யாரும் எதிர்பாராத விதமாக இடிந்து விழுந்தது. இதில் திண்டுக்கல்லைச் சேர்ந்த சைக்ளோன் ராஜ் (வயது 45). மணிப்பூரைச் சேர்ந்த மேக்ஸ் (வயது 21) லாலி (வயது 22) ஆகியோர் உயிரிழந்தனர். உயிரிழந்த 3 பேரின் உடல்களும் மீட்கப்பட்டுப் பிரேதப் பரிசோதனைகளுக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.

இந்த விபத்து குறித்து காவல்துறை உயர் அதிகாரி ஒருவர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், “விபத்து நடந்தபோது உள்ளே இருந்தவர்களிடம் விபத்து குறித்து விசாரணை நடத்திய போது, விபத்து நடந்த இடத்தின் உள்ளே 3 பேர் மாட்டிக் கொண்டுள்ளதாகத் தகவல் வந்தது. விடுதியின் முதல் தளத்தின் கான்கிரீட் மேற்கூரை இடிந்து விழுந்துள்ளது. இந்த விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது” எனத் தெரிவித்தார்.

தனியார் கேளிக்கை விடுதியின் மேற்கூரை இடிந்து விழுந்த விபத்தில் 3 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து அபிராமபுரம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மெட்ரோ பணியின் போது ஏற்பட்ட அதிர்வின் காரணமாக இந்த கேளிக்கை விடுதியின் மேற்கூரை இடிந்து விழுந்ததாக முதற்கட்ட விசாரணையில் தகவல் வெளியாகி உள்ளதாகவும் கூறப்பட்டது. இந்நிலையில் முதற்கட்டமாக 12 பேர் மீது வழக்குப் பதிவு செய்துள்ள அபிராமபுரம் போலீசார், பாரின் மேலாளர் சதீஷ் உட்பட ஐந்து பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story

கேளிக்கை விடுதி விபத்து; மெட்ரோ ரயில் நிர்வாகம் விளக்கம்!

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Metro Rail Admin Explanation on Alwarpet hotel incident

சென்னை ஆழ்வார்பேட்டையில் தனியாருக்குச் சொந்தமான கேளிக்கை விடுதி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த விடுதியின் முதல் தளத்தின் மேற்கூரை திடீரெனெ யாரும் எதிர்பாராத விதமாக இடிந்து விழுந்துள்ளது. அப்போது அங்கு இருந்த 3 பேர் உயிரிழந்தனர். திண்டுக்கல்லைச் சேர்ந்த சைக்ளோன் ராஜ் (வயது 45). மணிப்பூரைச் சேர்ந்த மேக்ஸ் (வயது 21) மற்றும் லாலி (வயது 22) ஆகியோர் உயிரிழந்ததாக போலீஸ் தரப்பில் இருந்து தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் உயிரிழந்த 3 பேரின் உடல்களும் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைகளுக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுளளன.

இந்த கட்டட விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த 20 பேர் கொண்ட தேசிய பேரிடர் மீட்பு படையினர் மீட்புப்பணியில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து அபிராமபுரம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மெட்ரோ பணியின்போது ஏற்பட்ட அதிர்வின் காரணமாகக் இந்த கேளிக்கை விடுதியின் மேற்கூரை இடிந்து விழுந்ததாக முதற்கட்ட விசாரணையில் தகவல் வெளியாகி இருந்தது.

இது விபத்து குறித்து சென்னை மாநகர கூடுதல் காவல் ஆணையர் பிரேமானந்த் சின்ஹா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், “விபத்து நடந்தபோது உள்ளே இருந்தவர்களிடம் விபத்து குறித்து விசாரணை நடத்திய போது, விபத்து நடந்த இடத்தின் உள்ளே 3 பேர் மாட்டிக்கொண்டுள்ளதாக தகவல் வந்தது. விடுதியின் முதல் தளத்தின் கான்கிரீட் மேற்கூரை இடிந்து விழுந்துள்ளது. இந்த விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது” எனத் தெரிவித்தார். தனியார் கேளிக்கை விடுதியின் மேற்கூரை இடிந்து விழுந்த விபத்தில் 3 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் மக்கள் மத்தியில் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

Metro Rail Admin Explanation on Alwarpet hotel incident

இந்நிலையில் இந்த விபத்து குறித்து சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் விளக்கமளித்துள்ளது. இது குறித்து எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியாருக்கு சொந்தமான பொழுதுபோக்கு கிளப்பில் உள்ள மெஸ்ஸானைன் தளம் இடிந்து விழுந்த சம்பவம் தொடர்பாக விளக்கமிக்க வேண்டிய தேவை உள்ளது. இந்த துரதிர்ஷ்டவசமான சம்பவம் தற்போது நடந்து கொண்டிருக்கும் மெட்ரோ ரயில் பணிகளால் அல்ல என்பதை  சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் (CMRL) தெளிவுபடுத்த விரும்புகிறது.

ஏனெனில் மெட்ரோ ரயில் பணியானது, விபத்து நிகழ்ந்த கட்டிடத்திலிருந்து கிட்டத்தட்ட 240 அடி தொலைவில் உள்ளது. மேலும் விபத்து நிகழ்ந்த கட்டடத்தில் அதிர்வுகள் எதுவும் காணப்படவில்லை. சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மீட்புப் பணிகளில் தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புப் பணி அதிகாரிகளுக்கு உதவி செய்ய உள்ளதாகவும் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் தெரிவிக்க விரும்புகிறது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.