Skip to main content

இணைப்பு கூடாது...வலுக்கும் எதிர்ப்பு...களமிறங்கும் வைகோ.

Published on 14/08/2019 | Edited on 14/08/2019

நெல்லை மாவட்டத்தை இரண்டாகப் பிரித்து தென்காசியைத் தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டம் அறிவிக்கப்பட்டது. இந்த மாவட்டத்திற்கான அதிகாரப்பூர்வமான தொகுதி வரையறை வெளியிடப்படாவிட்டாலும், சங்கரன்கோவில் தொகுதியும் தென்காசியுடன் இணைக்கப்படலாம் என்ற தகவல்கள் வெளியாக, தென்காசியை தொடர்ந்து நேர் வரிசையிலிருக்கும் கடையநல்லூர், வாசுதேவநல்லூர் உள்ளிட்ட மூன்று தொகுதிகளும் மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய வளமான பகுதிகள். முப்போகம் விளைச்சலைக் கொண்டது.

 

ஆனால் சுமார் 42 கி.மீ சுற்றளவு கொண்ட சங்கரன்கோவில் தொகுதி 100 சதம் வானத்து மழையை மட்டுமே நம்பியுள்ள மானாவரிப் பகுதிகள். இதனால் நலத்திட்டம், விவசாய நிவாரணம் பெற இயலாமல் போய் விடும் என்று தொகுதியில் அடங்கியுள்ள மூன்று கிராம விவசாயிகள், பொது மக்கள் எதிர்ப்புக் குரலை கொடுத்து வருகின்றார்கள். சங்கரன்கோவில், நெல்லையிலேயே நீடிக்க வேண்டும் என்று அரசுக்கு மாவட்டக் கலெக்டர் மூலமாக கோரிக்கையும் அனுப்பியுள்ளனர்.

 

இது தொடர்பான நிலவரங்களை ஏற்கனவே நக்கீரன் இணைய தளம் செய்தி வெளியிட்டிருந்தது.

 

தற்போது மாவட்டம் பிரிப்பு தொடர்பாக மக்களிடம் கருத்துக்களைக் கேட்பதற்காக வரும் 17ம் தேதி வருவாய் துறையின் இயக்குனர் சத்ய கோபால் வருவதாகச் சொல்லப்படுகிறது. இந்நிலையில், சங்கரன்கோவிலில் வரும் கலிங்கப்பட்டியைப் பூர்வீகமாகக் கொண்ட வைகோவின் கிராமம் அடங்கியுள்ள திருவேங்கடம் தாலுகா முழுவதும், நீர் ஆதாரமின்றி மானாவரிக் காடுகள் என்பதை அறிவார். அடிப்படையில் விவசாயக் குடும்பத்தில் இருந்து வந்த வைகோ, விவசாயிகளின் துயரங்களைத் துல்லியமாக அறிந்தவர்.

 

 

NELLAI AND THENKASI DISTRICT DID NOT SEPARATE PEOPLES REQUEST

 


கடந்த ஒரு வருடமாக வறட்சி நிவாரணம் பெற முடியாமலும், கட்டிய பயிர் பாதுகாப்பு காப்பீட்டுத் தொகை கூடக் கிடைக்க வழியின்றி தவிக்கும். தன் பகுதியின் ஆயிரக்கணக்கான விவசாயக் குடும்பங்களின் நிலைப்பாட்டை அரசின் உயர் மட்டம் வரை கொண்டு போயிருக்கிறார். மேலும் நெல்லை மாவட்டத்திலேயே சங்கரன்கோவில் தொடர வேண்டும், தென்காசியுடன் இணைப்பு கூடாது என்கிற அஜண்டாவை அனைத்து அதிகாரிகள், அரசுக்கும் கோரிக்கையாகவே அனுப்பியிருக்கிறார்.

 

இந்தச் சூழலில் விவகாரம், சங்கரன்கோவில் தொகுதி மக்களிடையே விஸ்வரூபம் எடுப்பதால் குரல் கொடுப்பதற்காக களமிறங்கியிருக்கிறாராம் வைகோ என்ற தகவல் வெளியாகியுள்ளது. அதன் எதிரொலியாக வரும் 19ம் தேதி சங்கரன்கோவிலில் மிகப் பெரிய ஆர்ப்பாட்டம் வைகோ தலைமையில் நடக்க உள்ளது என்கிற தகவலை கூறுகிறார் நகர ம.தி.மு.க.செயலாளரான ஆறுமுகச்சாமி.
 

 



 

சார்ந்த செய்திகள்

Next Story

செஞ்சுரிக்கு மத்தியில் சிலிர்க்க வைத்த மழை

Published on 13/04/2024 | Edited on 13/04/2024
summer rain in madurai

பல இடங்களில் வெயில் செஞ்சுரி அடித்து வரும் நிலையில் ஒரு சில இடங்களில் பெய்த மழை மக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. குறிப்பாக மதுரையின் நகரப் பகுதிகளில் பரவலாக மழை பொழிந்து வருகிறது.

மதுரையில் காலை முதலே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்ட நிலையில் மதுரையின் நகரப் பகுதி மற்றும் கோரிப்பாளையம், தல்லாகுளம் உள்ளிட்ட பகுதிகளில் சாரல் மழை பெய்தது. இதனால் வெப்பம் தணிந்து குளிர்ந்த சூழல் ஏற்பட்டதால் மக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். ஒரு சில இடங்களில் நீர் தேங்கியதால் இருசக்கர வாகனங்களில் செல்வோர் சிறிது சிரமத்திற்கு உள்ளாகினர்.

மதுரையின் பழங்காநத்தம், பெரியார் பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் காலை முதல் மழை பெய்த நிலையில் பிற்பகலுக்கு மேல் தற்பொழுது கோரிப்பாளையம் தல்லாகுளம் பகுதிகளில் மழை பொழிந்து வருகிறது. அதேபோல் சென்னை வானிலை ஆய்வு மையம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் தமிழ்நாட்டில் அடுத்த மூன்று மணி நேரத்தில் 15 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அறிவிப்பின்படி நீலகிரி, ராமநாதபுரம், திருச்சி, புதுக்கோட்டை, பெரம்பலூர், சேலம், நாமக்கல், கரூர், தேனி, மதுரை, திண்டுக்கல், விருதுநகர், தென்காசி, சிவகங்கை ஆகிய 15 மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story

மயிலாடுதுறையில் சிறுத்தை; அம்பாசமுத்திரத்தில் கரடி; வைரலாகும் வீடியோ காட்சிகள்

Published on 11/04/2024 | Edited on 11/04/2024
Leopard in Mayiladuthurai; Bear in Ambasamudra; Videos go viral

கோடை காலம் தொடங்கிவிட்ட நிலையில் வனவிலங்குகள் கிராமங்களை நோக்கி படையெடுக்கும் நிகழ்வுகள் அரங்கேறி வருகிறது. மயிலாடுதுறையில் அண்மையில் தென்பட்ட சிறுத்தையை பிடிக்கும் பணியானது ஏழு நாட்களுக்கும் மேலாக இன்று வரை தொடர்ந்து வருகிறது. இந்த நிலையில், அம்பாசமுத்திரத்தில் வனப்பகுதியில் இருந்து ஊருக்குள் புகுந்த கரடி பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்த, நபர் ஒருவரை கரடி துரத்துவதும், அந்த நபர் தலைதெறிக்க ஓடும் சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரத்தை ஒட்டியுள்ள மேற்குத் தொடர்ச்சி மலையில் புலி, சிறுத்தை, கரடி, யானை, காட்டெருமை உள்ளிட்ட வனவிலங்குகள் இருக்கும் நிலையில், தற்போது கோடை காலம் தொடங்கியுள்ளதால் அவ்வப்போது வனப்பகுதியை விட்டு மலை ஓரத்தில் உள்ள கிராமங்களில் விலங்குகள் தஞ்சம் புகுவது வாடிக்கையாகி வருகிறது.

Leopard in Mayiladuthurai; Bear in Ambasamudra; Videos go viral

இந்த நிலையில் இன்று அதிகாலை கல்லிடைக்குறிச்சி பகுதிக்கு கரடி ஒன்று வந்துள்ளது. அதிகாலை வீட்டை விட்டு வெளியே வந்த ஒருவர், கரடியைப் பார்த்தவுடன் வேட்டியை மடித்துக் கட்டிக்கொண்டு மின்னல் வேகத்தில் அங்கிருந்து தப்பி ஓடினார். இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது. இது குறித்து தகவலறிந்து அங்கு வந்த அம்பாசமுத்திரம் வனச்சரகர் நித்யா தலைமையிலான வனத்துறையினர் ஊருக்குள் புகுந்த கரடியைத் தேடி வருகின்றனர். பொதுமக்களுக்கு எச்சரிக்கையும் கொடுக்கப்பட்டு வருகிறது.