Skip to main content

சிவபெருமானின் ஆடித்தபசுக் காட்சி... லட்சக்கணக்கான மக்கள் தரிசனம்!

Published on 14/08/2019 | Edited on 14/08/2019

 

கல்ப கோடிகாலத்திற்கு முன்பாக சைவம் பெரிதா, வைணவம் பெரிதா? யார் பெரியவர் என்ற ஈகோ காரணமாக இரு தரப்பினரும் மோதிக் கொண்டார்கள், ரத்தமும் சதையுமாகப் இருதரப்பிலும் பலர் பலியானவர்கள். பூலோகம் அமைதியிழந்து அல்லல்பட்டது. தேவாதி தேவர்கள் எல்லோரும், பூலோக மக்களைக் காப்பற்றும்படி ஆதிசிவன் சர்வேஸ்வரனிடம் வேண்டி நின்றனர்.

பூலோக அமைதிக்காக ஆதிக்கடவுள் சிவபெருமாள் தன் உடம்பில் வலது பாகம் சிவனாகவும் இடதுபாகம் திருமாலாகவும், ஒரு சேர உருவெடுத்து சங்கரநாரயணராகப் பக்தர்களுக்கு அருட்காட்சியளித்தார். சிவனும் விஷ்ணுவும் ஒன்றே, அதே போன்று சைவமும் வைணமும் ஒன்றுதான் என்றுணர்த்தி இரு தரப்பினருக்குள்ளும் ஒற்றுமையை ஏற்படுத்தினார். பக்தர்களுக்குக் காட்சியளித்த அத்திருமேனியை, அடியவளுக்கும் காட்டியருள வேண்டும் என்று அன்னை உமாதேவியார், காக்கும் கடவுள் சிவபெருமானிடம் வேண்டி நின்றார்.

பூலோகத்தில் அகத்திய முனிவர் இருக்கும் பொதிகை மலைப்பக்கம், புன்னைவள விருட்ஷமிருப்பதில் நீ தவம் செய்வாயானால் நீ விரும்பிய திரு உருவைக்காட்டுவோம் என்று திருவாக்கருளினார். ஆதிசிவனின் ஆக்ஞைப்படி அன்னையார் புன்னனையடியில் நெடுங்காலம் தவமிருக்க, அவர் தவத்தை மெச்சிய சிவபெருமான் ஆடிப் பௌர்ணமியின் போது உமையவள் பார்வதிதேவியாருக்கு சங்கரநாராயணராகத் திருக்காட்சியருளினார். படைக்கும் கடவுளின் இந்த அரிய காட்சி வைபவம் நடந்தேறிய புன்னையடிப் பகுதிதான் தற்போது நெல்லை மாவட்டத்தில் வரும் சங்கரன்கோவிலாகும்.

தன் இஷ்ட தெய்வமான சங்கர நாராயணர், ஸ்ரீ கோமதியம்பிகைக்கு சங்கரன்கோவிலில் மிகப்பெரிய ஆலயமாக 900 ஆண்டுகட்கு முன்பு உக்கிர பாண்டிய மன்னரால் அமைக்கப்பட்டதாக வரலாறு பேசுகிறது. ஆடிமாதத்தில் நடந்த இத்திருக்காட்சியே ஆடித்தபசாக வரலாற்று முக்கியத்துவம் பெற்றிருக்கிறது. நகரின் 11 நாட்கள் மண்டகப்படி திருவிழாவாக நடத்தப்பட்டு 10ம் திருநாளான இன்று ஆடித்தபசுக் காட்சி.

நேற்று காலை மூலஸ்தானமாகிய சங்கரலிங்க சுவாமி கோமதியம்பாளுக்கு கும்பம் அபிஷேகம் காலை 5 மணிக்கு நடந்தது. பின்பு காலை 9 மணியளவில், சுவாமி, அம்பாளுக்கும், சந்திர மவுலீஸ்வரருக்கும் கும்பம் அபிசேகம் அலங்காரம். பரிவட்டம். திருக்கண்.

மாலை 4.30 மணி அளவில் சங்கரநாராயண சுவாமி தபசுக்காட்சி மண்டபத்திற்கு எழுந்தருளினார். லட்சக்கணக்கான மக்கள் திரள “அரகர மகாதேவா” என பக்தர்கள் பக்திப் பரவசக்குரலெழுப்ப தவக்கோலத்திலிருந்த அன்னை பார்வதி தேவியாருக்கு அத்திருமேனியான சங்கரநாராயணராக திருக்காட்சி காட்சியளித்து அருளினார் ஆதி சிவபெருமான். 

நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய்த்துறை அதிகாரி முத்துராமலிங்கம் உட்பட முக்கியப் பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர். நெல்லை மாவட்ட எஸ்.பி.அருண்சக்திகுமாரின் நேரடிக் கண்காணிப்பில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

 

சார்ந்த செய்திகள்

Next Story

ட்ரோன்கள் கண்காணிப்பில் வெள்ளியங்கிரி

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Drones are the key to surveillance

வெள்ளியங்கிரி மலையில் பக்தர்கள் மட்டுமல்லாது ட்ரக்கிங் ஆர்வம் உள்ளவர்களும் மலையேறி அங்குள்ள சிவன் கோவிலில் வழிபாடு செய்வது வழக்கம். மலையேறும் பக்தர்கள் எண்ணிக்கை அங்கு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பல்வேறு மாவட்டங்களில் இருந்து மட்டுமல்லாது அண்டை மாநிலங்களில் இருந்தும் மலையேற்ற அனுபவத்தைப் பெறுவதற்காகவும், சிவ லிங்கத்தை தரிசனம் செய்யவும் வெள்ளியங்கிரி மலைக்குச் செல்கின்றனர். மொத்தமாக ஏழு மலைத்தொடர்கள் கொண்ட வெள்ளியங்கிரி மலையில் ஏழாவது மலையில் சிவலிங்கம் உள்ளது. அதனைத் தரிசிப்பதற்காகவே பக்தர்கள் கூட்டம் படையெடுக்கிறது. அதுவும் சிவராத்திரி உள்ளிட்ட முக்கிய சீசன் காலங்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து மலையேறுவர்.

அண்மையில் வெள்ளியங்கிரி மலையில் ஏறிய வேலூரைச் சேர்ந்த தமிழ்ச்செல்வன் என்ற இளைஞரும், சேலம் வீரபாண்டி பகுதியைச் சேர்ந்த கிரண் என்ற இளைஞரும் மலையேறும் போதே மூச்சுத்திணறி உயிரிழந்தது பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. அதனைத் தொடர்ந்து கடந்த 25 ஆம் தேதி தெலுங்கானாவைச் சேர்ந்த சுப்பாராவ் (வயது 68). மருத்துவரான இவர் நான்காவது மலையில் சென்று கொண்டிருந்தபோது திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார். அதேபோல் சேலத்தைச் சேர்ந்த தியாகராஜன் என்பவர் குரங்கு பாலம் என்ற பகுதியில் மயங்கி விழுந்து இறந்து போனார். மேலும் 26 ஆம் தேதி நான்கு மணி அளவில் மலையில் ஏறிக் கொண்டிருந்த தேனி மாவட்டத்தைச் சேர்ந்த பாண்டியன் என்பவரும் மூச்சுத்திணறி உயிரிழந்தார். அதேபோல் வெள்ளியங்கிரி மலையில் ஏறிய ரகுராம் (வயது 50) என்பவர் மூச்சுத் திணறல் ஏற்பட்டு உயிரிழந்துள்ளார்.

இப்படியாக வெள்ளியங்கிரி மலையேறும் பக்தர்கள் உயிரிழக்கும் சம்பவங்கள் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கும் நிலையில், இன்று சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு வெள்ளியங்கிரியில் மலையேறும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்பதால் வனத்துறை சார்பில் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. தற்போது கோடை காலம் என்பதால் காட்டுத்தீ ஏற்படும் சூழ்நிலைகளும் உருவாகியுள்ளது. பக்தர்கள் மலையேறுவதற்கான பாதையைத் தவிர்த்து வேறு பாதையைப் பயன்படுத்திவிடாமல் இருக்க கண்காணிக்கப்படுவதாற்காக ட்ரோன்கள் கொண்டு வரப்பட்டுள்ளது. இன்று காலை முதலே பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சாரை சாரையாக மலையேற தொடங்கி வரும் நிலையில் சுழற்சி முறையில் தற்போது ட்ரோன்கள் மூலம் பக்தர்களின் நடமாட்டம் கண்காணிக்கப்பட்டு வருகிறது.

Next Story

கள்ளழகர் திருவிழாவில் நிகழ்ந்த சோகம்; போலீசார் தீவிர விசாரணை!

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Tragedy at the Kalalhagar festival Police serious investigation

உலகப்புகழ் பெற்ற மதுரை சித்திரை விழாவின் முக்கிய நிகழ்வான கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்வு பெரும் விமரிசையாக ஆண்டு தோறும் நடைபெற்று வருகிறது. இதனை லட்சக்கணக்கான மக்கள், பக்தர்கள் நேரில் கண்டு களிப்பர்.  தங்கக் குதிரையில் கம்பீரமாக வலம் வரும் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவம் மிகவும் பிரசித்தி பெற்றது. இந்த சித்திரை விழாவின் ஒரு பகுதியான மீனாட்சி - சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் நேற்று முன்தினம் (21.04.2024)  நடைபெற்றது. அதாவது சித்திரைத் திருவிழாவின் 10ஆம் நாளில் முக்கிய நிகழ்வான மீனாட்சி, சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் திரளான பக்தர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது.

அதனைத் தொடர்ந்து மீனாட்சி - சுந்தரேஸ்வரர் தேரோட்டம் நேற்று (22.04.224) கோலாகலமாகத் தொடங்கியது. இதனையொட்டி பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தேரை  உற்சாகத்துடன் வடம் பிடித்து இழுத்து பரவசம் அடைந்தனர். இதற்காக அதிகாலை முதல் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்த வண்ணம் இருந்தனர். அதே சமயம் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்வுக்காக கள்ளழகர் மதுரை வந்தடைந்தார். கள்ளழகர் உடன் பாரம்பரியமாகக் கொண்டு வரப்படுகின்ற அழகர் கோயிலின் உண்டியல்கள் 3 மாட்டு வண்டிகளில் எடுத்து வரப்பட்டது.

இதனையடுத்து மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் நிகழ்வு இன்று (23.04.2024) நடைபெற்றது. கள்ளழகரை தரிசிக்க ஆயிரக்கணக்கான மக்கள் வைகை ஆற்றில் குவிந்தனர். இதனையடுத்து பச்சைப் பட்டு உடுத்தி தங்கக் குதிரையில் கள்ளழகர் வைகை ஆற்றின் கரைக்கு வருகை புரிந்தார். கள்ளழகர் வைகையாற்றில் இறங்குவதற்கு முன்பு ஆற்றங்கரையில் மாலை அணிவித்து அழகருக்கு மரியாதை செலுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து பக்தர்களின் கோஷம் விண்ணை முட்ட, தங்கக்குதிரையில் பச்சைப்பட்டு உடுத்தி வைகையாற்றில் கள்ளழகர் இறங்கினார். 

Tragedy at the Kalalhagar festival Police serious investigation

இந்நிலையில் மதுரை சித்திரை திருவிழாவில் இளைஞர்கள் பட்டாக்கத்தியுடன் மோதிக்கொண்டதில் ஒருவர் கொலை செய்யப்பட்டார். சித்திரைத் திருவிழா நடந்த மதுரை மாவட்டம் ஆழ்வார்புரம் பகுதியில் ஏற்பட்ட மோதலில் கத்தியால் ஒருவருக்கொருவர் தாக்கிக் கொண்டனர். இதில் ஆழ்வார்புரத்தைச் சேர்ந்த கார்த்திக் மற்றும் சிவகங்கையைச் சேர்ந்த சோனையை மர்ம நபர்கள் கத்தியால் குத்தினர். இதனையடுத்து மருத்துவமனையில்  சிகிச்சை பெற்று வந்த ஒருவர் உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் மதுரையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த கொலை சம்பவம் குறித்து மதுரை மாநகர போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.