Skip to main content

நெல்லை மாவட்டத்தில் 15 நாட்கள் 144 தடை உத்தரவு பிறப்பித்த கலெக்டர் ஷில்பா

Published on 17/08/2019 | Edited on 17/08/2019

 

நெல்லை மாவட்டம் முழுவதும் ஆகஸ்ட் 19 முதல் செப்டம்பர் 2ம் தேதி காலை 6 மணி வரை ஒண்டிவீரன் நினைவுநாள், மற்றும் மன்னர் பூலித்தேவன் ஜெயந்திவிழாவை முன்னிட்டு பொது அமைதியைக் காக்கிற வகையில் 15 நாட்கள் 144 தடை உத்தரவு பிறப்பித்திருக்கிறார் நெல்லை மாவட்டக் கலெக்டர் ஷில்பா.

 

p

 

மாவட்டத்தில் சங்கரன்கோவில் பகுதியிலிருக்கும் நெல்கட்டும் செவல் பாளையத்தை அரசாண்டவர் மாமன்னர் பூலித்தேவரின் ஜெயந்திவிழா செப்.1 ம் தேதியும், அவரின் படைத் தளபதிகளில் ஒருவரான ஒண்டிவீரனின் நினைவு தினம் பாளையம் அருகிலுள்ள பச்சேரியில் ஆக. 20 அன்றும் அனுஷ்டிக்கப்படுகிறது.

 

o

 

அதன்காரணமாக அவரவர் சமூகம் சார்ந்த மக்கள் பொது நல அமைப்பினர், அமைச்சர்கள் வரை நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மரியாதை செலுத்துகின்றனர். அதற்காக நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வரும் தொண்டர்கள் திறந்த வாகனங்களில் வரக்கூடாது, வாள், கத்தி போன்ற ஆயுதங்கள் கொண்டு வரவும், கோஷங்கள் எழுப்பவும் தடைசெய்யப்படடுள்ளது.

 

s

 

ஐந்திற்கும் மேற்பட்ட நபர்கள் கூட்டமாக நிற்கக்கூடாது என்றும் மாவட்ட நிர்வாகத்தின் அனுமதியின்றி, பால்குடம் முளைப்பாரி ஊர்வலம் செல்லக்கூடாது. அந்த வழியாகச் செல்லும் பொதுத் துறை வாகனங்கள், சரக்கு வாகனங்கள், பொது மக்கள் பயன்பாட்டிற்கான இதர வாகனங்கள் தவிர்த்து ஒண்டிவீரன் நினைவுதினம், பூலித்தேவன் மன்னர் ஜெயந்திவிழாவிற்கு வரும் விருப்பார்வத் தொண்டர்களின் வாகனங்கள் போலீசாரின் முன் அனுமதி பெற வேண்டும் னெ்று கலெக்டர் ஷில்பா பிறப்பித்த 144 தடையின் குற்றவியல் நடைமுறைச் சட்டத்தில் சொல்லப்பட்டுள்ளது.

 

இவ்விழாக்கள் காரணமாக நிகழ்ச்சிகள் நடைபெறும் குறிப்பிட்ட அந்த இரண்டு தினங்களில் மட்டும் மாவட்டத்தின் வழியோரத்திலுள்ள 92 அரசு டாஸ்மாக் கடைகளையும் மூடவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
 

சார்ந்த செய்திகள்

Next Story

மயிலாடுதுறையில் சிறுத்தை; அம்பாசமுத்திரத்தில் கரடி; வைரலாகும் வீடியோ காட்சிகள்

Published on 11/04/2024 | Edited on 11/04/2024
Leopard in Mayiladuthurai; Bear in Ambasamudra; Videos go viral

கோடை காலம் தொடங்கிவிட்ட நிலையில் வனவிலங்குகள் கிராமங்களை நோக்கி படையெடுக்கும் நிகழ்வுகள் அரங்கேறி வருகிறது. மயிலாடுதுறையில் அண்மையில் தென்பட்ட சிறுத்தையை பிடிக்கும் பணியானது ஏழு நாட்களுக்கும் மேலாக இன்று வரை தொடர்ந்து வருகிறது. இந்த நிலையில், அம்பாசமுத்திரத்தில் வனப்பகுதியில் இருந்து ஊருக்குள் புகுந்த கரடி பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்த, நபர் ஒருவரை கரடி துரத்துவதும், அந்த நபர் தலைதெறிக்க ஓடும் சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரத்தை ஒட்டியுள்ள மேற்குத் தொடர்ச்சி மலையில் புலி, சிறுத்தை, கரடி, யானை, காட்டெருமை உள்ளிட்ட வனவிலங்குகள் இருக்கும் நிலையில், தற்போது கோடை காலம் தொடங்கியுள்ளதால் அவ்வப்போது வனப்பகுதியை விட்டு மலை ஓரத்தில் உள்ள கிராமங்களில் விலங்குகள் தஞ்சம் புகுவது வாடிக்கையாகி வருகிறது.

Leopard in Mayiladuthurai; Bear in Ambasamudra; Videos go viral

இந்த நிலையில் இன்று அதிகாலை கல்லிடைக்குறிச்சி பகுதிக்கு கரடி ஒன்று வந்துள்ளது. அதிகாலை வீட்டை விட்டு வெளியே வந்த ஒருவர், கரடியைப் பார்த்தவுடன் வேட்டியை மடித்துக் கட்டிக்கொண்டு மின்னல் வேகத்தில் அங்கிருந்து தப்பி ஓடினார். இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது. இது குறித்து தகவலறிந்து அங்கு வந்த அம்பாசமுத்திரம் வனச்சரகர் நித்யா தலைமையிலான வனத்துறையினர் ஊருக்குள் புகுந்த கரடியைத் தேடி வருகின்றனர். பொதுமக்களுக்கு எச்சரிக்கையும் கொடுக்கப்பட்டு வருகிறது.

Next Story

அமைச்சரின் ஆலோசனைக் கூட்டத்தில் தள்ளுமுள்ளு; திமுக நிர்வாகிகள் வாக்குவாதம்

Published on 06/04/2024 | Edited on 06/04/2024
Pushing in Minister's Advisory Meeting; DMK officials argue

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாக தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

இந்தியா கூட்டணி சார்பில் அக்கூட்டணியில் உள்ள திமுக தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில் நெல்லை மாவட்டம் திசையன்விளை பகுதியில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் முன்னிலையில் தேர்தல் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. நெல்லையில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் ராபர்ட் புரூஸ் போட்டியிடும் நிலையில் திசையன்விளை நகரப் பகுதிக்கு தேர்தல் பொறுப்பாளர்களை அறிவிப்பதில் திமுகவின் ஒன்றிய செயலாளர் ஜெகதீசனுக்கும், நகரச் செயலாளர் ஜான் கென்னடிக்கும் இடையே மேற்பட்ட வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் இது கோஷ்டி பூசலாக மாறியது.

இதில் இரு தரப்பினரும் மாறி மாறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இறுதியாக தள்ளுமுள்ளு ஏற்பட்டது. காங்கிரஸ் கட்சி தொண்டர்களும் தங்களுக்கு கூட்டணியில் மரியாதை இல்லை எனக் கூறி  ஆதரவுகளுடன் வெளிநடப்பு செய்தனர். இதனால் இந்த பகுதியில் கூச்சல் குழப்பம் ஏற்பட்டு பரபரப்பானது.