Skip to main content

மக்களுக்கு நஞ்சில்லா உணவு கொடுக்க போராடிய  ’நெல்’ ஜெயராமன் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை!

Published on 01/11/2018 | Edited on 01/11/2018
n

    

இன்று விவசாயத்தையும், மக்களையும் அழிக்க வந்துள்ள மரபணு மாற்றப்பட்ட உணவுப் பொருட்களால் மக்களுக்கு தினந்தோறும் நோய்கள், நோய்களுக்கு சிகிச்சை என்று அன்றாட வாழ்க்கை இப்படி போய்க் கொண்டிருக்கிறது. ஆனால் நமது பாரம்பரிய  உணவு தானியங்களால் நோய் இல்லை. அதற்கு உரம், பூச்சி மருந்து இல்லை. இயற்கை விவசாயம்,  இலை தலைகளை வயல்களில் போட்டு நடவு நட்டால் போதும் அதிக  விளைச்சளை  பெறமுடியும். அந்த உணவே ஆரோக்கியமானது.

 

n


    இயற்கை உணவே மருந்தாக இருக்கும் என்று நம்மாழ்வார் சொல்படி திருத்துறைப்பூண்டி கட்டிமேடு ஆதிரங்கம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி நெல் ஜெயராமன் தனது தேடல்களை தொடங்கினார். ஒவ்வொரு நெல்லாக தேடி தற்போது 150 பாரம்பரிய நெல் ரகங்களை சேகரித்துவிட்டார். ஒவ்வொரு மே மாதமும் நெல் திருவிழா நடத்தி திருவிழாவுக்கு வரும் விவசாயிகளுக்கு 2 கிலோ நெல் கொடுத்து அடுத்த திருவிழாவுக்கு வரும் போது 4 கிலோ நெல்லை வாங்கி அடுத்தடுத்த விவசாயிகளுக்கு கொடுத்து தமிழகம் முழுவதும் பாரம்பரிய நெல் விவசாயத்திற்கு விவசாயிகளை தயார்படுத்திவிட்டார். இதனால் இவருக்கு குடியரசுத் தலைவர் விருதும் மற்றும் பல விருதுகளும் கிடைத்தது. விருதுகளுக்காக நெல்லை சேகரிக்கவில்லை. என் மக்கள் ஆரோக்கியமாக வாழ வேண்டும். அதற்கு இயற்கையாக விளையும் பாரம்பரிய நெல் வேண்டும் என்பதால் தான் சேகரித்து வருகிறேன் என்று தொடர்ந்து தனது சேவையை செய்து வருகிறார்.


    இந்த நிலையில் தான் சில ஆண்டுகளுக்கு முன்பு அவருக்கு இடியாய் இறங்கியது ஒரு தகவல். ஆம்.. சிறுநீரகத்தில் புற்றுநோய். அதன் பிறகு தனக்கு சிகிச்சை எடுத்துக் கொண்டே நெல் திருவிழாவையும் நடத்திக் கொண்டு தான் இருக்கிறார். தற்போது சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அப்பல்லோ கேன்சர் இன்ஸ்டிட்யூட்டில் சேர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். 

 

n


    பாரம்பரிய நெல்மணிகளை மீட்ட நெல் ஜெயராமனுக்கு புற்றுநோய் என்றதும் இயற்கையை விரும்பும் விவசாயிகள் ஆடிப்போனார்கள். அடுத்தவருக்கு நோய் வந்துவிடக் கூடாது என்பதற்காக பாரம்பரிய நெல்லை மீட்டவருக்கே நோயா? 
  

 நெல் ஜெயராமன் சிகிச்சையில் இருக்கிறார் என்ற தகவல் அறிந்து நாம் தமிழர் கட்சி சீமான், நடிகர் சத்தியராஜ், பி.ஆர்.பாண்டியன், மரம் வளர்ப்பை ஊக்கப்படுத்தும் நீடா கிரீன் அமைப்பு ஒருங்கிணைப்பாளர் ராஜவேலு உள்ளிட்ட  பலர் நெல் ஜெயராமனை பார்த்துள்ளனர்.  எனக்கு ஒன்றுமில்லை விரைவில் குணமடைந்து வீட்டுக்கு வருவேன். வழக்கம் போல இன்னும் தேட வேண்டிய ரகங்களை தேடி விவசாயிகளிடம் கொடுத்து விதை வாங்குவேன். அழிவின் விளிம்பில் இருந்த 150 பாரம்பரிய விதைகளை மீட்டுவிட்டேன். இன்னும் பல ரகங்களை மீட்பேன் என்று மனதிடமாக பேசிக் கொண்டிருக்கிறார்.

 

n


    அவர் சிகிச்சையில் இருந்தாலும் திருத்துறைப்பூண்டியில் அவரது அலுவலகத்தில் விவசாயிகளுக்கு நெல் வழங்கிக் கொண்டு தான் இருக்கிறார்கள். 
நீடா கிரீன் ராஜவேல்.. விவசாயிகளால் கைவிடப்பட்ட பழைய பாரம்பரிய நெல் ரகங்கள் கருப்பு கவுணி, அறுபதாம் குறுவை, குள்ளக்கார், கிச்சடி சம்பா, மாப்பிள்ளை சம்பா, தூயமல்லி, குடவாலை, காட்டுயானம், கூம்பாலை, குழியடிச்சான் போன்ற 150 ரகங்களை தேடித் தேடி கண்டுபிடிச்சு சேகரிச்சு வைத்து விவசாயிகளுக்கு வழங்கி வருகிறார். நம் மக்கள் தற்போது உண்ணும் உணவால் தான் நோய்கள் அதிகமாக உருவாகிறது என்பதால் தான் இயற்கையா விளையும் நெல்லை உற்பத்தி செய்ய வேண்டும் என்று இந்த முயற்சியில் இறங்கினார். ஆனால் மற்றவர்கள் நஞ்சில்லா உணவுக்காக பாடுபட்டவருக்கு இப்படி ஒரு கொடிய நோய் வந்திருப்பது மன வருத்தம் அளிக்கிறது. ஆனாலும் அவர் மனதிடமாக இருக்கிறார். விரைவில் பூரண குணமடைந்து வந்து நெல் திருவிழா நடத்த உள்ளார் என்றார். 


    விரைவில் குணமடைந்து மேலும் பல ரகம் நெல் விதைகளை சேகரித்து விவசாயிகளிடம் வழங்கி மக்களை நஞ்சில்லா உணவு உண்ண நெல் ஜெயராமன் வர வேண்டும் என்பதே இயற்கை ஆர்வலர்களின் விருப்பமாக இருக்கிறது.


 

சார்ந்த செய்திகள்

Next Story

'வாக்கு செலுத்தினால் லைட் எரியவில்லை' - போராட்டத்தில் ஈடுபட்ட நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கைது

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
Naam Tamilar Party candidate arrested for protesting

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

அந்த வகையில் தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறவுள்ளது.  இந்நிலையில் காலை 7 மணி முதல் வாக்காள பெருமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். அதேபோன்று அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் என பலரும் தங்களின் வாக்குகளை வாக்குச்சாவடிகளில் செலுத்தி வருகின்றனர்.

தமிழகத்தில் பிற்பகல் 3 மணி நிலவரப்படி சராசரியாக 50 சதவீதத்திற்கும் மேலாக வாக்குப்பதிவு நடந்துள்ளது. இந்நிலையில் மத்திய சென்னையில் பல்லவன் இல்லத்தின் அருகே உள்ள 165 வது பூத்தில் நாம் தமிழர் கட்சிக்கு வாக்கு செலுத்தினால் லைட் எரியவில்லை என புகார் எழுந்தது. தொடர்ந்து நாம் தமிழர் கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் கார்த்திகேயன் வாக்குச்சாவடியில் பார்வையிட்டார். இது தொடர்பாக புகாரையும் எழுப்பினார். ஆனால் அவர் வாக்குச்சாவடியில் இருந்து வெளியேற்றப்பட்ட நிலையில் நாம் தமிழர் கட்சியினர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். தற்போது தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கார்த்திகேயன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். வாக்குச்சாவடியில் சர்ச்சை நீடித்த  நிலையில் திருவல்லிக்கேணி காவல் உதவி ஆய்வாளர் ஆகியோர் வாக்குச்சாவடிக்கு வருகை தந்துள்ளனர்.

Next Story

“தி.மு.க. அரசு தொடர்ந்து வேண்டாத வேலைகளில் ஈடுபட்டு வருகிறது” - சீமான் பிரச்சாரம்

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
 D.M.K. Govt continues to engage in unnecessary work says Seeman campaign

கடலூர் நாடளுமன்ற தொகுதியில்,  நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் மணிவாசகத்தை ஆதரித்து கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் சீமான் வடலூரில் நேற்று பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், “வள்ளலார் 1867ஆம் ஆண்டு ஏற்றி வைத்த அணையா அடுப்பு இன்று வரை பசிப்பிணியை போக்கி வருகிறது. வள்ளலார் சத்திய ஞான சபை பெருவெளியில் 10 லட்சம் முதல் 15 லட்சம் மக்கள் வரை நின்று வழிபட்டு வருகின்றனர். அந்த இடத்தில் திராவிட மாடல் அரசு, தோண்டி சர்வதேச மையம் அமைக்கப் போகிறது. திடீரென தி.மு.க. அரசிற்கு வள்ளலார் மீது என்ன கரிசனம். இதற்கு முன் இவர்கள் ஆட்சி செய்தார்கள்

அப்போதெல்லாம் வள்ளலாரை  தெரியவில்லையா? காரணம் இந்த சர்வதேச மையம் அமைக்க ரூ100 கோடி நிதி ஒதுக்கி, முதல்வர் ஸ்டாலின் மைத்துனர் பொறுப்பாளராக உள்ளார். சர்வதேச மையம் அமைப்பது மகிழ்ச்சி தான். ஆனால், அதனை மக்கள் கூடி வழிபடும் பெருவெளியில் அமைக்கக்கூடாது வேறு இடத்தில்  அமைத்துக் கொள்ளலாம். தேர்தல் நேரத்தில் இதனை ஏன் செய்ய வேண்டும். இன்னும் இரண்டு நாட்கள் பரப்பரை முடிந்தவுடன் இவர்கள் எப்படி தோண்டுகிறார்கள் என பார்ப்போம் .

ஏர்போர்ட் வேண்டாம் அந்த இடத்தில் விவசாயம் செய்ய வேண்டும் என்று கூறினால் ஏர்போர்ட் கட்டுவோம் என கூறுகின்றனர். இயற்கை துறைமுகங்கள் இருக்க செயற்கை துறை முகங்கள் ஏன் எனக் கேட்டால் 1111 ஏக்கரில் செயற்கை துறைமுகம் கட்டுவோம் என கூறுகின்றனர். ஏற்கெனவே வ .உ .சி., காமராஜர் பெயரில் இருக்கும் இரண்டு துறைமுகங்களில் 50 சதவீதம் வேலை இல்லாத போது செயற்கை துறைமுகம் எதற்கு? தொடர்ந்து வேண்டாத வேலைகளில் திராவிட மடல் அரசு ஈடுபட்டு வருகிறது.

சர்வதேச சமயத்தை பெருவழியில் அமைக்க வேண்டாம். அரசில் தொடர்ந்து நீங்களே நீடிக்கப் போவதில்லை. சர்வதேச  மையத்தை  பெருவெளியில் அமைத்தால் மீண்டும் பழையபடி அந்த இடத்தில் மக்கள் வழிபடும் நிலைக்கு கொண்டு வரும் வீண் செலவை எங்களுக்கு வைக்காதீர்கள்.  திருவண்ணாமலையில் சிப்காட் வேண்டாம் என மக்கள் போராட்டம் நடத்தினால் அதை அமைச்சர் எ.வ.வேலு மூலம் மீண்டும் கொண்டுவர முயற்சி செய்கின்றார். தில்லியில் போராடிய விவசாயிகளை மீது துப்பாக்கி சூடு நடத்துகிறது மோடி அரசு.

தமிழகத்தில் போராடும் மக்கள் மீது குண்டர் சட்டத்தை போட்டு அடக்குமுறையை கையாளுகிறது தி.மு.க. அரசு. இந்த இரண்டு அரசுகளுக்கும் எந்த வேறுபாடும் இல்லை. இந்தியாவில் 60 ஆண்டுகளாக காங்கிரஸ் ,பி.ஜே.பி. தான் தொடர்ந்து ஆண்டு வருகிறது. கல்வியில் தரம் உயர்ந்திருக்கிறதா? குடிநீருக்கு வழியுள்ளதா? மருத்துவ கட்டமைப்பு உயர்ந்துள்ளதா? எதுவும் இல்லை. மக்கள் துன்பம், துயரம், பசி, பட்டினி, வேலையில்லா திண்டாட்டம் என தொடர்ந்து வருகிறது.

மாற்றம், முன்னேற்றம் எதுவுமே இல்லை. இது ஒரு மாற்றத்தை கொண்டு வருவதற்கான தேர்தல். நீங்கள் சிந்தித்து வாக்களிக்க வேண்டும். கடந்த முறை 39 தொகுதியிலும் தி.மு.க. கூட்டணி வெற்றி பெற்றது. ஏதாவது மாற்றத்தை கொண்டு வந்தார்களா. இந்த தொகுதியில் படித்தவர், ஓய்வு பெற்ற தலைமையாசிரியர், ஆசிரியர் சங்கத் தலைவராக இருந்தவர் மணிவாசகம்  வேட்பாளராக இருக்கிறார். சிந்தித்துப் பார்த்து  அவருக்கு மைக் சின்னத்தில் வாக்களிக்க வேண்டும்” என்றார்.

நாம் தமிழர் கட்சி தொகுதி தலைவர் ராமச்சந்திரன், மாவட்ட நிர்வாகி சீனிவாசன், சுமதி உட்பட பலர் கலந்து கொண்டனர்