Skip to main content

வழிவிடாத பக்கத்து வீட்டார்... இறந்தவர் உடல் 3 நாட்களுக்கு பின்னர் தகனம்..!

Published on 08/04/2021 | Edited on 08/04/2021

 

neighbour not give a way so after 3 days later the body was cremated

 

தமிழ்நாட்டில் ஒவ்வொரு கிராமத்திலும் மயானச் சாலைகள் என்பது ஆக்கிரமிப்புகளால் தடைபட்டிருப்பதால், பல இடங்களில் பிரச்சினைகள் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன. புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி தாலுகா, சேந்தாக்குடி ஊராட்சி கீழையூர் வெள்ளைக்கொல்லை கிராமத்தைச் சேர்ந்தவர் முத்தையா மகன் துரைச்சாமி(43).

 

விவசாயியான இவர், நேற்று முன்தினம் (06.04.2021) இரவு 7 மணிக்கு உயிரிழந்தார். அவரது உறவினர்கள் துக்கம் விசாரித்தனர். மேலும் நேற்று அவரது உடலை அடக்கம் செய்வதற்காக  சடலத்தை மயானத்திற்கு கொண்டு செல்ல முயன்றபோது, அருகில் உள்ள வீட்டினர் சடலத்தை தூக்கிச் செல்ல வழிவிடாததால், இன்றுவரை சடலம் அவரது வீட்டு வாசலிலேயே வைக்கப்பட்டது. 

 

neighbour not give a way so after 3 days later the body was cremated

 

இந்த நிலையில், இன்று காலை அவரது உறவினர்கள் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுக்கச் சென்று, கோட்டாட்சியரிடம் மனு கொடுத்தனர். உடனடியாக அதிகாரிகள் மற்றும் போலீசார், இறந்தவரின் உறவினர்களிடம் சமதானப் பேச்சுவார்த்தை நடத்திய பிறகு, அதிகாரிகள் முன்னிலையில் சடலத்தை தூக்கிச் செல்ல உடன்பாடு ஏற்பட்டது. ஆனால் துக்க வீட்டில் ஒரு சிலர் தவிற வேறு உறவினர்கள் கூட இல்லை. 

 

இதேபோல சாலை வசதி இல்லாத பல கிராமங்களில் வசிக்கும் மக்கள், ஒவ்வொரு இறப்பின்போதும் இப்படி அவதிப்படுவது வழக்கமாக உள்ளது. அதனால் ஒவ்வொரு குடியிருப்பு பகுதிக்கும் அதிகாரிகளே சாலை வசதிகளை ஏற்படுத்திக்கொடுத்தால் இதுபோன்ற பிரச்சினைகளைத் தவிர்க்கலாம்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

காவு வாங்கிய குளம்; கிராமத்தையே சோகத்தில் ஆழ்த்திய சிறுவர்களின் உயிரிழப்பு

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
 The pool of water; The lost their live of the boys left the village in mourning

கடலூரில் குளத்தில் இறங்கி குளிக்க முயன்ற இரண்டு சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே உள்ளது நந்தீஸ்வர மங்கலம். இந்தக் கிராமத்தில் வசித்து வந்த ராமமூர்த்தி என்பவருக்கு இரண்டு மகன்கள் இருந்தனர். திலீப் ராஜ்(16), தினேஷ்(14) ஆகிய இரு மகன்களும் வெளியூரில் விடுதியில் தங்கி படித்து வந்தனர். இந்த நிலையில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்திருந்தனர்.

சிறுவர்கள் திலீப் ராஜ் மற்றும் தினேஷ் ஆகியோர் வீட்டுக்கு அருகே உள்ள குளத்தில் குளிக்க சென்றுள்ளனர். அப்பொழுது ஆழமான பகுதிக்கு இருவரும் குளிக்கச் சென்றதாக கூறப்படுகிறது. இதில் நீரில் மூழ்கி இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். குளத்துக்கு குளிக்கச் சென்ற சிறுவர்கள் காணாமல் போனதால் பதறியடித்த பெற்றோர் காவல்துறைக்கு தகவல் அளித்தனர். உடனடியாக மீட்பு படையினர் வரவழைக்கப்பட்டு குளத்தில் இறங்கி தேட ஆரம்பித்தனர். பின்னர், வெகு நேரத்திற்கு பின் இருவரின் உடலையும் கைப்பற்றிய மீட்புப்படையினர் உடல்களை கரைக்கு கொண்டு வந்தனர். சிறுவர்களின் உடல்களை பார்த்து பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர். உயிரிழந்த சிறுவர்கள் இருவரின் உடலும் காட்டுமன்னார் கோவில் அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

விடுதியில் தங்கிப் படித்து வந்த சிறுவர்கள் விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்த நிலையில் குளத்தில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Next Story

18 மாவோயிஸ்டுகள் பலி; சத்தீஸ்கரில் பரபரப்பு!

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
nn

சத்தீஸ்கர் மாநிலத்தில் 18 மாவோயிஸ்டுகள் சுட்டுக் கொலை செய்யப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

சத்தீஸ்கர் மாநிலம் கன்கர் மாவட்டத்தில் நக்சலைட்டுகள் மற்றும் பாதுகாப்பு படைகளுக்கு இடையே துப்பாக்கிச் சூடு நடைபெற்றது. இதில் மொத்தமாக 18 மாவோயிஸ்டுகள் சுட்டுக்கொலை செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இந்தத் தாக்குதலில் பாதுகாப்புப் படையைச் சேர்ந்த மூன்று வீரர்கள் படுகாயம் அடைந்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

மொத்தமாக 18 மாவோயிஸ்டுகளின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. அவர்கள் பயன்படுத்திய துப்பாக்கிகள், மெஷின் கன்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதில் ஒரே ஒரு எல்லை பாதுகாப்பு வீரரின் காலில் துப்பாக்கி குண்டு பாய்ந்து இருப்பதாகவும் ஆனால் உயிருக்கு எந்தவிதமான சேதம் இல்லை என்று தகவல் வெளியாகியுள்ளது. தேர்தல் நேரத்திற்கு முன்பாக நடைபெற்ற தாக்குதல் சம்பவத்தில் 18 மாவோயிஸ்டுகள் கொலை செய்யப்பட்டிருப்பது முக்கிய சம்பவமாக பார்க்கப்படுகிறது.  நக்சலைட்டுகள் ஆதிக்கம்  அதிகம் இருக்கும் சத்தீஸ்கரில் இந்தச் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.