Skip to main content

சாலைப்பணியாளர் சடலத்தை ஒன்றரை மணி நேரம் வாசலிலேயே நிறுத்திய அலட்சிய அரசு மருத்துவமனை!

Published on 26/04/2021 | Edited on 26/04/2021

 

The negligent pattukottai government hospital

 

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி தாலுகா புள்ளாண்விடுதி கிழக்கு கிராமத்தைச் சேர்ந்த புண்ணியநாதன். சாலைப்பணியாளரரான இவரும் இவர் மனைவி ஷோபனாவும் திங்கள் கிழமை மாலை தஞ்சை மாவட்டம் பேராவூரணி வட்டம் செருவாவிடுதி கிராமத்தில் உள்ள தங்கள் உறவினர் வீட்டுக்கு ஒரு மோட்டார் சைக்கிளில் சென்றனர். மீண்டும் புள்ளாண்விடுதிக்கு திரும்பி வந்துகொண்டிருந்தனர். அப்பொழுது புதுக்கோட்டை மாவட்டம் திருவரங்குளம் அருகில் உள்ள பூவரசக்குடி கிராமத்தைச் சேர்ந்த இருவர் சென்ற கார் நேருக்கு நேர் மோதிய விபத்தில் தூக்கி வீசப்பட்ட சாலைப்பணியாளர் புண்ணியநாதன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். 

 

விபத்து ஏற்படுத்திய இருவர் தப்பிச் சென்றுவிட்டனர். படுகாயமடைந்த ஷோபனா ஆபத்தான நிலையில் பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று பின்னர் அங்கிருந்து தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

 

The negligent pattukottai government hospital

 

தொடர்ந்து ஆம்புலன்ஸ் கிடைக்காததால் இறுதி ஊர்வலத்தில் சடலம் ஏற்றும் வாகனத்தில் சாலைப்பணியாளர் புண்ணியநாதன் உடல் பிரேதப் பரிசோதனைக்காக பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால் மருத்துவமனைக்கு விபத்தில் இறந்தவரின் சடலம் பிரேதப்பரிசோதனைக்கு கொண்டுவரப்படும் தகவலை போலீசார் தெரிவிக்கவில்லை என்று அரசு மருத்துவமனை நுழைவாயிலிலேயே புண்ணியநாதன் சடலத்தை ஏற்றி வந்த வாகனத்தை சுமார் ஒன்றரை மணி நேரம் இறக்க அனுமதிக்காமல் நிறுத்தி வைத்துள்ளனர். சம்பவம் குறித்து தகவல் அறிந்து புண்ணியநாதன் உறவினர்கள் மருத்துவமனையில்  திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. உறவினர்கள் சாலை மறியல் செய்ய முயன்றனர். அதன்பிறகு சடலம் பிணவறையில் இறக்கி வைக்கப்பட்டுள்ளது.

 

The negligent pattukottai government hospital

 

விபத்தில் இறந்த ஒருவரின் சடலத்தை போலீசார் தகவல் சொல்லவில்லை என்பதால் வாகனத்திலேயே நிண்ட நேரம்  நிறுத்தி வைத்திருந்த அவலமான சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் குறித்து மாவட்ட நிர்வாகம் விசாரணை செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கிறார்கள் உறவினர்கள்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

குடும்ப கட்டுப்பாடு செய்த பெண் திடீர் மரணம்; கணவர் பரபரப்பு புகார்!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Family planning woman passed away suddenly

ஈரோடு மாவட்டம், பவானிசாகர் அருகே உள்ள கோடேபாளையத்தைச் சேர்ந்தவர் பன்னீர் செல்வம் (30). இவரது மனைவி துர்கா (27). கடந்த 2018ல் இருவருக்கும் திருமணமானது. இவர்களுக்கு நான்கரை வயதில் ஆண் குழந்தை உள்ளது.

இந்த நிலையில், 2-வது பிரசவத்துக்காக கடந்த 20ம் தேதி துர்காவை புளியம்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்தனர். அன்றைய தினம் மதியம் சுக பிரசவத்தில் குழந்தை பிறந்தது. அவரது குடும்பத்தினர் அருகில் இருந்து கவனித்துக் கொண்டனர். தொடர்ந்து, நேற்று முன் தினம் காலை துர்காவுக்கு குடும்பக் கட்டுப்பாடு ஆபரேசன் செய்யப்பட்டது. மாலையில் அவருக்கு 106 டிகிரி அளவுக்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து ரத்தப் போக்கும் ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து மருத்துவர்கள், உயர் சிகிச்சைக்காக துர்காவை கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த துர்கா, சிகிச்சை பலனின்றி நேற்று காலையில் உயிரிழந்தார்.

இதையடுத்து, தனது மனைவிக்கு குடும்பக் கட்டுப்பாடு செய்த மருத்துவர்கள் தவறான சிகிச்சையளித்தன் காரணத்தால் தான் தன் மனைவி இறந்துவிட்டார். எனவே, உரிய முறையில் பிரேத பரிசோதனை செய்து, சம்பந்தப்பட்ட மருத்துவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கணவர் பன்னீர் செல்வம், புளியம்பட்டி போலீசில் புகார் தெரிவித்துள்ளார். அதன்பேரில், போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story

அரசு மருத்துவமனையில் வீசும் துர்நாற்றம்; நோயாளிகள் குற்றச்சாட்டு

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Bad smell wafting from Vaniyambadi Government Hospital

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி பெருமாள்பேட்டை பகுதியைச்  சேர்ந்தவர் சத்யா (30). கர்ப்பிணியான சத்யாவின் கரு கலைந்துள்ளது. இதனால் கடந்த வெள்ளிகிழமை அன்று மிகுந்த வயிற்று வலி ஏற்பட்டு உடல் நிலை சரியில்லாமல் சிகிச்சைக்காக வாணியம்பாடி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர் கருக்கலைப்பு ஏற்பட்டுள்ளதாகவும்  மேலும் மருத்துவமனையில்  சேர்ந்து வயிற்றை முழுவதுமாக சுத்தம் செய்ய வேண்டும் என கூறியுள்ளார்கள்.

இதனைத் தொடர்ந்து, கடந்த வெள்ளிக்கிழமை சிகிச்சைக்காக உள்நோயாளியாக சேர்க்கப்பட்டுள்ளார்.அதே வார்டில் சுமார் 7 நோயாளிகள் உள் நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களை பரிசோதித்த மருத்துவர்கள் தினமும் காலையில் ஒரு ஊசியும் மாலையில் ஒரு ஊசியும் செலுத்தி விட்டு மாத்திரைகள் கொடுத்துவிட்டு செல்வதாகவும் நேற்று வரை வயிற்றை சுத்தம் செய்து உரிய சிகிச்சை அளிக்க எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் குற்றம் சாட்டியுள்ளார்.

அனுமதிக்கப்பட்டுள்ள மருத்துவமனை வார்டில் கட்டில்கள் மேலிருக்கும் போர்வைகள் சரியாக சுத்தம்  செய்யப்படாமல் ரத்தக் கரையுடன் இருப்பதாகவும் தங்கியுள்ள அறையின் கழிவறையிலிருந்து அதிகப்படியான துர்நாற்றம் வீசுவதால்,  அறையில் உள்ள அனைவரும்  துர்நாற்றம் தாங்க முடியாமல் இரவு நேரத்தில் மருத்துவமனை வளாகத்தில் அமர்ந்து உணவு உண்பதும்  உறங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. மாவட்ட நிர்வாகம் தலையிட்டு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நோயாளிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.