Skip to main content

‘முதுகலை நீட் கலந்தாய்வினை விரைந்து முடித்திட வேண்டும்’ - பிஜி மருத்துவர்கள் போராட்டம்!

Published on 03/12/2021 | Edited on 03/12/2021

 

இன்று (03.12.2021) சென்னை மருத்துவக் கல்லூரி வளாகத்தில் மருத்துவ முதுகலை நீட் கலந்தாய்வினை விரைந்து முடித்திட வேண்டி மருத்துவக் கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், கடந்த நான்கு நாட்களாக டெல்லி, ஆந்திரா, கர்நாடகா, கேரளா போன்ற பல மாநிலங்களில் உள்ள பிஜி மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். இந்நிலையில், சென்னையில் போராட்டத்தின்போது இரண்டாம் ஆண்டு பொதுநிலை மருத்துவ மாணவர் மகேஷ் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

 

அப்போது அவர் பேசியதாவது, “முதுகலை நீட் கலாந்தாய்வினை உடனே நடத்த வேண்டும் என வலியுறுத்தி நாங்கள் அனைவரும் இங்கு கூடியிருக்கிறோம். கடந்த நான்கு நாட்களாக அகில இந்திய அளவில் டெல்லி, கொல்கத்தா, ஆந்திரா, கர்நாடகா, கேரளா போன்ற அனைத்து மாநிலங்களிலும் உள்ள பிஜி மருத்துவர்கள் அனைவரும் இதுபோன்ற ஸ்ட்ரைக்ல இருக்கிறோம். இதில் உள்ள பிஜி மருத்துவர்களாகிய நாங்கள் அனைவரும் புறநோயாளிகள் பிரிவுகளுக்குப் பணிகளுக்குச் செல்லாமல் இங்கிருக்கிறோம். இந்தக் கோரிக்கையை நாங்கள் முன்வைக்கிற காரணம் என்னவென்றால், நீட் பிஜி கலந்தாய்வு கடந்த ஒரு வருடமாக நடைபெறவில்லை.

 

வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் அந்த வழக்கை மேலும் தள்ளிவைத்திருக்கிறார்கள். அப்படிப் பார்த்தால் இந்தியா முழுவதும் 60% மருத்துவர்கள் மட்டும்தான் பணியில் இருக்கிறார்கள். மீதம் உள்ள 40% மருத்துவர்கள் கடந்த ஓராண்டாக வரவில்லை. இதனால் இங்கு பணி செய்யும் மருத்துவர்களுக்குப் பணிச் சுமையும், மன அழுத்தமும் மிக அதிகமாக இருக்கிறது. ஆனால் இந்த 40% மருத்துவர்கள் பணிக்கு வந்தால் மட்டும்தான் மக்களுக்குக் கிடைக்க வேண்டிய நலன் இன்னும் அதிகமாக கிடைக்கும். அதேபோல் இதனால் எந்தவிதத்திலும் அவசர சிகிச்சைப் பிரிவு பாதிக்கவில்லை.

 

எங்களுடைய கோரிக்கையே, இன்னும் ஒருவார காலத்தில் இந்தக் கலந்தாய்வினை போர்க்கால அடிப்படையில் விரைவாக நடத்தி, மாணவர்களைச் சேர்த்து, மருத்துவர்களின் பணிச்சுமையைக் குறைத்து மக்களுக்குக் கிடைக்கக் கூடிய ஹெல்த் கேர் குறையக் கூடாது என்பதுதான். அதுபோக இப்ப கரோன மூன்றாவது அலை வரக்கூடிய எல்லா அறிகுறிகளும் இருக்கிறது. அப்படி கரோனா மூன்றாவது அலை வந்தால் எவ்வளவுதான் ஐசியு, பெட் என தயார் செய்தாலும் பார்க்கிறதுக்கு மருத்துவர்கள் ரொம்ப ரொம்ப பற்றாக்குறையாக இருக்கும். அந்தப் பற்றாக்குறையை சரி செய்வதற்காகவாது இந்தக் கலாந்தாய்வினை வேகமாக நடத்தி மருத்துவர்களைப் பணிக்கு அமர்த்த வேண்டும் என்பதுதான் எங்களுடைய கோரிக்கை” என தெரிவித்தார்.  

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'வேதனையாக இருக்கிறது' - ஏமாற்றத்துடன் வீடியோ வெளியிட்ட நடிகர் சூரி

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
 'It's painful' - Suri who came to vote and returned disappointed

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

அந்த வகையில் தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறவுள்ளது.  இந்நிலையில் காலை 7 மணி முதல் வாக்காள பெருமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். அதேபோன்று அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் என பலரும் தங்களின் வாக்குகளை வாக்குச்சாவடிகளில் செலுத்தி வருகின்றனர்.

தமிழகத்தில் பிற்பகல் 3 மணி நிலவரப்படி சராசரியாக 50 சதவீதத்திற்கும் மேலாக வாக்குப்பதிவு நடந்துள்ளது. இந்நிலையில் சென்னையில் வாக்களிக்க வந்த நடிகர் சூரியின் பெயர் வாக்காளர் பட்டியலில் இல்லாததால் அவர் வாக்களிக்காமலேயே திரும்பிச் சென்றார். வெளியே வந்த அவர் வாக்குச்சாவடி முன்பு நின்று பேசி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில், ''கடந்த எல்லா தேர்தலிலும் கரெக்டா என்னோட உரிமையை செலுத்தி கொண்டிருக்கிறேன். ஆனால் இந்த தடவை இந்த பூத்தில் என்னுடைய பெயர் விடுபட்டு போய்விட்டது என்கிறார்கள். என்னுடைய மனைவியின் ஓட்டு இருக்கிறது. ஆனால் என்னுடைய ஓட்டு இல்லை. என்னுடைய ஓட்டு விடுபட்டுப் போச்சு என்கிறார்கள். இருந்தாலும் 100% ஜனநாயக உரிமையை ஆற்றுவதற்காக வந்தேன். அது நடக்கவில்லை என்பது மன வேதனையாக இருக்கிறது. நினைக்கும் போது மனசு கஷ்டமாக இருக்கிறது. இது எங்கு யாருடைய தவறு என்று தெரியவில்லை. இருந்தாலும் ஓட்டு போட்டுவிட்டு ஓட்டு போட்டேன் என்று சொல்வதை விட ஓட்டு போடவில்லை என்ற வேதனையை நான் சொல்கிறேன். எல்லாருமே 100% ஓட்டு போட வேண்டும். அது நம்ம நாட்டுக்கு நல்லது. தவறாமல் எல்லாரும் வாக்கை செலுத்தி விடுங்கள். நான் அடுத்த எலெக்ஷனில் என்னுடைய வாக்கை செலுத்துவேன் என்று நம்புகிறேன்'' என்றார்.

Next Story

சென்னையில் வாக்குப்பதிவு மந்தம்

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
nn

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

அந்த வகையில் தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறவுள்ளது.  இந்நிலையில் காலை 7 மணி முதல் வாக்காள பெருமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். அதேபோன்று அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் என பலரும் தங்களின் வாக்குகளை வாக்குச்சாவடிகளில் செலுத்தி வருகின்றனர்.

தமிழகத்தில் பிற்பகல் 3 மணி நிலவரப்படி சராசரியாக 50 சதவீதத்திற்கும் மேலாக வாக்குப்பதிவு நடந்துள்ளது. நாமக்கல் தொகுதியில் பகல் 3 மணி நிலவரப்படி 59.55 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. நாகையில் 54.07 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. மயிலாடுதுறையில் 50.91% வாக்குகள் பதிவாகியுள்ளது. திருச்சி மக்களவைத் தொகுதியில் 49.27% வாக்குகள் பதிவாகியுள்ளது. அதிகபட்சமாக சேலம் தொகுதியில் 60.05 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. கரூரில் 59.56 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் 53.02 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. வேலூர் மக்களவைத் தொகுதியில் 51.19 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. புதுச்சேரியில் 58.97 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. இவை அனைத்தும் பிற்பகல் 3 மணி அளவில் வாக்குப்பதிவு நிலவரங்கள் ஆகும்.

சென்னையில் உள்ள மூன்று தொகுதிகளிலும் வாக்குப்பதிவு மந்தமாகவே நடைபெற்று வருகிறது. மத்திய சென்னையில் 37.62% வாக்குகள் பதிவாகியுள்ளது. வடசென்னையில் 39.67 சதவீத வாக்குகள் மட்டுமே பதிவாகியுள்ளது. தென் சென்னையில் 40.98 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. தமிழகத்தில் சராசரியாக  வாக்குப்பதிவு  50 சதவீதத்தை தாண்டிய நிலையில் சென்னையில் சராசரி வாக்குப்பதிவு 40 சதவிகிதத்திற்கும் குறைவாகவே உள்ளது.