
நீட்தேர்வில்ஓ.எம்.ஆர் விடைத்தாள் முறைகேடு தொடர்பாக சி.பி.சி.ஐ.டி விசாரணைக்கு சென்னைஉயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நீட்தேர்வில், இணையதளத்தில் வெளியானஓ.எம்.ஆர் விடைத்தாளில்தனது மதிப்பெண் மாற்றப்பட்டுள்ளதாக மனோஜ்என்றமாணவர்சென்னைஉயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்திருந்தார். இந்த வழக்கு நீதிபதி புகழேந்திமுன்பு விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கில், சைபர்கிரைம்நிபுணத்துவம் பெற்ற அதிகாரிகளைக் கொண்டகுழு இதுகுறித்து யார் மீதும்வழக்குப் பதிவுசெய்யாமல் ஆரம்பகட்டவிசாரணையை மட்டும் நடத்த வேண்டும் எனக் கூறிசி.பி.சி.ஐ.டி விசாரணைக்குநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த முறைகேடு தொடர்பாகசி.பி.சி.ஐ.டி விசாரித்து, நீதிமன்றத்தில் தாக்கல் செய்யும் அறிக்கையைப் பொறுத்து சம்பந்தப்பட்டவர்கள் மீது வழக்குப் பதிவுசெய்ய உத்தரவிடப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.
Follow Us