Skip to main content

ஆசிரியையின் அர்ப்பணிப்பு... நீட் தேர்வில் வெற்றிபெற்ற அரசு பள்ளி மாணவன்!

Published on 18/10/2020 | Edited on 18/10/2020
neet exam result 2020

 

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் ஜக்கம்மாபேட்டை பகுதியை சேர்ந்தவர் சபரிமாலா. திண்டிவனம் அருகில் உள்ள வைரபுரம் அரசு பள்ளியில் ஆசிரியையாக பணி செய்து வந்தார். நீட் தேர்வால் டாக்டராக முடியாத விரக்தியில் தற்கொலை செய்து கொண்ட குழுமூர் அனிதாவின் நிலையைக் கண்டு கொதித்து எழுந்த ஆசிரியை சபரிமாலா தனது ஆசிரியப் பணியை ராஜினாமா செய்தார்.

தமிழகம் முழுவதும் அரசு பள்ளிகளில் படிக்கும் ஏழை மாணவ மாணவிகளின் கல்விக்கு பல்வேறு வகையில் உதவி செய்து வருகிறார் .பெண்கள் விடுதலை இயக்கத்தை துவக்கி நடத்தி வருகிறார். பெண்களுக்கு எதிராக நடைபெறும் சம்பவங்களை நேரடியாகச் சென்று பாதிக்கப்பட்ட பெண்களுக்காக போராடி வருகிறார். அதேபோன்று வரலாற்று சிறப்புமிக்க பழைமையான  நிகழ்வுகளை  கல்வெட்டுகளை ஆதாரங்களுடன் எடுத்துக் கூறி அதை பாதுகாப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்.

அப்படிப்பட்ட ஆசிரியர் சபரிமாலாவின் மாணவன் ஜீவித் குமார் அதிக மதிப்பெண் எடுத்து நீட் தேர்வில் வெற்றி பெற்றுள்ளார். இந்த மாணவர் வெற்றி பெறுவதற்கு உறுதுணையாக இருந்துள்ளார் ஆசிரியை சபரிமாலா. நீட் தேர்வு ரத்து செய்ய வேண்டும்என்பதற்காக நடைபெற்ற போராட்டத்தின்போது மாணவர் ஜீவிதனை அடையாளம் கண்டு மருத்துவத்தின் மீது உள்ள ஆர்வத்தை புரிந்து கொண்டு பல இடங்களில் உதவிகளைப் பெற்று அதன் மூலம் கடந்த ஒரு ஆண்டாக நாமக்கல்லில் உள்ள நீட் பயிற்சி மையத்தில் படிப்பதற்கு உதவி செய்துள்ளார். தற்போதைய நீட்தேர்வு வில் மாணவன் ஜீவிதன் 664 மதிப்பெண்கள் பெற்று தேசிய அளவில் அரசு பள்ளி மாணவர்களில் ஜீவிதன் முதலிடம் பெற்றுள்ளார். தனது டாக்டர் படிக்கும் கனவை ஆசிரியை சபரிமாலா நிறைவேற்றி உள்ளதாக அவருக்கு நன்றி தெரிவித்து உள்ளார் மாணவர் ஜீவிதன்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

நீட் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு; தேசிய தேர்வு மையம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

Published on 09/03/2024 | Edited on 09/03/2024
Important notification For students appearing for NEET

2024 ஆம் ஆண்டு நடைபெற உள்ள மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான இளங்கலை நீட் நுழைவுத் தேர்வுக்காக விண்ணப்பம் செய்வதற்கான கால அவகாசத்தை நீட்டித்து தேசியத் தேர்வு மையம் அறிவித்துள்ளது.

2024 - 25 ஆம் கல்வியாண்டிற்கான இளநிலை மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்வு (2024) மே மாதம் 5 ஆம் தேதி நடைபெறும் எனத் தேசியத் தேர்வு முகமை ஏற்கனவே அறிவித்திருந்தது. தேர்வுக்கான தேதி அறிவிக்கப்பட்டு பல மாதங்கள் ஆகிவிட்ட நிலையில், தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் எனத் தேசிய தேர்வு மையம் தெரிவித்திருந்தது. 

அதன்படி, கடந்த பிப்ரவரி 2 ஆம் தேதி முதல், மார்ச் 9 ஆம் தேதி இரவு 9 மணி வரை நீட் தேர்வு எழுதும் மாணவ - மாணவிகள் ஆன்லைன் வழியாக விண்ணப்ப பதிவை மேற்கொள்ளலாம் எனத் தெரிவித்திருந்தது. இந்த நிலையில், இன்றுடன் கால அவகாசம் நிறைவடைய இருந்த நிலையில், மார்ச் 6 ஆம் தேதி வரை நீட்டித்துள்ளதாக தேசிய தேர்வு மையம் அறிவித்துள்ளது. மேலும், https://exams.nta.nic.in/NEET என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைன் விண்ணப்பப் படிவத்தை சமர்ப்பிக்கலாம் எனத் தெரிவித்துள்ளது. நீட் தகுதி தேர்வுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் மற்றும் தகவல் தொகுப்பு கையேடு இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

Next Story

அரசுப் பள்ளி உணவில் அரணை; 92 மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி

Published on 12/02/2024 | Edited on 12/02/2024
Food unsecurity in government school; 92 students admitted to hospital

சிதம்பரம் அருகே சாக்கான்குடி கிராமத்தில் அரசு உயர்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் சாத்தங்குடி மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் இருந்து 200க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ - மாணவிகள் பயின்று வருகிறார்கள். இந்நிலையில் பள்ளியில் பிப்ரவரி 12 ஆம் தேதி திங்கட்கிழமை மதிய உணவு பரிமாறப்பட்டது. இதனைத் தொடர்ந்து மாணவ மாணவிகளுக்கு மயக்கம் ஏற்பட்ட நிலையில், பள்ளியின் ஆசிரியர்கள் அவர்களை அழைத்து உள்ளூர் மருத்துவமனையில் சிகிச்சை அளித்துள்ளனர்.

தொடர்ந்து மாணவர்கள் அதிகமானோர் மயங்கியதால் பெற்றோர்கள் பள்ளியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அதனைத் தொடர்ந்து நடந்த சோதனையில் உணவில் அரணை விழுந்தது தெரியவந்தது. சிதம்பரம் அரசு மருத்துவமனை, புவனகிரி  மருத்துவமனை, சிதம்பரத்தில் உள்ள கடலூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் குறிஞ்சிப்பாடி அரசு மருத்துவமனை உள்ளிட்ட மருத்துவமனைகளில் 92 மாணவ மாணவிகள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மாணவ - மாணவிகளுக்கு ஆபத்து இல்லை என மருத்துவர் தரப்பில் கூறப்படுகிறது.

Food unsecurity in government school; 92 students admitted to hospital

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட குழு உறுப்பினர் வாஞ்சிநாதன் தலைமையில் சாத்தங்குடி அரசு உயர்நிலைப் பள்ளியில் உள்ள சேதமடைந்த உணவுக் கூடத்தை சரி செய்ய வேண்டும். சம்பந்தப்பட்ட சமையலர்கள் உள்ளிட்ட ஆசிரியர்களை விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசுப் பள்ளி உணவுக் கூடங்களைத் திடீரென ஆய்வு மேற்கொண்டு குறைகளுக்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி கடலூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வாயிலில் உள்ள சிதம்பரம் - பிச்சாவரம் சாலையில் மறியல் போராட்டம் நடைபெற்றது.

காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களைக் கலைந்து போகச் செய்தனர். இதனைத் தொடர்ந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு உறுப்பினர் ரமேஷ் பாபு, நகரச் செயலாளர் ராஜா உள்ளிட்ட கட்சியின் முக்கிய நிர்வாகிகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மாணவர்களைச் சந்தித்து ஆறுதல் கூறி அவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தனர்.