Skip to main content

நீட் தேர்வு ஆர்ப்பாட்டமும்...  ஆதங்கமும்!!

Published on 13/09/2020 | Edited on 14/09/2020

 

 

செப்.12 அன்று மூன்று மாணவர்களின் உயிர் பலி வாங்கிய நீட் தேர்வு, மறுநாளான இன்று நடைபெற்று முடிந்தது.

 

நெல்லை மாவட்டத்தில் தேர்வு செய்யப்பட்ட 17 மையங்கள், தென்காசி மாவட்டத்தின் மூன்று என்று 20 மையங்களில் 7500 மாணவ மாணவியர் நீட் தேர்வுக்காக குறிப்பிட்டபடி காலை 11.30 மணிக்கே சம்பந்தப்பட்ட சென்டர்களில் ஆஜரானார்கள். வழக்கப்படி மாணவர்கள் முழுக்கை சட்டை அணியக்கூடாது. மாணவிகள் செயின் மற்றும் காதுத் தோடுகளுக்கும் தடை செய்யப்பட்டிருந்தது. மாணவிகள் கொண்டை ஜடை இல்லாமல் விரித்த தலையுடன் அனுப்பப்பட்டனர்.

 

ஆரம்பக்கட்டங்களில் சென்டருக்குள் மாணவ மாணவியர் செல்லும் முன்பாக அவர்களின் ஹால் டிக்கெட் மற்றும் ஆதார் கார்டுகள் சோதனையிடப்பட்டன. பின்பு உள்ளே அனுமதிக்கப்பட்டவர்கள் மையத்தின் முன்னே அவர்களின் முகக்கவசம் வெப்பநிலை சரிபார்க்கப்பட்டதுடன் சானிடைசர் கொண்டு கைகளை சுத்தம் செய்த பிறகே மையத்தின் உள்ளே அனுமதிக்கப்பட்டனர். 

 

குறிப்பாக தென்காசி மாவட்டத்தின் சங்கரன்கோவில் பக்கம் வடக்கு புதூரில் ஒன்றரை கிலோமீட்டர் தொலைவிலுள்ள வேல்ஸ் பப்ளிக் பள்ளியின் சென்டர் காட்டுப் புறத்தில் உள்ளது.

 

மதியம் 2-5 மணி தேர்வுக்காக காலை 9 மணிக்கே சென்ற 204 மாணவ மாணவியர்கள் அந்த பள்ளியின் முன்னே அமர வசதி இல்லாததால் பக்கத்திலுள்ள முட்தரை மற்றும் வேலி புதர் மரக்காடுகளின் முன்னே அமர்ந்து தான் காலை உணவை அருந்த வேண்டிய கொடுமையும் நடந்தேறியிருக்கிறது. மழை வந்தாலும் காற்றடித்தாலும் காட்டுப்புறத்திலுள்ள முள் மரங்களில்தான் ஒண்டவேண்டிய நிலை.

 

இந்த சூழல் 'கெட்டப்பே' பல மாணவ மாணவியரின் மனதை பாதித்திருக்கிறது. மாணவிகளின் அந்தச் சூழலை நமது போட்டோகிராபர் படமாக்கிக்கொண்டிருந்தபோது அதைத்தடுக்க பரபரவென்று வந்த சங்கரன்கோவில் தாலுகா காவல் நிலைய எஸ்.ஐ. விமலா படமெடுக்கக்கூடாது என்று நமது போட்டோகிராபரை அரட்டி விரட்ட, நாங்கள் செண்ட்டரினுள் வரவில்லை. வெளியே காட்டுப்புறத்தில் படமெடுப்பதற்கு தடையா என்று கேட்டும், அவர் விரட்டலை விடவில்லை. உயரதிகாரியின் தலையீட்டின் பிறகே அந்த எஸ்.ஐ  அங்கிருந்து கிளம்பினார்.

 

இதனிடையே நீட் தேர்வை எதிர்த்து பாளை பெரியார் சிலை முன்பு திராவிட தமிழர் கட்சியின் மாநிலத் தலைவர் கதிரவன் தலைமையிலும், மக்கள் அதிகார அமைப்பினரும் ஆர்ப்பாட்டம் செய்தனர். சேரன்மாதேவியின் ஸ்கேட் கல்வி நிறுவனத்தின் மையம் முன்னே நீட் தேர்வை எதிர்த்து சி.பி.ஐ. யின் இளைஞர் பெருமன்றத்தின் மாவட்ட தலைவர் பாலன் தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில், "நீட் தேர்வை ரத்து செய். மாணவர்களை தற்கொலைக்கு தூண்டாதே" என்று கோஷமிட்டனர். போராட்டமும் பரபரப்புமாகக் காணப்பட்டது நீட் தேர்வுக் களம்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

திருமணத்தை மீறிய உறவு; பெண்ணை பெட்ரோல் ஊற்றி எரித்த நடத்துநர்

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Conductor who doused woman with petrol and her in Krishnagiri

கிருஷ்ணகிரியைச் சேர்ந்தவர் திருப்பதி. இவரது மனைவி சிவகாமி(பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவருக்கும் கிருஷ்ணகிரி பாத்திமா நகரைச் சேர்ந்த அரசு பேருந்து நடத்துனர் மாதவன் என்பவருக்கும் கடந்த ஐந்து ஆண்டுகளாக திருமணத்தை மீறிய உறவு இருந்துள்ளது. இந்த நிலையில் மாதவனுக்கு வேறு சில பெண்களுடன் தொடர்பு  இருப்பதாக கருதிய லட்சுமி மாதவன் உடனான உறவை துண்டித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து மாதவன் சிவகாமிக்கு தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று இரவு வீட்டிற்கு வெளியே சென்று லட்சுமியைப் பின் தொடர்ந்து வந்த மாதவன் சிவகாமியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். மேலும் தன்னுடன் பேசுமாறு வற்புறுத்தியுள்ளார். ஆனால்   இதற்குச் சிவகாமி மறுப்பு தெரிவிக்க, ஆத்திரமடைந்த மாதவன் சிவகாமி மீது பெட்ரோலை ஊற்றி உயிரோடு எரித்துள்ளார். பின்னர் வீட்டின் அருகே உள்ள முட்புதிரில் தீயில் கருகி நிலையில் உயிருக்கு போராடி கொண்டிருந்த சிவகாமியைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக அவரை மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இந்த நிலையில் இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் சிவகாமிடம் விசாரணை செய்ததில் மேற்கண்ட விவரங்கள் தெரியவந்துள்ளது. இதை அடுத்து மாதவன் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

Next Story

தீ விபத்து; பலி எண்ணிக்கை 6 ஆக உயர்வு!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
incident for hotel near Patna Railway Station Bihar

பீகார் மாநிலம் பாட்னா ரயில் நிலையம் அருகே உள்ள ஹோட்டலில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு படை வீரர்கள் தீயை அணைக்கும் பணியிலும், மீட்புப் பணியிலும் ஈடுபட்டனர். இந்த தீ விபத்தில் சிக்கிய 12 பேர் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக முதற்கட்டமாக அனுப்பி வைக்கப்பட்டனர். இச்சம்பவம் பாட்னாவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருந்தது. இந்த தீ விபத்தில் சிக்கி 3 பேர் உயிரிழந்ததாகவும், 7 பேர் பலத்த காயமடைந்துள்ளனர் என பாட்னா போலீஸ் எஸ்.எஸ்.பி. ராஜீவ் மிஸ்ரா தெரிவித்திருந்தார்.

இது குறித்து பாட்னா தீயணைப்புத் துறை போலீஸ் டிஜி, ஷோபா ஓஹட்கர் கூறுகையில், “தீயணைப்புத் அணைக்கும் மேற்கொண்டோம். இதுபோன்ற நெரிசலான பகுதிகளில் விபத்துகளை தடுக்க தொடர்ந்து சிறப்பு கவனம் செலுத்தி வருகிறோம். இதுபோன்ற சம்பவங்களைத் தடுக்க நாங்கள் தொடர்ந்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம். சிலிண்டர் வெடித்ததால் இந்த தீ விபத்து நடந்தது. இருப்பினும் தற்போது தீ முற்றிலும் அணைக்கப்பட்டது” எனத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் பாட்னா சட்டம் மற்றும் ஒழுங்கு போலீஸ் டிஎஸ்பி கிருஷ்ணா முராரி கூறுகையில், “இந்த தீ விபத்தில் 5 முதல் 6 பேர் வரை இறந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சுமார் 30க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டுள்ளனர். அதில் பலத்த காயம் அடைந்த 7 பேர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்” எனத் தெரிவித்தார்.