Skip to main content

நீட் தேர்வு ஆர்ப்பாட்டமும்...  ஆதங்கமும்!!

Published on 13/09/2020 | Edited on 14/09/2020

 

 

செப்.12 அன்று மூன்று மாணவர்களின் உயிர் பலி வாங்கிய நீட் தேர்வு, மறுநாளான இன்று நடைபெற்று முடிந்தது.

 

நெல்லை மாவட்டத்தில் தேர்வு செய்யப்பட்ட 17 மையங்கள், தென்காசி மாவட்டத்தின் மூன்று என்று 20 மையங்களில் 7500 மாணவ மாணவியர் நீட் தேர்வுக்காக குறிப்பிட்டபடி காலை 11.30 மணிக்கே சம்பந்தப்பட்ட சென்டர்களில் ஆஜரானார்கள். வழக்கப்படி மாணவர்கள் முழுக்கை சட்டை அணியக்கூடாது. மாணவிகள் செயின் மற்றும் காதுத் தோடுகளுக்கும் தடை செய்யப்பட்டிருந்தது. மாணவிகள் கொண்டை ஜடை இல்லாமல் விரித்த தலையுடன் அனுப்பப்பட்டனர்.

 

ஆரம்பக்கட்டங்களில் சென்டருக்குள் மாணவ மாணவியர் செல்லும் முன்பாக அவர்களின் ஹால் டிக்கெட் மற்றும் ஆதார் கார்டுகள் சோதனையிடப்பட்டன. பின்பு உள்ளே அனுமதிக்கப்பட்டவர்கள் மையத்தின் முன்னே அவர்களின் முகக்கவசம் வெப்பநிலை சரிபார்க்கப்பட்டதுடன் சானிடைசர் கொண்டு கைகளை சுத்தம் செய்த பிறகே மையத்தின் உள்ளே அனுமதிக்கப்பட்டனர். 

 

குறிப்பாக தென்காசி மாவட்டத்தின் சங்கரன்கோவில் பக்கம் வடக்கு புதூரில் ஒன்றரை கிலோமீட்டர் தொலைவிலுள்ள வேல்ஸ் பப்ளிக் பள்ளியின் சென்டர் காட்டுப் புறத்தில் உள்ளது.

 

மதியம் 2-5 மணி தேர்வுக்காக காலை 9 மணிக்கே சென்ற 204 மாணவ மாணவியர்கள் அந்த பள்ளியின் முன்னே அமர வசதி இல்லாததால் பக்கத்திலுள்ள முட்தரை மற்றும் வேலி புதர் மரக்காடுகளின் முன்னே அமர்ந்து தான் காலை உணவை அருந்த வேண்டிய கொடுமையும் நடந்தேறியிருக்கிறது. மழை வந்தாலும் காற்றடித்தாலும் காட்டுப்புறத்திலுள்ள முள் மரங்களில்தான் ஒண்டவேண்டிய நிலை.

 

இந்த சூழல் 'கெட்டப்பே' பல மாணவ மாணவியரின் மனதை பாதித்திருக்கிறது. மாணவிகளின் அந்தச் சூழலை நமது போட்டோகிராபர் படமாக்கிக்கொண்டிருந்தபோது அதைத்தடுக்க பரபரவென்று வந்த சங்கரன்கோவில் தாலுகா காவல் நிலைய எஸ்.ஐ. விமலா படமெடுக்கக்கூடாது என்று நமது போட்டோகிராபரை அரட்டி விரட்ட, நாங்கள் செண்ட்டரினுள் வரவில்லை. வெளியே காட்டுப்புறத்தில் படமெடுப்பதற்கு தடையா என்று கேட்டும், அவர் விரட்டலை விடவில்லை. உயரதிகாரியின் தலையீட்டின் பிறகே அந்த எஸ்.ஐ  அங்கிருந்து கிளம்பினார்.

 

இதனிடையே நீட் தேர்வை எதிர்த்து பாளை பெரியார் சிலை முன்பு திராவிட தமிழர் கட்சியின் மாநிலத் தலைவர் கதிரவன் தலைமையிலும், மக்கள் அதிகார அமைப்பினரும் ஆர்ப்பாட்டம் செய்தனர். சேரன்மாதேவியின் ஸ்கேட் கல்வி நிறுவனத்தின் மையம் முன்னே நீட் தேர்வை எதிர்த்து சி.பி.ஐ. யின் இளைஞர் பெருமன்றத்தின் மாவட்ட தலைவர் பாலன் தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில், "நீட் தேர்வை ரத்து செய். மாணவர்களை தற்கொலைக்கு தூண்டாதே" என்று கோஷமிட்டனர். போராட்டமும் பரபரப்புமாகக் காணப்பட்டது நீட் தேர்வுக் களம்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

அனைத்து ஏற்பாடுகளும் தயார்; வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பப்பட்ட ஈவிஎம்

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
All arrangements are ready; EVM sent to polling stations

தமிழகத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) பாராளுமன்றத் தேர்தல் நடக்க உள்ளது. ஈரோடு பாராளுமன்ற தொகுதியில் அரசியல் கட்சியினர், சுயேட்சைகள் என 31 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். நேற்று மாலை 6 மணியுடன் பிரச்சாரம் ஓய்ந்தது. ஈரோடு மாவட்டத்தில் 8 சட்டசபை தொகுதியில் 198 மண்டலங்களில் 2,222 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஈரோடு பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு, மொடக்குறிச்சி, காங்கேயம் தாராபுரம் குமாரபாளையம் ஆகிய சட்டசபை தொகுதிகளில் 15 லட்சத்து 38 ஆயிரத்து 778 வாக்காளர்கள் உள்ளனர்.

தேர்தல் பாதுகாப்பு பணியில் 2,325 மத்திய பாதுகாப்பு படையினர், 1,571 உள்ளூர் போலீசார் என 3,896 பேர் ஈடுபடுகின்றனர். மாவட்டத்தில் 5 மாநில சோதனை சாவடி உள்பட 12 சோதனை சாவடிகளிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தி உள்ளனர். 191 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை எனக் கண்டறியப்பட்டுள்ளது. அங்கு கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். ஈரோடு பாராளுமன்றத் தொகுதிக்குள் 1,112 வாக்குச்சாவடிகளில் வெப் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. இப்படி வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்படுகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

இதைத் தொடர்ந்து இன்று காலை முதல் அந்தந்த தாலுகா அலுவலகங்களில் இருந்து வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், கட்டுப்பாட்டு எந்திரம், வி வி பேட் மற்றும் வாக்குச் சாவடிக்குத் தேவையான பயன்பாட்டுப் பொருட்களைத் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் லாரி மற்றும் வேன்களில் மண்டல குழுவினர் தலைமையில் பொருட்கள் கருவிகள் எடுத்துச் செல்லப்பட்டன. இந்த வாகனங்களில் ஜிபிஆர்எஸ் கருவி பொருத்தப்பட்டு இருந்தது. மேலும் வாக்குச்சாவடிகளில் 10,970  ஆசிரியர்கள், அரசு அலுவலர்கள் பணி செய்ய உள்ளனர். இது தவிர ஒருங்கிணைப்பு பணியில் 2,500 பேர் ஈடுபடுத்தப்படுகின்றனர். தேர்தல் பணியில் ஈடுபடுவோர் ஏற்கெனவே மூன்று கட்ட பயிற்சி பெற்ற பயிற்சி மையம் சென்று ஓட்டு சாவடி பணி நியமன ஆணையைப் பெற்று இன்று மாலைக்குள் சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி மையத்துக்கு சென்று விடுவார்கள். ஒவ்வொரு வாக்கு சாவடிகளிலும் முதியோர், மாற்றுத்திறனாளிக்காக சக்கர நாற்காலி, சாய்வு தளம், நிழல் வசதி, குடிநீர், கழிப்பிடம் உள்ளிட்ட அனைத்தும் ஏற்படுத்தி தயார் நிலையில் உள்ளனர். தற்போது மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் பொதுமக்கள் வசதிக்காக சாமியானா பந்தலும் போடப்பட்டுள்ளது.

நாளை காலை சரியாக 7 மணிக்கு வாக்குப்பதிவு  தொடங்குகிறது. வாக்கு பதிவு செய்ய வருபவர்கள் தங்களது 12 ஆவணங்களில் ஏதாவது ஒன்றை காட்டி வாக்கு பதிவு செய்து கொள்ளலாம் என ஏற்கெனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடக்கும் முன்னதாக காலை 5:30 மணிக்கு மாதிரி வாக்குப்பதிவு நடத்தப்படும். ஈரோடு மாவட்டம் பர்கூர் , தாளவாடி, கடம்பூர் ஆகிய மலைப்பகுதி வாக்குச்சாவடிகளில் தொலைபேசி, இன்டர்நெட் வசதி இல்லை. அங்கு வனத்துறையினரின் மைக் மூலம் தொடர்புகள் ஏற்படுத்தப்படும். மேலும் ஈரோடு மாவட்டம் மலைப்பகுதியில் 120 வாக்குச்சாவடிகள் அமைந்துள்ளன. வெப் கேமரா வசதி செய்ய முடியாத வாக்குச்சாவடிகளில் ஓட்டுப்பதிவு பணிகள் முழுமையாக வீடியோவாக பதிவு செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story

தேர்தல் எதிரொலி; தமிழக எல்லையில் தீவிர சோதனை

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Election Echoes; Intensive check on the border of Tamil Nadu

2024 ஆம் ஆண்டிற்கான முதற்கட்ட வாக்குப்பதிவு தமிழகத்திலும், புதுச்சேரியிலும்  நாளை நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் காரணமாக வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருள் கொண்டு செல்வதைத் தடுக்க தமிழக, கர்நாடக எல்லையான காரப்பள்ளம் சோதனை சாவடியில் துப்பாக்கி ஏந்திய போலீசாரும், தேர்தல் பறக்கும் படை அலுவலர்களும் முகாமிட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். கர்நாடக மாநிலத்தில் இருந்து தமிழகம் செல்லும் வாகனங்களிலும் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். அதன் பின்னர்தான் வாகனங்கள் அனுமதிக்கப்படுகின்றன. கர்நாடக மாநிலத்தில் இருந்து வரும் சுற்றுலா பேருந்துகள் சொகுசு கார்கள் உள்ளிட்டவற்றை தீவிர சோதனைக்குப் பிறகு வாகன என் பெயர் போன்ற தகவல்களைச் சேகரித்த பின் தமிழகத்தில் நுழைய அனுமதிக்கின்றனர். இதனால் மாநில எல்லையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.