neet exam madurai student incident dmk mk stalin

Advertisment

நீட் தேர்வுக்கு தயாராகி வந்த மாணவி ஜோதி ஸ்ரீ துர்கா, நீட் தேர்வு அச்சத்ததால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இந்த நிலையில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'எல்லோருமே என்கிட்ட ரொம்ப எதிர்பார்த்தீங்க; ஆனா எனக்குத்தான் பயமா இருக்கு' என்று ஜோதி ஸ்ரீ துர்கா பேசிய ஆடியோ, நீட் தேர்வின் கோர முகத்தை காட்டுகிறது. ஒரு தேர்வு, மாணவ சமுதாயத்தின் மனங்களை நிலைகுலைய வைப்பதாக இருப்பதை, அனிதா முதல் ஜோதி ஸ்ரீ துர்கா மரணம் வரை உணர முடிகிறது. தற்கொலை என்பது தீர்வல்ல என்று மீண்டும் சொல்கிறேன்! நீட் என்பது ஒரு தேர்வே அல்ல என்பதை மீண்டும் சொல்கிறேன்! என்று குறிப்பிட்டுள்ளார்.

Advertisment