Skip to main content

எப்படி இருந்தது நீட் தேர்வு? மாணவ, மாணவிகள் சொல்வது என்ன?

Published on 13/09/2021 | Edited on 13/09/2021

 

neet exam experience students says

 

எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். ஆகிய இளநிலை மருத்துவப் படிப்புகளில் சேர நீட் எனப்படும் தேசிய தகுதி நுழைவுத்தேர்வில் வெற்றி பெறுவது அவசியம். இந்த ஆண்டுக்கான நீட் தேர்வு நாடு முழுவதும் ஞாயிற்றுக்கிழமை (12.09.2021) நடைபெற்றது. 

 

இந்தியா முழுவதும் 16.14 லட்சம் பேரும், தமிழ்நாட்டில் மட்டும் 1.10 லட்சம் பேரும் இத்தேர்வை எழுதினர். தமிழ் உள்ளிட்ட 13 மொழிகளில் நீட் தேர்வு நடந்தது. சேலம் மாவட்டத்தில் மொத்தம் 28 மையங்களில் 15,067 பேர் தேர்வு எழுதினர். 

 

இந்த ஆண்டு மொத்தம் 200 வினாக்கள் கொடுக்கப்பட்டு, அவற்றில் 180 வினாக்களுக்கு விடையளிக்க வேண்டும் என்று சொல்லப்பட்டிருந்தது. நீட் தேர்வு எப்படி இருந்தது என்பது குறித்து சேலம் சக்தி கைலாஷ் கல்லூரி மையத்தில் தேர்வு எழுதிய மாணவ, மாணவிகளிடம் பேசினோம். 

 

தர்மபுரி மாவட்டம் வெண்ணாம்பட்டியைச் சேர்ந்த மாணவி ரக்ஷிதா, தனியார் பள்ளியில் படித்துவந்தவர். முதன்முறையாக நீட் தேர்வை எழுதியுள்ளார். அவர் கூறுகையில், ''உயிரியல், தாவரவியல் பாடப்பகுதிகளில் இருந்து கேட்கப்பட்ட வினாக்கள் ரொம்பவே எளிமையாக இருந்தன. வேதியியல் பகுதிக்கான வினாக்கள் ஓரளவு பரவாயில்லை என்று சொல்லலாம். 

 

ஆனால், இயற்பியல் பகுதி வினாக்கள் மிக கடினமாக இருந்தன. இயற்பியல் சம்பந்தப்பட்ட வினாக்கள் நீள நீளமாக கேட்கப்பட்டிருந்தன. கேள்வியைப் படித்து உள்வாங்கிக் கொள்ளவே பத்து நிமிடங்கள் தேவைப்பட்டது,'' என்றார்.

 

கிருஷ்ணகிரியைச் சேர்ந்த பரத்குமார் என்ற மாணவர், அங்குள்ள அரசு மாதிரி பள்ளியில் படித்துவந்தவர். முதல்முறையாக நீட் தேர்வை எதிர்கொண்டுள்ள அவர் கூறுகையில், ''எங்கள் பள்ளியில் ஆரம்பத்தில் இருந்தே நீட் தேர்வுக்கான பயிற்சி வகுப்புகளை நடத்தினர். கரோனா ஊரடங்கின்போது ஆன்லைன் மூலம் பயிற்சி அளித்தனர். பயிற்சி வகுப்பில் கலந்துகொண்டது, இத்தேர்வை எதிர்கொள்ள உதவியாக இருந்தது. இந்த தேர்வில் இயற்பியல் பகுதி மட்டும் கடினமாக இருந்தது. சில வினாக்கள் டிவிஸ்ட் செய்து கேட்டிருந்தனர்,'' என்றார். 

 

சேலம் மாவட்டம் ஏத்தாப்பூரைச் சேர்ந்த ஷாலினி, அரசுப் பள்ளியில் படித்தவர். முதன்முறையாக இத்தேர்வை எழுதியுள்ளார். அவர் கூறும்போது, ''இயற்பியல் பாடப்பகுதியில் இருந்து கேட்கப்பட்ட வினாக்கள் சில, கணக்கீடு அடிப்படையில்  இருந்ததால் கொஞ்சம் சவாலாக இருந்தது. சில வினாக்கள் குழப்பும் வகையிலும் இருந்தன. மற்ற பாடப்பகுதி வினாக்கள் ஓரளவு எளிமையாக இருந்தன. 

 

சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் படித்த மாணவ, மாணவிகளுக்கு இந்த நீட் தேர்வு எளிமையாக இருக்கும். எங்களைப் போன்ற அரசுப் பள்ளி மாணவர்களுக்கும் சிபிஎஸ்இ பாடத்திட்டத்திற்கு இணையாக பாடங்களைக் கொண்டு வந்தால், எதிர்காலத்தில் தமிழக அரசுப் பள்ளி மாணவர்களும் அதிகளவில் இத்தேர்வில் வெற்றி பெற வாய்ப்புள்ளது,'' என்றார்.

 

சேலத்தைச் சேர்ந்த ஸ்ரீராம், தனியார் பள்ளி மாணவர். முதன்முறையாக நீட் தேர்வை எழுதியுள்ளார். அவர் கூறுகையில், ''இயற்பியல் பகுதி வினாக்கள் மிகக்கடினமாக இருந்தன. வேதியியல் பிரிவு ஓரளவு பரவாயில்லை. உயிரியல் பகுதி வினாக்கள் எளிமையாக இருந்தன. இந்த வினாத்தாள் அடிப்படையில் பார்த்தால், அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இத்தேர்வு கடினமாகத்தான் இருந்திருக்கும்,'' என்றார்.  

 

தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு என்பது குறிப்பிட்ட பாடத்திட்டத்தில் படித்தவர்களுக்கு மட்டும் முக்கியத்துவம் அளித்து நடத்தப்படாமல், மாநிலப் பாடத்திட்டத்தில் படித்தவர்களுக்கும் சம வாய்ப்பு அளிக்கும் வகையில் வினாத்தாள் வடிவமைப்பு இருக்க வேண்டும் என்கிறார்கள் பெற்றோர்கள். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

17 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த போர் வீரனின் நடுகல் கண்டுபிடிப்பு!

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
17th century warrior headstone Kantipudi

சேலம் மாவட்டம், மாதநாயக்கன்பட்டி பெருந்தலைவர் காமராசர் நினைவு அரசு மேல்நிலைப்பள்ளி தொன்மை பாதுகாப்பு மன்றத்தின் தலைவர் தலைமை ஆசிரியர், பொறுப்பு ஆசிரியர்களாக அன்பரசி, விஜயகுமார் ஆகியோர் உள்ளனர். இப்பள்ளி மாணவர்கள் கொடுத்த தகவலின்படி ஆசிரியர்களும், மாணவர்களும் களப்பயணத்தின் போது வீரனின்  நடுகல்  ஒன்று கண்டறியப்பட்டது.

பொது ஆண்டு 17 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த இந்த நடுகல்லில் எழுத்துகள் எதுவும் இல்லை. கல்பூமியின் மேற்பரப்பில் 2 அடி உயரமும் 1.5  அடி அகலம் கொண்டது. இந்த நடுகல்லை சுற்றி கல்திட்டை போன்ற அமைப்பும் உள்ளது . நடுகல்லில் போர் வீரனின் சிற்பம்  உள்ளது.
வேட்டைக்கு சென்று இறந்ததற்காக எடுக்கப்பட்ட நடுகல்லாக இருக்கலாம். ஆலிடாசனம் நிலையில் வில்லில் நாணில் அம்பு எய்துவது போன்றும், இடுப்பில் குரு வாளும், காதில் பத்ர குண்டலமும்,   கழுத்தில் சரப்பளி, சவுடி, முத்தாரம் அணிகலன் அணிந்திருப்பது  போன்றும் கையில் தோள்வளை  இருப்பது போன்ற உருவமைப்பு உள்ளது.

17th century warrior headstone Kantipudi

இப்பகுதி தாருகாவனத்திற்க்கு அருகில் இருப்பதால்  இந்த வீரன் வேட்டுவ தலைவனாக இருக்கலாம். இந்த நடுகல் எல்லாம் அவர்களின் நினைவைப் போற்றும் வகையில் வைக்கப்பட்டதாகும்.  தொன்மை பாதுகாப்பு மன்றத்தின் சார்பாக தொல்லியல் சார்ந்த வரலாற்று தகவல்களையும், அதனை பற்றிய விழிப்புணர்வையும் இன்றை இளைய தலைமுறை மாணவர்களுக்கு கொண்டு சேர்ப்பது தான் தொன்மை பாதுகாப்பு மன்றத்தின் நோக்கமாகும் என்கின்றனர் தொன்மை பாதுகாப்பு மன்ற ஆசிரியர்கள்.

Next Story

பள்ளிப் பேருந்து விபத்து; மாணவர் சொன்ன பகீர் காரணம்

Published on 11/04/2024 | Edited on 11/04/2024
School bus incident The reason given by the student 

ஹரியானா மாநிலம் மகேந்திரகர் அருகே கனினா என்ற இடத்தில் தனியார் பள்ளிப் பேருந்து விபத்துக்குள்ளானதில் 5 மாணவர்கள் உயிரிழந்தனர். மேலும் பேருந்தில் இருந்த 15 மாணவர்கள் காயமடைந்துள்ளனர். காயமடைந்த மானவர்கள் மருத்துவமணையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்தில் காயமடைந்த மாணவர்களை ஹரியானா கல்வி அமைச்சர் சீமா த்ரிகா நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.

இதனைத் தொடர்ந்து அவர் செய்தியாளரிடம் பேசுகையில், “நான் இப்போதுதான் மாத்ரிகா மருத்துவமனைக்கு வந்தேன். மூன்று குழந்தைகளை மட்டுமே சந்தித்தேன். மூவரும்  காயமடைந்துள்ளனர். அவர்களின் உடைகள் முழுவதும் ரத்தம் உள்ளது. மருத்துவர்களின் அறிவுரைப்படி இங்கு உரிய சிகிச்சை அளிக்க முடியும்; சிலருக்கு பலத்த காயங்கள் உள்ளன” எனத் தெரிவித்தார்.

இந்த விபத்தில் காயமடைந்த மாணவர் ஒருவர் கூறுகையில், “பேருந்து ஓட்டுனர் குடிபோதையில் 120 கி.மீ. வேகத்தில் பள்ளிப் பேருந்தை ஓட்டினார். இதனால் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது” எனத் தெரிவித்தார். இந்தச் சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.