Skip to main content

நீட் நுழைவு தோ்வு; தோ்வா்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளன...

Published on 04/05/2019 | Edited on 04/05/2019

நீட் நுழைவு தோ்வு நாளை நாடு முழுவதும் 155 நகரங்களில் நடக்கிறது. தோ்வா்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
 

neet

        

மருத்துவ படிப்பில் சோ்வதற்கான மத்திய அரசு நடைமுறை படுத்தியுள்ள நீட் எனப்படும் தேசிய நுழைவு தோ்வு நாளை மதியம் 2 மணிமுதல் மாலை 5 மணி வரை நடக்கிறது. இந்த தோ்வுக்கு நாடு முழுவதும் 15 லட்சத்திற்கு மேற்பட்டோா் விண்ணப்பித்துள்ளனா். இதற்காக 155 நகரங்கள் தோ்வு செய்யப்பட்டுள்ளன. 

           
தமிழகத்தில் நீட் தோ்வுக்கு 1 லட்சத்து 40 ஆயிரம் போ் விண்ணப்பித்துள்ளனா். இதற்காக தோ்வு மையங்கள் 14 நகரங்களில் அமைக்கப்பட்டுள்ளன. குமாி மாவட்டத்தில் இந்த தோ்வு எழுதுவதற்காக அமைக்கப்பட்டுள்ள நாகா்கோவில் ஒழுகினாசோியில் உள்ள எஸ்.ஏ. ராஜாஸ் இன்டா்நேஷனல் பள்ளில் 912 மாணவ மாணவிகளும், அஞ்சு கிராமத்தில் உள்ள ரோகினி இன்ஜினியாிங் கல்லூாியில் 1020 மாணவ மாணவிகளும், நாகா்கோவில் பொன் ஜெஸ்லி என்ஜினியாிங் கல்லூாியில் 1020 மாணவ மாணவிகளும், சுங்கான்கடை புனித சேவியா் கல்லூாியில் 1020 மாணவ மாணவிகளும் என மாவட்டத்தில் மொத்தமுள்ள இந்த 4 மையங்ளில் 3972 போ் தோ்வு எழுதவுள்ளனர். 

           

மதியம் 2 மணிக்கு தொடங்கும் தேர்விற்கு மாணவர்கள், தோ்வு மையம் அமைந்துள்ள கல்வி வளாகத்தினுள் 11.30 மணியில் இருந்து 1.30 மணி வரை தான் அனுமதிக்கப்படுவாா்கள். அதன்பிறகு ஓரு நொடி தாமதமானாலும் தோ்வா்கள் அனுமதிக்க மாட்டாா்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தோ்வா்கள் ஒரு பாஸ்போா்ட் புகைப்படம் கொண்டு வருவதுடன் அரசு அங்கீகாித்த அடையாள அட்டை ஓன்றையும் கொண்டுவர வேண்டும். புத்தகம், பென்சில், கால்குலேட்டா், ரப்பா், பவுச், பென்டிரைவ், ஸ்கேல், எழுதும் பேடு, செல்போன், இயா்போன், கேமரா, பேஜா், கைகடிகாரம், தோள் பை, பா்ஸ் ஆகியவை கொண்டுவரக்கூடாது. பெல்ட், தொப்பி, ஷீ, சாக்ஸ்,  பிரேஸ்லெட், மோாதிரம், வளையல், கம்மல், செயின் அணிந்து வரக்கூடாது. 

             
அதேபோல் அரை கையுடன் கூடிய நைஸ் ஆடைகளை அணிவதோடு ஸ்லிப்பா் செருப்புகள் மட்டுமே பயன்படுத்த வேண்டும். இதில் குறிப்பிட்ட மதம் சாா்ந்த ஆடைகளை அணிந்து வரும் தோ்வா்கள் சோதனைக்கு வசதியாக 12.30 மணிக்குள் தோ்வு மையத்தில் இருக்க வேண்டுமென்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் தலைமுடியில் கிளிப் வைத்திருந்தால் அதை அகற்றப்படும். மேலும் ஆடை விஷயத்தில் கடந்தமுறை பின்பற்றபட்டதை போன்று இந்த முறையும் இருப்பதால் அதை தோ்வா்கள் கவனத்தில் கொள்ள வேண்டும். 
           

சுருக்கமாக சொல்ல வேண்டுமென்றால் தோ்வறைக்குள் புகைப்படம், ஹால் டிக்கெட், மற்றும் அடையாள அட்டை தவிர  வேறு எந்த பொருளையும் கொண்டு செல்வதை தோ்வா்கள் தவிா்ப்பது நல்லது.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

நீட் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு; தேசிய தேர்வு மையம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

Published on 09/03/2024 | Edited on 09/03/2024
Important notification For students appearing for NEET

2024 ஆம் ஆண்டு நடைபெற உள்ள மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான இளங்கலை நீட் நுழைவுத் தேர்வுக்காக விண்ணப்பம் செய்வதற்கான கால அவகாசத்தை நீட்டித்து தேசியத் தேர்வு மையம் அறிவித்துள்ளது.

2024 - 25 ஆம் கல்வியாண்டிற்கான இளநிலை மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்வு (2024) மே மாதம் 5 ஆம் தேதி நடைபெறும் எனத் தேசியத் தேர்வு முகமை ஏற்கனவே அறிவித்திருந்தது. தேர்வுக்கான தேதி அறிவிக்கப்பட்டு பல மாதங்கள் ஆகிவிட்ட நிலையில், தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் எனத் தேசிய தேர்வு மையம் தெரிவித்திருந்தது. 

அதன்படி, கடந்த பிப்ரவரி 2 ஆம் தேதி முதல், மார்ச் 9 ஆம் தேதி இரவு 9 மணி வரை நீட் தேர்வு எழுதும் மாணவ - மாணவிகள் ஆன்லைன் வழியாக விண்ணப்ப பதிவை மேற்கொள்ளலாம் எனத் தெரிவித்திருந்தது. இந்த நிலையில், இன்றுடன் கால அவகாசம் நிறைவடைய இருந்த நிலையில், மார்ச் 6 ஆம் தேதி வரை நீட்டித்துள்ளதாக தேசிய தேர்வு மையம் அறிவித்துள்ளது. மேலும், https://exams.nta.nic.in/NEET என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைன் விண்ணப்பப் படிவத்தை சமர்ப்பிக்கலாம் எனத் தெரிவித்துள்ளது. நீட் தகுதி தேர்வுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் மற்றும் தகவல் தொகுப்பு கையேடு இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

Next Story

“ஜெயலலிதாவை பாராட்ட வேண்டும்” - அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

Published on 17/02/2024 | Edited on 17/02/2024
Minister Udayanidhi Stalin says Jayalalitha should be praised

நாடாளுமன்ற மக்களவைப் பொதுத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு அரசியல் கட்சிகள் சார்பில் தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்காக பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு தீவிர ஆலோசனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. மேலும் நாடாளுமன்றத் தேர்தலுக்கான பணிகளை அரசியல் கட்சிகள் தற்போதே தீவிரப்படுத்தி வருகின்றன. இத்தகைய சூழலில் இந்தியத் தேர்தல் ஆணையமும் மக்களவைத் தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து தொடர்ந்து ஆய்வு நடத்தி வருகிறது.

அந்த வகையில் இந்தியா கூட்டணியில் இடம்பெற்றுள்ள தி.மு.க., நாடாளுமன்றத் தேர்தலுக்கான பல்வேறு குழுக்களை உருவாக்கி அதற்கான அறிவிப்புகளை வெளியிட்டிருந்தது. அதன்படி தி.மு.க. சார்பில் வெளியிட்டிருந்த அறிவிப்பில் கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தவும், தேர்தல் அறிக்கை உருவாக்கவும், தேர்தல் ஒருங்கிணைப்பு பணிகளை மேற்கொள்ளவும் குழுக்கள் அமைக்கப்பட்டிருந்தன. இந்த குழுக்களில் தி.மு.க. மூத்த நிர்வாகிகள் இடம்பெற்றிருந்தனர். மேலும் இந்த குழுவினர் தங்களது பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், தமிழகத்திலுள்ள நாடாளுமன்ற மக்களவைத் தொகுதிகளில் தி.மு.க சார்பில் பொதுக்கூட்டம் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி பிப்ரவரி 16, 17 மற்றும் 18 ஆகிய தேதிகளில் இந்த பொதுக்கூட்டங்கள் நடைபெறுகின்றன. ‘உரிமைகளை மீட்க ஸ்டாலினின் குரல்’ என்ற தலைப்பில் இந்த பொதுக்கூட்டங்கள் நடைபெற உள்ளன. 3 நாட்கள் நடைபெறும் நாடாளுமன்றத் தொகுதிவாரியான பொதுக்கூட்டங்களில் பொறுப்பு அமைச்சர்களுடன், மாவட்டச் செயலாளர்கள், நிர்வாகிகள் உள்ளிட்டோர் இணைந்து செயல்பட வேண்டுமென அறிவுறுத்தப்பட்டது.

அந்த வகையில், இன்று (17-02-24) ராமநாதபுரம் மாவட்டத்தில் நடந்த ‘உரிமைகளை மீட்க ஸ்டாலினின் குரல்’ எனும் பொதுக்கூட்டத்தில் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர், “புதிய கல்வி கொள்கை மூலம் 5,8 ஆம் வகுப்புக்கு பொதுத் தேர்வை கொண்டு வந்து நமது மாணவர்களை படிக்கவிடாமல் பா.ஜ.க செய்கிறது. ஜெயலலிதா இருந்த வரை தமிழகத்திற்குள் நீட் தேர்வு வரவில்லை. அவர் தமிழ்நாட்டிற்குள் நீட் தேர்வை நுழைய விடவில்லை. 

நீட் விவகாரத்தில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவை பாராட்ட வேண்டும். அவர் மறைந்ததும், அதிமுக ஆட்சியில் தான் நீட் தேர்வு தமிழகத்திற்குள் வந்தது. நீட் தொடர்பாக அனிதா முதல் ஜெகதீசன் வரை 21 பேர் தற்கொலை செய்துள்ளனர். நீட் தேர்வு ரத்து தொடர்பாக டெல்லியில் விரைவில் போராட்டம் நடத்த இருக்கிறோம். தமிழ்நாட்டில் இருந்து என்றைக்கு நீட் தேர்வு விலக்கு ஏற்படுமோ அதுதான் முதல் வெற்றி” என்று கூறினார்.