Skip to main content

அனிதா நினைவு தினத்தை பெண்கள் பாதுகாப்பு தினமாக அறிவிக்க கோரி பேரணி

Published on 02/09/2019 | Edited on 02/09/2019

 

நீட் தேர்வால் தற்கொலை செய்துகொண்ட மாணவி அனிதா நினைவு தினத்தை பெண்கள் பாதுகாப்பு தினமாக அறிவிக்க கோரியும் பெண்கல்வியை பாதுகாக்கவும் பெண்கள் மீதான வன்கொடுமையை தடுக்க வழியுறுத்தியும் இந்திய மாணவர்கள் சங்கம் சார்பில் பேரணி நேற்று எழும்பூரில்  நடைபெற்றது.

 

a


 
நீட் தேர்வுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வாதாடிய, அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவி அனிதா, தூக்கிலிட்டு தற்கொலை செய்துகொண்டார். பிளஸ்டூ தேர்வில் 1176 மதிப்பெண் எடுத்திருந்தும் தமக்கு மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைக்காது என்ற காரணதால் அவர் இந்த முடிவுக்கு தள்ளப்பட்டார். இதனைத் தொடர்ந்து இரண்டு வருடத்தில் மட்டும் ராஜலட்சுமி,வைசியா,மோனிஷா, பிரிதிபா, சந்தியா என மொத்தமாக 11 மாணவிகள், மாணவிகளின் பெற்றோர்கள் என உயிரிழந்துள்ளனர்.  இதனை தொடர்ந்து நீட் எனும் உயிர்கொள்ளியை தூக்கி எரியந்த பாடுமில்லை , செப்டம்பர் 1 தேதி தங்கை அனிதா நினைவு நாள் என்பதால் இந்தி மாணவர்கள் சங்கம் 01.09.19 தேதி அன்று சென்னை எழும்பூரில் அனிதா உருவ முகமூடியை அணிந்தபடி பேரணியை நடத்தினர். 

 

a

 

இந்த பேரணியில் அவர்கள் நீட் தேர்வால் தற்கொலை செய்துக்கொண்ட மாணவி அனிதா நினைவு தினத்தை பெண்கள் பாதுகாப்பு தினமாக அறிவிக்க வேண்டும்.  பெண்கல்வியை பாதுகாக்கவும் பெண்கள் மீதான வன்கொடுமையும் தடக்கவும் இந்த அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என கோசத்துடன் பேரணியை நடத்தினர். 

 

இதன் தொடர்பாக பேசிய இந்திய மாணவர்கள் சங்கம் மாரியப்பன்,   நீட் தேர்வு மூலமாக மத்திய மாநிலஅரசு  செய்த மிக பெரிய துரோகம். தங்கை அனிதா தற்கொலை செய்து கொண்டாள் என்பது முற்றிலும் தவறு . அது தற்கொலை அல்ல கொலை. மொத்தம் இந்த இரண்டு வருடத்தில் மட்டும் 11 பேர் இறந்துள்ளனர். அதில் நான்கு பேர் கடிதம் எழுதிவைத்து விட்டுத்தான் இறந்துள்ளனர்.

 

இந்த அரசு குடியரசு தலைவரிடம் ஒப்புதல் அனுப்பி வைத்துள்ளதாக கூறிய இந்த அரசு அதை ரத்து செய்தது கூட சொல்ல மறுந்ததின் விளைவே இந்த உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து பெண்கள் பாதுகாப்பு இன்மை என இந்த சூழ்நிலையில் தான் அனிதா நினைவு தினத்தன்று நாங்கள் போராட்டத்தை மேற்கொண்டோம். அதில் அனிதா நினைவு நாளை பெண்கள் பாதுகாப்பு தினமாக அறிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டோம். நீட் சரி என்று வரிந்து கட்டிக்கொண்டு பேசிய தமிழிசைக்கு ஆளுநர் பதவி அதுவும் அனிதா நினைவு நாள் அன்று கொடுத்துள்ளது என்பது வன்மமான செயல் என்றார். 

சார்ந்த செய்திகள்

Next Story

நீட் தேர்வு எழுதும் மாணவர்களின் கவனத்திற்கு; வெளியான முக்கிய அறிவிப்பு!

Published on 08/04/2024 | Edited on 08/04/2024
Important announcement For the attention of NEET students

2024 ஆம் ஆண்டு நடைபெற உள்ள மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான இளங்கலை நீட் நுழைவுத் தேர்வுக்காக விண்ணப்பம் செய்வதற்கான கால அவகாசத்தை நீட்டித்து தேசியத் தேர்வு மையம் அறிவித்துள்ளது.

2024 - 25 ஆம் கல்வியாண்டிற்கான இளநிலை மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்வு (2024) மே மாதம் 5 ஆம் தேதி நடைபெறும் எனத் தேசியத் தேர்வு முகமை ஏற்கனவே அறிவித்திருந்தது. தேர்வுக்கான தேதி அறிவிக்கப்பட்டு பல மாதங்கள் ஆகிவிட்ட நிலையில், தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் எனத் தேசிய தேர்வு மையம் தெரிவித்திருந்தது. 

அதன்படி, கடந்த பிப்ரவரி 2 ஆம் தேதி முதல், மார்ச் 16 ஆம் தேதி வரை நீட் தேர்வு எழுதும் மாணவ - மாணவிகள் ஆன்லைன் வழியாக விண்ணப்ப பதிவை மேற்கொள்ளலாம் எனத் தெரிவித்திருந்தது. இந்த நிலையில், நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பம் செய்வதற்கான கால அவகாசத்தை நீட்டிக்குமாறு மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் கோரிக்கை வைக்கப்பட்டது. அந்த கோரிக்கையை அடிப்படையாகக் கொண்டு மார்ச் 16ஆம் தேதி வரை கால அவகாசம் நிறைவடைந்த நிலையில், ஏப்ரல் 10ஆம் தேதி வரை நீட்டித்துள்ளதாக தேசிய தேர்வு மையம் அறிவித்துள்ளது. 

மேலும், https://exams.nta.nic.in/NEET என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைன் விண்ணப்பப் படிவத்தை நாளை (09-04-24) மற்றும் நாளை மறுநாள் (10-04-24) சமர்ப்பிக்கலாம் எனத் தெரிவித்துள்ளது. நீட் தகுதி தேர்வுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் மற்றும் தகவல் தொகுப்பு கையேடு இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அவ்வப்போதைய நிலவரங்களைத் தெரிந்து கொள்வதற்கு, www.nta.ac.in என்ற இணையதளத்தைப் பார்க்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். குறிப்பிட்ட அவகாசத்திற்குள் விண்ணப்ப முடியாதவர்களின் நலன் கருதி தேசிய தேர்வு முகமை இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 

Next Story

நீட் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு; தேசிய தேர்வு மையம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

Published on 09/03/2024 | Edited on 09/03/2024
Important notification For students appearing for NEET

2024 ஆம் ஆண்டு நடைபெற உள்ள மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான இளங்கலை நீட் நுழைவுத் தேர்வுக்காக விண்ணப்பம் செய்வதற்கான கால அவகாசத்தை நீட்டித்து தேசியத் தேர்வு மையம் அறிவித்துள்ளது.

2024 - 25 ஆம் கல்வியாண்டிற்கான இளநிலை மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்வு (2024) மே மாதம் 5 ஆம் தேதி நடைபெறும் எனத் தேசியத் தேர்வு முகமை ஏற்கனவே அறிவித்திருந்தது. தேர்வுக்கான தேதி அறிவிக்கப்பட்டு பல மாதங்கள் ஆகிவிட்ட நிலையில், தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் எனத் தேசிய தேர்வு மையம் தெரிவித்திருந்தது. 

அதன்படி, கடந்த பிப்ரவரி 2 ஆம் தேதி முதல், மார்ச் 9 ஆம் தேதி இரவு 9 மணி வரை நீட் தேர்வு எழுதும் மாணவ - மாணவிகள் ஆன்லைன் வழியாக விண்ணப்ப பதிவை மேற்கொள்ளலாம் எனத் தெரிவித்திருந்தது. இந்த நிலையில், இன்றுடன் கால அவகாசம் நிறைவடைய இருந்த நிலையில், மார்ச் 6 ஆம் தேதி வரை நீட்டித்துள்ளதாக தேசிய தேர்வு மையம் அறிவித்துள்ளது. மேலும், https://exams.nta.nic.in/NEET என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைன் விண்ணப்பப் படிவத்தை சமர்ப்பிக்கலாம் எனத் தெரிவித்துள்ளது. நீட் தகுதி தேர்வுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் மற்றும் தகவல் தொகுப்பு கையேடு இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.