Skip to main content

மீட்புப்பணியில் ஈடுபட்டவர் மண்சரிவில் சிக்கினார்; தேடும் பணி தீவிரம்

Published on 13/08/2019 | Edited on 13/08/2019

 


நீலகிரி மாவட்டத்தை புரட்டிப் போட்டது கனமழை. சாலைகள் துண்டிக்கப்பட்டதால் பல கிராமங்களில் உள்ள மக்களின் நிலை அறியமுடயவில்லை. அவர்களுக்கு உணவு கிடைக்கிறதா என்பதும் கேள்விக்குறி தான்.


   ஆனாலும் தன்னார்வ இளைஞர்கள் குழுக்களை அமைத்து நிவாரணப் பணிகளுக்கு வருபவர்களுக்கு வழிகாட்டி வருகிறார்கள். முகாம்களில் தங்கியுள்ள மக்கள் தங்கள் வீடுகளுக்கு செல்ல நினைத்தால் அங்கே வீடுகள் இருந்த தடயமே இல்லை என்ற அவல நிலை ஏற்பட்டுள்ளது. 
   

k

     

ஆனாலும் தன்னார்வ இளைஞர் குழுவினர் பாதிக்கப்பட்ட மக்களை அடையாளங்கண்டு நிவாரணங்கள் கிடைக்கச் செய்து வருகிறார்கள். பல்வேறு வெளியூர்களில் வேலைக்காக சென்ற நீலகிரி மாவட்ட இளைஞர்கள் திரும்பி வந்து மீட்புப்பணி மற்றும் நிவாரணப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.


இந்த நிலையில் தான் ஒவேலி அருகில உள்ள எல்லைமலை கிராமத்தைச் சேர்ந்த சைமுதீன் என்பவர் மண்சரிவில் சிக்கியவர்களை மீட்டு தங்கும் முகாம்களுக்கு அனுப்பிவிட்டு வீட்டுக்குச் சென்ற போது 50 அடி உயரத்திலிருந்து மண்சரிவு ஏற்பட்டு புதைந்துள்ளார். 

 

n

 

கடந்த 5 நாட்களாக அவரைத் தேடும் பணியில் வனத்துறை மற்றும் அதிகாரிகள் தன்னார்வலர்கள் ஈடுபட்டுள்ளனர். பொக்கலின் மூலம் மண்ணை தள்ளி தொடர்ந்து தேடி வருகின்றனர்.  ஆனால் அந்தப் பகுதிக்கு வரும் அனைத்து சாலைகளும் துண்டிக்கப்பட்டுள்ளதால் மாற்று இயந்திரங்கள் வருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. சைமூதீனுக்கு 3 குழந்தைகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


   இந்த நிலையில் தான் வெளியூர்களில் இருந்து நிவாரணங்களுடன் வரும் தன்னார்வலர்களுக்கு வழிகாட்ட  சாலையில் எனனமாதிரியான வாகனங்கள் செல்லமுடியும்என்றும் துண்டிக்கப்பட்ட சாலைகள் பற்றிய வரைபடங்களையும் அனுப்பியுள்ளனர். மேலும் மறுபடியும் மழை பெய்யும் என்ற தகவலால் மக்கள் மேலும் அச்சத்தில் உள்ளனர்.

  

மேலும் அவலாஞ்சி சுற்றியுள்ள பல கிராமங்கள் முழுபாதிப்பில் இருந்தாலும் எந்த உதவியும் கிடைக்காமல் தவித்து வருகிறார்கள் . தன்னார்வலர்கள் உதவ சென்றால் அப்பகுதியை சேர்ந்த இளைஞர் குழுவைச் சேர்ந்த ஆனந்த் 9527119747 என்ற எண்ணில்  தொடர்பு கொண்டால் வழிகாட்டவும் அழைத்துச் செல்லவும் தயாராக உள்ளார். 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“அரசியல் கேள்விக்கெல்லாம் பதில் சொல்லமாட்டேன்!”- ரஜினிகாந்த்

Published on 14/03/2024 | Edited on 14/03/2024
Rajinikanth has said that he will not answer political questions

வேட்டையன் படப்பிடிப்பிற்காக சென்னையிலிருந்து ஹைதராபாத் சென்றிருந்த நடிகர் ரஜினிகாந்த், படப்பிடிப்பை முடித்துவிட்டு சென்னை திரும்பினார்.ரஜினிகாந்த் நடிப்பில் அடுத்து வெளிவரும் திரைப்படமான வேட்டையன் படப்பிடிப்பு, ஹைதராபாத் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நடந்து வருகிறது.

அடுத்தகட்ட படப்பிடிப்பில் கலந்துகொள்ள, சென்னையிலிருந்து விமானம் மூலம் கடந்த 9ஆம் தேதி ஹைதராபாத் புறப்பட்டார். 75 சதவீத படப்பிடிப்பு நிறைவுற்ற நிலையில், அங்கிருந்து விமானம் மூலம் சென்னை திரும்பினார்.

“படப்பிடிப்பு நன்றாகப் போய்க்கொண்டிருக்கிறது..” என்று மீடியாக்களிடம் ரஜினிகாந்த் தெரிவித்தபோது, நாடாளுமன்றத் தேர்தல் குறித்து கேள்வி எழுப்பினார்கள். அதற்கு  “அரசியல் கேள்விக்கெல்லாம் பதில் சொல்லமாட்டேன்..” என்று கூலாகச் சொல்லிவிட்டு கிளம்பினார். 

Next Story

“எனக்கு தெரிந்த ஒரே கட்சி என் தங்கச்சிதான்...” - நடிகர் பாலா

Published on 22/01/2024 | Edited on 22/01/2024
 actor Bala said that I have no intention of joining politics

வேலூர் மாவட்டம் குடியாத்தம் பகுதியில் உள்ள கிரிக்கெட் வீரர்களை ஒருங்கிணைந்து, குடியாத்தம் பிரீமியர் கிரிக்கெட் லீக் (GPCL) என்ற அமைப்பை தொடங்கி, இதில் 12 அணிகள் சேர்க்கப்பட்டு சுமார் 200 இளம் கிரிக்கெட் வீரர்கள் பங்கேற்று கடந்த மூன்று மாதங்களாக 75 போட்டிகள் நடைபெற்றது. 

இதனையடுத்து இறுதிப் போட்டி  நடைபெற்றது. வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட சின்னத்திரை நடிகர் கே.பி.ஒய் பாலா செய்தியாளரிடம் பேசியபோது, மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு என்னால் முடிந்தவற்றை உதவி செய்தேன். மற்றவர்கள் உதவி செய்யவில்லை எனக் கூறும் தகுதி எனக்கு இல்லை.

எனக்கு அரசியலுக்கு வரும் எண்ணமெல்லாம் இல்லை, எனக்கு எந்த கட்சியும் தெரியாது. எனக்கு தெரிந்த ஒரே கட்சி எனது தங்கச்சி எனக் கூறியவர். எனக்கு பொலிட்டிக்கல் மேப் வாங்க கூட தெரியாது. நான் எங்க இருந்து பொலிட்டிக்களில் வருவேன் என்றார்.