Skip to main content

உதவித்தொகைக்கான என்டிஏ நுழைவுத்தேர்வு; 9 முதல் 12ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு செப். 11ல் நடக்கிறது

Published on 30/08/2022 | Edited on 30/08/2022

 

NDA Entrance Test for Scholarship; For the students of 9th to 12th standard. Happening at 11!

 

தேசிய தேர்வு முகமையின் (என்டிஏ) இணையதளத்தில் இடம் பெற்றுள்ள பள்ளிகளில் பயிலும் இதர பிற்படுத்தப்பட்டோர், பொருளாதார ரீதியாக மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் இனத்தைச் சார்ந்த 15 ஆயிரம் மாணவ, மாணவிகளுக்கு நுழைவுத்தேர்வு மூலம் கல்வி உதவித்தொகை வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. 

 

இந்த திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க விரும்பும் மாணவ, மாணவிகளின் பெற்றோருடைய ஆண்டு வருமானம் 2.50 லட்சம் ரூபாய்க்குள் இருக்க வேண்டும். நடப்பு 2022 - 2023ம் கல்வி ஆண்டில் 9, 10 மற்றும் 11, 12ம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவிகளுக்கு தேசிய தேர்வு முகமையால் நுழைவுத் தேர்வு நடத்தப்பட உள்ளது. நுழைவுத் தேர்வு தொடர்பான விவரங்களை, அதன் இணையதளத்தில் மாணவர்கள் அறிந்து கொள்ளலாம். கணினி வழியில் நுழைவுத்தேர்வு நடத்தப்படும். 

 

தேர்வு செய்யப்படும் 9, 10ம் மாணவ, மாணவிகளுக்கு ஆண்டுக்கு 75 ஆயிரம் ரூபாய், 11, 12ம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவிகளுக்கு ஆண்டுக்கு 1.25 லட்சம் ரூபாய் பள்ளிக்கட்டணம், விடுதிக் கட்டணங்கள் சேர்த்து கல்வி உதவித்தொகையாக வழங்கப்படும். இத்திட்டத்தின் கீழ் ஆக. 29ம் தேதி வரை விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இந்நிலையில், இணையவழியில் விண்ணப்பம் சமர்ப்பித்ததில் ஏதேனும் விவரங்கள் விடுபட்டு இருந்தால் அதை சரி செய்து கொள்ள இன்றும், நாளையும் (ஆக. 30 மற்றும் 31ம் தேதி) அவகாசம் வழங்கப்பட்டு உள்ளது. 

 

நுழைவுத்தேர்வு வரும் செப். 11ம் தேதி நடக்கிறது. தேர்வுக்கூட நுழைவுச்சீட்டு செப். 5ம் தேதி இணையதளத்தில் வெளியிடப்படும். விண்ணப்பதாரர்கள் தொலைபேசி எண், ஆதார் எண், ஆதார் அட்டை இணைக்கப்பட்டுள்ள வங்கி கணக்கு எண், வருமானச் சான்றிதழ், சாதி சான்றிதழ் ஆகியவற்றை கட்டாயம் இணைத்திருக்க வேண்டும். இவ்வாறு நாமக்கல் மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா சிங் தெரிவித்துள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தனியார் கல்லூரி பேருந்து மோதி 6 வயது சிறுவன் உயிரிழப்பு

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
6-year-old boy lost their live in private college bus crash

நாமக்கல்லில் தனியார் கல்லூரி பேருந்து மோதி ஆறு வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது.

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு ஈரோடு சாலையில் உள்ள  தோட்ட வாடி கிராமத்தில் உள்ள பேருந்து நிலைய பகுதியில் கூட்டப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த சதீஷ் என்பவர் இருசக்கர வாகனத்தில் தன்னுடைய 6 வயது மகனுடன் சென்று கொண்டிருந்தார். அப்போது இருசக்கர வாகனத்திற்குப் பின்புறம் வந்த தனியார் கல்லூரி பேருந்து எதிர்பாராத விதமாக மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே 6 வயது சிறுவன் தலை நசுங்கி உயிரிழந்தார். தந்தை சதீஷ்குமாரின் கை முறிந்து துண்டானது.

இந்தச் சம்பவம் அங்குப் பரபரப்பை ஏற்படுத்த, உடனடியாக அங்கு வந்த போலீசார் சிறுவனின் உடலைக் கைப்பற்றி  பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். அந்தப் பகுதிகளில் காலை நேரத்தில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருப்பதாகவும், அந்த நேரத்தில் தனியார் பேருந்துகள் மிகுந்த வேகத்துடன் செல்வதால் சாலைத் தடுப்பு, வேகத்தடை ஆகியவற்றை அமைத்துக் கொடுக்க வேண்டும் என அந்த பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

திருச்செங்கோடு காவல் நிலைய போலீசார் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தனியார் கல்லூரி பேருந்து மோதி 6 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் அங்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

Next Story

‘பகல் 12 முதல் 3 வரை வெளியே வர வேண்டாம்’ - மதுரை மக்களுக்கு அறிவுறுத்தல்

Published on 15/04/2024 | Edited on 15/04/2024
Advice to Madurai people Don't come out between 12 noon and 3 am

தமிழகத்தில் கோடை வெயில் தற்போது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக அனைத்து தரப்பு மக்களும் கடும் பாதிப்படைந்து வருகின்றனர். அந்த வகையில், தமிழ்நாட்டில் 8 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட் மற்றும் அதற்கும் மேல் வெயில் கொளுத்தி வருகிறது. 

இந்த நிலையில், மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா மதுரை மாவட்ட மக்களுக்கு அறிவுரை கூறியுள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது, “வெயில் அதிகரிப்பு காரணமாக மதுரையில் பகல் 12 மணி முதல் 3 மணி வரை மக்கள் வெளியே வர வேண்டாம். வெயில் தாக்கம் மற்றும் அனல்காற்று அதிகமாக வீசுவதால் மக்கள் முன்னெச்சரிக்கயாக இருக்க வேண்டும்.

அதாவது, வெயிலில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வாகனங்களில் குழந்தைகள் கால்நடைகளை அனுமதிக்கக் கூடாது. தாகம் எடுக்காவிட்டாலும் போதுமான தண்ணீர் குடிக்க வேண்டும். பழச்சாறுகள் அருந்த வேண்டும். அவசர கால தேவைகளுக்கு 1077 மற்றும் 1070 ஆகிய இலவச அழைப்பு எண்களை தொடர்பு கொள்ளலாம்” எனத் தெரிவித்தார்.