Skip to main content

தொற்று அல்லாத நோய்களிலிருந்து பாதுகாத்துகொள்ள இயற்கை மருத்துவ பயிற்சி பட்டறை!

Published on 20/08/2019 | Edited on 20/08/2019

அண்ணாமலைப் பல்கலைக்கழக தொண்ணூறாம் ஆண்டு நிறைவு விழா மற்றும் எழுபத்திமூன்றாவது இந்திய சுதந்திர தினத்தை கொண்டாடும் வகையில் யோகக்கல்வி மையம் சார்பில் தொற்று நோய் அல்லாத நோய்களிலிருந்து காத்துக்கொள்ளவும் நோய்வராமல் தடுப்பதற்குமான யோகா மற்றும் இயற்கை மருத்துவத்தின் பங்கு என்ற தலைப்பில் ஒரு நாள் பயிற்சி பட்டறை யோகக் கல்வி கூட அரங்கில் நடைப்பெற்றது. பயிற்சியை பல்கலைக்கழக துணைவேந்தர் முருகேசன்  குத்துவிளக்கு ஏற்றி தொடங்கிவைத்தார். யோக மைய இயக்குநர்(பொ) முனைவர் கி.வெங்கடாஜலபதி வரவேற்றார்.  கல்வியியல் புல முதல்வர் ஞானதேவன் தலைமை உரையாற்றி யோகா மற்றும் இயற்கை மருத்துவத்தின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார்.
 

 Natural Medicine Training Workshop on Prevention of Non-Communicable Diseases

 

 

பல்கலைக்கழக துணைவேந்தர் இன்றைய கால சூழ்நிலையில் நோய் வருவதற்கான காரணங்கள், வாழ்க்கை முறை மாற்றத்தால் ஏற்படக்கூடிய இன்றைய சமுதாயத்தை அச்சுறுத்த கூடிய நோய்களான இரத்த அழுத்தம், இருதய நோய், சர்கரை நோய் மற்றும் புற்றுநோய் போன்ற வற்றிலிருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ள நம் தமிழர் பாரம்பரிய முறையான இயற்கை மருத்துவமும், யோக வாழ்வியல் முறையும் ஜப்பானிய தண்ணீர் சிகிச்சை முறை பற்றியும் சிறப்பாக அனைவருக்கும் பயன்படும் வகையில் எளிய முறையில் எடுத்துரைத்தார்.

யோகா மைய இயற்கை மருத்துவர் ருக்மணி தொற்று அல்லாத நோய்களுக்கு இயற்கை மருத்துவத்தின் பங்கு என்ற தலைப்பில் உறையாற்றினார். யோகா பயிற்றுனர்கள் சாந்தி, பார்த்தசாரதி, முடக்கு நீக்கியல் மற்றும் யோக பயிற்சியாளர் தயாளன் ஆகியோர் பயிற்சி பட்டறையில் பங்கு பெற்றவர்களுக்கு பயிற்சியளித்தனர். இவ்விழாவில் பல்கலைக்கழகத்தை சார்ந்த ஏராளமான பேராசிரியர்கள், ஆராய்ச்சி மாணவர்கள், பல்வேறு துறைசார்ந்த மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் என பெரும்பாலனோர் கலந்து கொண்டனர். இவ்விழாவிற்கான அனைத்து எற்பாடுகளையும் யோகா கல்வி மற்றும் ஆராய்ச்சி துறையை சார்ந்த ஆசிரியர் மற்றும் ஊழியர்கள் செய்திருந்தனர்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

100 ரூபாயில் மருத்துவப் புரட்சி; டாடாவின் மைல்கல் சாதனை  

Published on 01/03/2024 | Edited on 01/03/2024
100 rupees to cure cancer; Tata's milestone achievement

உலகில் மிகவும் கொடுமையான நோய்களில் ஒன்றாக கருதப்படுவது புற்றுநோய். தீர்க்க முடியாத அல்லது எளியோரால் சிகிச்சை எடுக்க முடியாத அளவிற்கு மிகக் கொடூரமானதாகக் கருதப்படுகிறது. விலை உயர்ந்த மாத்திரைகள், மருந்துகள், சிகிச்சை முறைகள் எடுத்துக் கொண்ட பிறகு அதிலிருந்து முற்றிலும் விடுபட முடியும். அதிலும் முதல் நிலையிலேயே புற்றுநோய் கண்டறியப்பட்டால் அதிலிருந்து மீள்வது எளிது என்பவையெல்லாம் மருத்துவத் துறையின் கூற்றுகளாக இத்தனை வருடங்கள் இருந்து வருகிறது.

அனைத்து துறைகளிலும் தொழில்நுட்ப வசதிகள், புதிய கண்டுபிடிப்புகள் உலகை புதிய பாதையை நோக்கி அழைத்துச் செல்லும் நிலையில், மருத்துவத்துறையிலும் சில புதிய புரட்சிகள் அபரிமிதமாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில் கேன்சர் சிகிச்சைக்கு பல்லாண்டு காலமாகவே சிகிச்சைக்கான தீர்வு மற்றும் புற்றுநோயால் ஏற்படும் மரணங்களை குறைத்து உயிர் வாழ்தலை நீடிக்க வைப்பது போன்றவை மருத்துவத் துறைக்கு மிகப்பெரிய சவாலாக நீடித்து வந்தது.

இந்தியாவில் மட்டும் சராசரியாக ஆண்டுக்கு 14 லட்சம் பேர் புற்றுநோயால் பாதிக்கப்படுகின்றனர். அதில் ஒன்பது லட்சம் பேர் உயிரிழப்பதாக புள்ளி விவரங்கள் சொல்கின்றன. உலகில் பல்வேறு மூலைகளிலும் புற்றுநோயை முற்றிலுமாக குணப்படுத்துவதற்கான சிகிச்சை முறைகள் மற்றும் மருந்துகளுக்கான ஆய்வுகள் அனுதினமும் நடைபெற்று வருகிறது. இதுவரை அதற்கான முழு தீர்வு எட்டப்படவில்லை என்றே கூறலாம்.

100 rupees to cure cancer; Tata's milestone achievement

இந்நிலையில், மும்பையின் டாடா மெமோரியல் ஹாஸ்பிடல் மருத்துவர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் கடந்த 10 ஆண்டுகளாகவே புற்றுநோய்க்கு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் முழுமையாக ஈடுபட்டு வந்தனர். எலிகளை வைத்து நடைபெற்ற மருத்துவச் சோதனையில் அந்த மருந்து வெற்றியைக் கொடுத்திருக்கிறது. ஏற்கெனவே புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களுக்கும் மீண்டும் புற்றுநோய் வராமல் தடுப்பதற்கு மற்றும் புற்றுநோய் சிகிச்சைக்காக எடுத்துக் கொள்ளும் மருத்துவ முறைகளில் ஏற்படும் பக்க விளைவுகளை 50% குறைப்பதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

ஆர் பிளஸ் சியூ என்ற அந்த மாத்திரை, இந்திய தர நிர்ணய ஆணையத்தின் ஒப்புதல் கிடைத்த உடனே சந்தைகளில் விற்பனையாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதிலும் குறிப்பிடத்தகுந்த விஷயமாக புற்றுநோய் மருத்துவம் என்றாலே விலை உயர்ந்தது என்ற நிலையில் கண்டுபிடிக்கப்பட்ட மருந்தானது நூறு ரூபாய் என்ற குறைவான விலையில் விற்பனை செய்யப்படும் என டாடா நிறுவனம் தெரிவித்துள்ளதுதான்.

Next Story

பாலினம் கண்டறியும் கும்பல்; அதிகாரிகளைக் கண்டதும் ஓட்டம்!

Published on 02/02/2024 | Edited on 02/02/2024
Gender identity gangs; When he saw the officers, he ran

தர்மபுரி மாவட்டம் தொப்பூரில் சட்டவிரோதமாக கருவில் உள்ளது ஆணா பெண்ணா என்பதை கண்டறிந்த கும்பல் அதிகாரிகளை பார்த்ததும் தப்பியோடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் ஏற்கனவே சட்ட விரோதமாகக் கருக்கலைப்புகளில் ஈடுபடுபவர்கள் கைது செய்யப்பட்டு வரும் நிலையில், கடந்த வாரம் கடலூர் மாவட்டம் வேப்பூர் அடுத்த கழுதூர் என்ற கிராமத்தில் உள்ள ஓம் சக்தி மெடிக்கலில், கருவில் இருக்கும் குழந்தை ஆணா, பெண்ணா என ஸ்கேன் மூலம் சட்ட விரோதமாகத் தெரியப்படுத்தப்படுவதாகவும் கருக்கலைப்பில் ஈடுபட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியானது.

வேப்பூர் அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் அகிலன் மற்றும் காவல்துறையினர் அந்த மெடிக்கலுக்கு சென்று திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அங்கு நடத்தப்பட்ட ஆய்வில் ஸ்கேன் செய்ய பயன்படுத்தப்படும் கருவி மற்றும் கருக்கலைப்புக்கு பயன்படுத்திய மருந்துகள் ஆகியவை இருந்தன. மெடிக்கலின் உரிமையாளரான மணிவண்ணன் மற்றும் அந்த மெடிக்கலில் மருந்தாளுநராக பணிபுரிந்த கௌதமி, இடைத்தரகர்கள் தினேஷ், கண்ணதாசன் ஆகிய நான்கு பேரை பிடித்தனர்.

இந்தநிலையில் இதேபோல தர்மபுரி மாவட்டம் தொப்பூர் பகுதியில் தனியாக வீடு எடுத்து தங்கிவந்த ஒரு கும்பல் கர்ப்பிணி பெண்களுக்கு கருவில் உள்ள குழந்தை ஆணா, பெண்ணா என்பதை சட்டவிரோதமாக சோதனை செய்து தெரிவித்து வந்ததாக புகார் எழுந்தது. மாவட்ட நிர்வாகத்திற்கு இதுதொடர்பான ரகசியத் தகவல் கிடைத்த நிலையில் அந்த வீட்டிற்கு அதிகாரிகள் திடீர் சோதனைக்காக சென்றனர்.

அதிகாரிகளை பார்த்ததும் அந்த கும்பல் அங்கிருந்து தப்பி ஓடியதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. கருவில் இருக்கும் சிசு ஆணா, பெண்ணா என்பதை கண்டறிந்து  சொல்வது மட்டுமல்லாது, கருக்கலைப்பு உள்ளிட்ட செயல்களும் அங்கு நடந்திருக்கலாம் என அதிகாரிகளுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவத்தில் பணத்திற்காக சட்டவிரோத செயலில் ஈடுபட்ட  இடைத்தரகர் ஒருவரை பிடித்த மருத்துவக் குழு, அவரை போலீசில் ஒப்படைத்துள்ளது. மேலும் அந்த கும்பல் விட்டுச் சென்ற இரண்டு கார்களையும் போலீசார் பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர்.