Skip to main content

ஒரு லட்சத்து 35 ஆயிரத்து 250 மரங்களை வெட்ட அனுமதி கேட்ட தே.நெடுஞ்சாலை ஆணையம்!  

Published on 04/05/2018 | Edited on 04/05/2018

 

National Highway


சுற்றுசூழல் தொடர்பான பிரச்சனைகள் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே இருக்கும் நிலையில் மரம் வளர்பததை வலியுறுத்தும் வகையில் அவ்வப்போது மரங்கள் நடபட்டு வருகிறது. 8 வழி சாலை அமைக்க தற்போது லட்ச கணக்கில் மரங்களைவெட்ட போவதாக தேசிய நெடுஞ்சாலை ஆணையம் தெரிவித்து இருக்கிறது. 
 

சென்னையிலிருந்து பெங்களூருக்கு அதிவிரைவு 8 வழி சாலையை 13,422 கோடி செலவில் அமைக்க திட்டமிடப்பட்டு இருக்கிறது. இந்த அதிவிரைவு சாலையானது சென்னைக்கு அடுத்துள்ள ஸ்ரீவில்லிபுத்தூரில் தொடங்கி பெங்களூர் வரை சுமார் 262 கிலோ மீட்டர் வரை அமைக்க பட இருக்கிறது. இந்த அதிவிரைவு சாலைகள் அமைபதற்கான சுற்றுசூழல் அனுமதி கோரி தேசிய நெடுஞ்சாலை துறை ஆணையம் சுற்றுசூழல் மதிப்பீட்டு குழுவிடம் விண்ணப்பித்து இருக்கிறது. 
 

அதில் தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகம் ஆகிய மாநிலத்திருந்து மொத்தம் 70 ஹெக்டர் வனப்பகுதியை கையகப்படுத்தவுள்ளதாகவும், தமிழ்நாட்டில் மட்டும் 5.42 ஹெக்டோர் நிலத்தை ஆணையம் கையகப்படுத்த போவதாகவும், இந்த திட்டத்தில் மூன்று கட்டங்களாக மரங்கள் வெட்டபட இருக்கிறது. முதல் கட்டமாக 1 லட்சம் மரங்களும், இரண்டாவது கட்டமாக 24,800 மரங்களும், மூன்றாவது கட்டமாக 10,450 மரங்கள் வெட்டபோவதாக ஆணையம் தெரிவித்துள்ளது. 
 

மூன்றாம் கட்டத்தில் பல பகுதிகள் தமிழக எல்லைக்குள் வருகிறது. மொத்தம் 1 லட்சத்து 35 ஆயிரத்து 250  மரங்கள் வெட்டபட இருக்கிறது. அந்த விண்ணப்பத்தை பரிசிலனை செய்த பின்னர் மதிப்பீட்டு குழு திட்டதிற்காண TOR (Terms of Referance) வழங்கி இருக்கிறது. மேலும் சில ஆய்வுகளை மேற்கொள்ளுமாறும், 1 லட்சத்திற்கு மேலான மரங்கள் வெட்டபடுவதால் ஏற்படும் சுற்றுசூழல் பாதிப்பு குறித்து ஆய்வு செய்யுமாறும், தொல்லியல் துறையிடம் தடையில்லா சான்றிதழ் வாங்குமாறும் கூறியிருக்கிறது. இந்த திட்டத்தை செயல்படுத்த நீர் எங்கு இருந்து பெறப்படும் என்று கேட்டு இருக்கிறது. 
 

சென்னை முதல் சேலம் வரை அமைக்க பட இருக்கும் பசுமை வழிசாலைக்கு கடும் எதிர்ப்பு கிளம்பி இருந்த நிலையில் தற்போது இந்த திட்டதிற்கும் சுற்றுசூழல் ஆர்வலர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பி இருக்கிறது.     
 

சார்ந்த செய்திகள்

Next Story

டேங்கர் லாரி கவிழ்ந்து விபத்து; தீ பிடித்து எரிந்ததால் பரபரப்பு!

Published on 01/01/2024 | Edited on 01/01/2024
Tanker truck overturned incident  

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இருந்து தமிழகத்திற்கு டேங்கர் லாரி ஒன்று ஓசூர் - கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருந்துள்ளது. அப்போது இந்த டேங்கர் லாரி கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே உள்ள மேலுமலை கணவாய் என்ற இடத்தில் வந்தபோது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த டேங்கர் லாரி சாலையோரம் கவிழ்ந்தது.

இதனையடுத்து டேங்கர் லாரி திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த தீ விபத்து காரணமாக கிருஷ்ணகிரி - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. விபத்திற்கு உள்ளான லாரியில் இருந்த ஓட்டுநர் பலத்த காயங்களுடன் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த டேங்கர் லாரியில் மேலும் ஒருவர் சிக்கி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கிருஷ்ணகிரி மற்றும் சூளகிரி தீயணைப்புத் துறையினர், டேங்கர் லாரியில் தீப்பிடித்து எரிந்து கொண்டிருக்கும் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த விபத்து சம்பவம் குறித்து குருப்பரப்பள்ளி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story

'நெடுஞ்சாலைத்துறை பணிக்காக' - அதிகாரிகள் போல் உலோகத் தடுப்பான்களைத் திருடிய கும்பல் கைது 

Published on 08/11/2023 | Edited on 08/11/2023

 

Kumbam arrested for 'highway department work'- collecting metal barriers as officials

 

சாலையோரம் விபத்துகளைத் தடுப்பதற்காக வைக்கப்பட்டுள்ள உலோகத் தடுப்பான்களை நெடுஞ்சாலைத் துறை பணியாளர்கள் போல் ஏமாற்றி திருட்டில் ஈடுபட்ட ஐந்து பேர் கொண்ட கும்பலை போலீசார் அதிரடியாகக் கைது செய்துள்ளனர்.

 

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை பகுதியில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் சாலைகளின் ஓரத்தில் விபத்துகளையும், மண் சரிவுகளையும் தடுக்கும் வகையில் உலோகத் தடுப்பான்கள் வைக்கப்பட்டுள்ளது. இவை சில பகுதிகளில் சேதமடைந்த நிலையிலும் காணப்பட்டது. சில நாட்களாக இந்த உலோகங்கள் காணாமல் போனது நெடுஞ்சாலைத் துறையினருக்கு அதிர்ச்சியைக் கொடுத்தது. இந்நிலையில் நேற்று நெடுஞ்சாலை பணியாளர்கள் ரோந்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.

 

அப்போது பாண்டூர் கிராமத்தின் சாலை பகுதியில் ஐந்து பேர் சந்தேகத்திற்கு இடமாக சாலையோர தடுப்பான்களைக் கழட்டிக் கொண்டிருந்தனர். உடனடியாக போலீசாருக்கு நெடுஞ்சாலைத்துறை தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு வந்த உளுந்தூர்பேட்டை போலீசார் ஐந்து பேரையும் பிடித்து விசாரணை மேற்கொண்டனர். அதில் அவர்கள் அனைவரும் சாலையோரத்தில் உள்ள உலோகத் தடுப்பான்களைத் திருடி வண்டிகளில் அடுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. அவர்கள் வந்த வாகனத்தில் 'நெடுஞ்சாலைத் துறை பணிக்காக' என போர்டும் வைக்கப்பட்டிருந்தது. ஆனால் அவர்கள் ஐந்து பேரும் நெடுஞ்சாலைத் துறை பணியாளர்கள் அல்ல.

 

ஐந்து பேரையும் பிடித்து விசாரணை செய்ததில், அவர்கள் கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த கிருஷ்ணகுமார், பூபாலன், சங்கர், கார்த்திக், சென்னையைச் சேர்ந்த ராஜ்குமார் என்பது தெரியவந்தது. இவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், ஒரு நாளுக்கு முன்னதாகவே வந்து உலோகத் தடுப்பான்களின் போல்டுகளை கழட்டி வைத்துவிட்டுச் சென்று விடுவர். அடுத்த நாள் எந்த ஒரு சலனமும் இல்லாமல் நெடுஞ்சாலைத் துறை பணியாளர்கள் போன்று கழட்டி வைக்கப்பட்ட உலோகத் தடுப்பான்களை வண்டியில் ஏற்றிக்கொண்டு செல்வர். இதுவரை 6 லட்சம் ரூபாய் மதிப்பிலான உலோகத் தடுப்பான்களை இந்த கும்பல் திருடியுள்ளது தெரியவந்துள்ளது. இதற்கு இவர்கள் பயன்படுத்திய லாரி மற்றும் மினி வேன் ஆகியவை போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டதோடு, ஐந்து பேரையும் கைது செய்த போலீசார், இவர்கள் இதேபோன்று வேறு ஏதேனும் இடங்களிலும் திருட்டில் ஈடுபட்டார்களா என்பது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.