Skip to main content

தேசிய கல்விக் கொள்கைக்கு எதிராக கிராம சபை தீர்மானம். 

Published on 03/10/2019 | Edited on 03/10/2019


 அக்டோபர் 2- ஆம் தேதி காந்தி ஜெயந்தியை முன்னிட்டு கிராமங்கள் தோறும் கிராம சபைக் கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது. கிராம சபைக்கூட்டங்களில் நிறைவேற்றப்படும் தீர்மானங்கள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. பல்வேறு பிரச்சனைகளுக்கும் தீர்வுகள் எட்டப்பட்டுள்ளது. அதனால் தான் கிராம சபை கூட்டங்களில் முக்கிய தீா்மானங்களை நிறைவேற்றி வருகின்றனா்.  


அதேபோல தான் கடந்த 2 ஆண்டுகளாக புதுக்கோட்டை மற்றும் தஞ்சை மாவட்டங்களில் ஏராளமான கிராமங்களில் ஹைட்ரோ கார்பனை திட்டத்தை ரத்து செய் என்று தீர்மானங்களை கொண்டு வந்தனர். பல கிராமங்களில் தீர்மான நோட்டுகளில் எழுதாமல் மனுக்களை மட்டும் பெற்றுக் கொண்டு சென்றுவிட்டனர் அதிகாரிகள். ஆனால் நெடுவாசல், சேந்தன்குடி, கொத்தமங்கலம் உள்ளிட்ட பல கிராமங்களில் தீா்மான நோட்டுகளில் எழுதியுள்ளனர். 

National Education Policy  Village Council resolution against.

பிறகு அந்த தீர்மானங்கள் மீதான நடவடிக்கை என்ன ஆனது என்று ஊராட்சி ஒன்றியங்களில கேட்டால் மாவட்ட நிர்வாகத்திற்கு அனுப்பியதாகவும், மாவட்ட நிர்வாகம் ஒன்றியத்தில் உள்ளது என்றும் பதில் கூறியுள்ளனர். இந்த நிலையில் தான் இன்று நடந்த கிராம சபைக் கூட்டங்களில் பல்வேறு கிராமங்களிலும் பல முக்கிய தீர்மானங்களை கிராம மக்கள் கொண்டு வந்தனர். 


வழக்கம் போல் முன்னதாக எழுதப்பட்டிருந்த வழக்கமான தீர்மானங்களைத் தவிர பொதுமக்கள் கொடுத்த கோரிக்கைகளை தீர்மான நோட்டுகளில் எழுதாமல் மனுவை கையில் வாங்கிச் சென்றுவிட்டனர். இன்று புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகில் உள்ள சேந்தன்குடி, கொத்தமங்கலம், நெடுவாசல் உள்ளிட்ட கிராமங்களில் நடந்த கிராம சபைக் கூட்டத்தில் தொடர்ந்து ஹைட்ரோ கார்பன் வேண்டாம் என்றும் தமிழ்நாட்டில் செயல்படுத்த தமிழக அரசு அனுமதிக்க கூடாது என்ற தீர்மானமும், ஏழை மாணவர்களை பாதிக்கும் வகையில் மத்திய அரசால் கொண்டு வரப்பட்டுள்ள தேசிய கல்விக் கொள்கையை தமிழ்நாட்டில் புகுத்தி தமிழக மாணவர்களின் கல்வியை சீரழிக்க கூடாது. அதற்கு தமிழ்நாடு அரசு துணை போக கூடாது. தேசிய கல்விக் கொள்கைளை தமிழக அரசு எதிர்க்க வேண்டும் என்ற தீர்மானத்தையும் மனுவாக கொடுத்தனர். 
 

National Education Policy  Village Council resolution against.

மேலும் புதுக்கோட்டை, ராமநாரபுரம், சிவகங்கை உள்ளிட்ட 7 மாவட்ட மக்களின் சுமார் 80 ஆண்டுகால கனவுத் திட்டமான காவிரி- வைகை- குண்டாறு இணைப்புத் திட்டத்தை மத்திய, மாநில அரசுகள் உடனடியாக விரைந்து செயல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை இளைஞர்கள் மனுவாக கொடுத்தனர். வழக்கம் போல் கிராம சபை அதிகாரிகள் மனுவை பெற்றுக் கொண்டதுடன், தீர்மான நோட்டில் எழுதாமல் அதிகாரிகளை கேட்டு எழுதிக் கொள்வதாக மனுக்களை பெற்றுச் சென்றுள்ளனர்.  

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

'முந்தியது எந்த மாவட்டம்?'- தலைமை தேர்தல் அதிகாரி வெளியிட்ட தகவல்

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
'Which district was the first?'- the information released by the Chief Electoral Officer

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று தற்போது முடிந்துள்ளது. மாலை 6:00 மணிக்குள் வாக்குச்சாவடிகளுக்கு வாக்களிக்க வந்தவர்களுக்கு டோக்கன் வழங்கி வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் அரசியல் கட்சியினர் முன்னிலையில் வாக்கு இயந்திரங்கள் சீல் வைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

தமிழகத்தில் இறுதி நிலவரப்படி 72.09 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த மாநில தேர்தல் ஆணையர் சத்யபிரதா சாஹு பேசுகையில், ''தமிழகத்தில் ஏழு மணி நிலவரப்படி 72.09 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. வாக்குப் பெட்டிகளுக்கு சீல் வைத்து வாக்கு எண்ணும் மையத்திற்கு எடுத்துச் செல்லும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் அதிகபட்சமாக கள்ளக்குறிச்சியில் 75.67 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. மத்திய சென்னையில் 67.37 சதவீதம், தென்சென்னையில் 67.82 சதவீதம், வட சென்னையில் 69.26 சதவீதம், தர்மபுரி மக்களவைத் தொகுதியில் 75.44 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது. சில வாக்குச்சாவடிகளில் டோக்கன்கள் கொடுக்கப்பட்டு வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. மாலை 3 மணிக்கு மேல் ஏராளமான மக்கள் அதிக அளவில் தங்கள் வாக்குகளை செலுத்தியுள்ளனர். தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் சட்ட ஒழுங்கு பிரச்சினை இன்றி அமைதியான முறையில் நடந்துள்ளது'' என்றார்.

திருவள்ளூர்-71.87 சதவீதம், வடசென்னை-69.26 சதவீதம், தென் சென்னை-67.82 சதவீதம், ஸ்ரீபெரும்புதூர்-69.79 சதவீதம், காஞ்சிபுரம்-72.99 சதவீதம், அரக்கோணம்-73.92 சதவீதம், வேலூர்-73.04 சதவீதம், கிருஷ்ணகிரி-72.96 சதவீதம், தர்மபுரி-75.44 சதவீதம், திருவண்ணாமலை-73. 35 சதவீதம், ஆரணி-73.77 சதவீதம், விழுப்புரம்-73.49 சதவீதம், சேலம்-73.55 சதவீதம், நாமக்கல்74.29 சதவீதம், ஈரோடு-71.42 சதவீதம், திருப்பூர் -72.02 சதவீதம், நீலகிரி-71.07 சதவீதம், கோவை-71.17 சதவீதம் வாக்குகள் பதிவாகியள்ளது.

Next Story

தமிழகம், புதுவையில் முடிந்தது வாக்குப்பதிவு

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
Polling has ended in Puduvai, Tamil Nadu

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று தற்போது முடிந்துள்ளது. மாலை 6:00 மணிக்குள் வாக்கு சாவடிகளுக்கு வாக்களிக்க வந்தவர்களுக்கு டோக்கன் வழங்கி வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அரசியல் கட்சியினர் முன்னிலையில் வாக்கு இயந்திரங்கள் சீல் வைக்கும் பணி நடைபெற்று வருகிறது.