Skip to main content

தேசிய வாழை ஆராய்ச்சி மையம் சர்தார் பட்டேல் விருதை பெற்றுள்ளது..!  

Published on 16/07/2021 | Edited on 16/07/2021

 

National Banana Research Center receives Sardar Patel Award

 

திருச்சியில் இயங்கிவரும் தேசிய வாழை ஆராய்ச்சி மையத்தில், வாழையில் காவேரி, கல்கி, உதயம், காவேரி, காவேரி சுகந்தம், காவேரி ஹரிதா, மற்றும் காவிரி கன்னியா போன்ற ரகங்களை வெவ்வேறு தட்பவெப்ப நிலைகளுக்கு ஏற்ப பல ரகங்கள் வெளியிடப்பட்டுள்ளது.

 

 நாட்டின் பல்வேறு பகுதிகளில் இந்த ரகங்கள் தற்போது உற்பத்தி செய்வதற்கான நடவடிக்கையை எடுத்து வரும் நிலையில் உலக உணவு மற்றும் வேளாண் நிறுவனத்துடன் இணைந்து பல்வேறு புரிந்துணர்வு திட்டங்களையும் வாழை ஆராய்ச்சி மேற்கொண்டு உள்ளது.

 

இந்திய மக்கள் தொகையில் உள்ள ஊட்டச்சத்து குறைபாடுகளான வைட்டமின் ஏ மற்றும் இரும்புச்சத்து குறைபாடுகளை நிவர்த்தி செய்யும் வகையில் பயோ ஃபோர்டிபைய்டு ரகங்களை உற்பத்தி செய்யும் ஆராய்ச்சிகளை மேற்கொண்டுள்ளது. 

 

சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கான வாழைக் கன்றுகள் தேவைகளை பூர்த்தி செய்வதற்காக குறைந்த விலை வாழை கன்றுகளை உற்பத்தி செய்யும் கேளா விருத்தி என்ற தொழில் நுட்பத்தையும் நபார்டு வங்கியின் கூட்டு முயற்சியோடு செயல்படுத்தி வருகிறது. 

 

ஆராய்ச்சிக் கூடங்களில் உள்ள தொழில் நுட்பங்கள் அவர்களை சென்றடையும் பொழுதும் அந்த தொழில் நுட்பங்களின் உள்ள வேறுபாடுகளை வயல்வெளிகளில் இருந்து ஆராய்ச்சிக் கூடத்திற்கு எடுத்து வருவதில் வேளாண் விரிவாக்க நோக்கமாகக் கொண்டு இந்த மையம் வேளாண் விரிவாக்க ஆராய்ச்சி மற்றும் விரிவாக்க நிகழ்வுகளையும் முன்னெடுத்து வருகிறது. 

 

இந்திய வேளாண் ஆராய்ச்சிக் குழுமத்தின் அங்கமாக உள்ள ஆராய்ச்சி நிறுவனங்களுக்கு இடையேயான போட்டியில் தேசிய வாழை ஆராய்ச்சி மையம் சிறந்த ஆராய்ச்சி நிறுவனம் தேர்வு செய்யப்பட்டு அந்த போட்டியில் முதல் இடத்தையும் பிடித்துள்ளது. 

 

தேசிய அளவில் முதல் இடத்தைப் பிடித்த நிறுவனத்திற்கு உயர்ந்த விருதான சர்தார் பட்டேல் சிறந்த ஆராய்ச்சி நிறுவனத்திற்கான 2020 ஆம் ஆண்டிற்கான விருதை திருச்சி தேசிய வாழை ஆராய்ச்சி மையம் பெற்றுள்ளது.

 

இந்த விருது குறித்து தேசிய வாழை ஆராய்ச்சி மையத்தின் இயக்குனர் முனைவர் உமா அவர்கள் கூறுகையில், “இந்தப் போட்டியானது கடந்த ஐந்து வருடங்களில் ஆராய்ச்சி நிறுவனங்கள் மேற்கொண்டுள்ள அனைத்து வகையான பணிகள் மற்றும் மேம்பாடுகள் வளர்ச்சிகள் உள்ளிட்ட பலவற்றை ஆராய்ந்து அதில் சிறந்த நிறுவனமாக செயல்படக்கூடிய மையத்திற்கு இந்த உயரிய விருது வழங்கப்படுகிறது. எனவே விவசாயிகளை வாழை உற்பத்தியில் மேம்படுத்துவதற்கு அதிக முயற்சி எடுத்து சுமார் 4500க்கும் மேற்பட்ட ரகங்களை பாதுகாத்து பராமரித்து வரும் பணியை திருச்சி தேசிய வாழை ஆராய்ச்சி மையம் கொண்டுள்ளது. இந்த முயற்சிக்காக கிடைத்த விருது” என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

மாவட்ட அளவிலான துப்பாக்கி சுடுதல் போட்டி; சாம்பியன் பட்டத்தை வென்ற திருச்சி அணி

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
Trichy won the champion title for District Level Shooting Competition

திருச்சியில் நடைபெற்ற மாவட்ட அளவிலான துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் திருச்சி ரைபிள் கிளப் அணி சாம்பியன் பட்டத்தை பெற்றுள்ளது. 

திருச்சி மாநகர காவல்துறை கே.கே.நகர் ஆயுதப்படை வளாகத்தில் மாநகர ரைபில் கிளப் 31.12.2021 ஆம் தேதி தொடங்கப்பட்டது. மாவட்ட, தேசிய மற்றும் சர்வதேச அளவில் துப்பாக்கி சுடும் போட்டிக்கு கலந்து கொள்ள பயிற்சி பெறும் வகையில் செயல்பட்டு வரும் இந்த கிளப் திருச்சி மாநகர காவல் ஆணையர் ந. காமினி தலைமையில் செயல்பட்டு வருகிறது. இந்திய ரைபிள் சங்கத்தின் கீழ் செயல்பட்டு வரும் இந்த ரைபிள் கிளப்பில் மாவட்ட அளவிலான ஏர் பிஸ்டல் மற்றும் ஏர் ரைபிள் துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டிகள் ஏப்ரல் 27ல் தொடங்கி 28 வரை இருநாள்கள் நடைபெற்றன.

இதில் திருச்சி ரைபிள் கிளப்பில் துப்பாக்கி சுடும் பயிற்சி பெற்ற சுமார் 340 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். இப்போட்டியில் 10 மீட்டர் சுடுதளத்தில் துப்பாக்கி சுடுதல் போட்டிகளில் சிறுவர்கள், இளையோர் மற்றும் முதியவர்கள் என ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவு என தரம் பிரிக்கப்பட்டு சப்யூத், யூத், ஜீனியர், சீனியர், மாஸ்டர் மற்றும் சீனியர் மாஸ்டர் என தனித்தனியாக பல்வேறு பிரிவுகளில் நடைபெற்றது. இந்த போட்டியில் பெரும்பாலான போட்டிகளில் வெற்றி அதிக புள்ளிகளைப் பெற்று திருச்சி ரைபிள் கிளப் ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் பட்டத்தை தட்டிச்சென்றது. 

போட்டியில் பங்கேற்ற மத்திய மண்டல காவல்துறை தலைவர் ஜி. கார்த்திகேயன் 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் இரு வெள்ளி பதக்கங்களை வென்றார். மேலும் ஏர் பிஸ்டல் மற்றும் ஏர் ரைபிள் துப்பாக்கி சுடுதல் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு ஞாயிற்றுக்கிழமை(28-04-24) பரிசுகள் வழங்கப்பட்டது. இதில் தமிழ்நாடு துப்பாக்கி சுடுதல் சங்க செயலாளர் மற்றும் திருச்சி ரைபிள் கிளப் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இப்போட்டியில் வெற்றிபெற்ற 76 பேருக்கு தங்க பதக்கமும், 69 பேருக்கு வெள்ளி, 50 நபர்களுக்கு வெண்கலப் பதக்கங்கள் என மொத்தம் 195 பதக்கங்கள் வழங்கப்பட்டது. மத்திய மண்டல காவல்துறை தலைவர் ஜி கார்த்திகேயன் அவற்றை வழங்கி பாராட்டினார்.

Next Story

ரயில் பயணியிடம் கைவரிசை காட்டிய நபர்; போலீசார் அதிரடி நடவடிக்கை

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
Police action on A person who shows his hand to a train passenger

திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்தில் பயணியிடம் சங்கிலியைப் பறித்த நபரை, ரயில்வே போலீஸார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.

திருச்சியில் இருந்து நாகூர் செல்லும் விரைவு ரயில் ஏப்ரல் 26 ஆம் தேதி திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்தில் 5 ஆவது நடைமேடையில் புறப்படத் தயாராக நின்றிருந்தது. அதில் செல்லவிருந்த பயணிகள் ரயிலில் அமர்ந்திருந்தனர். அப்போது ஜன்னலோரத்தில் நின்றிருந்த மர்ம நபர் ஒருவர், ரயிலில் அமர்ந்திருந்த நெல்லையைச் சேர்ந்த க. வெங்கடேஷ் என்ற பயணியின் கழுத்தில் கிடந்த 1 பவுன் சங்கிலியை பறித்துக்கொண்டு தப்பியோடிவிட்டார். 

இந்த சம்பவம் தொடர்பாக வெங்கடேஷ் போலீசாரிடம் புகார் அளித்தார். அவர் அளித்த அந்த புகாரின் பேரில், திருச்சி ரயில்வே போலீஸ் ஆய்வாளர் மோகனசுந்தரி, உதவி ஆய்வாளர்கள் சுரேஷ்குமார், திருமலைராஜா மற்றும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை (28-04-24) காலை திருச்சி ரயில் நிலையத்தில் சந்தேகத்துக்கிடமான வகையில் சுற்றித்திரிந்த நபரை போலீசார் பிடித்து விசாரணை மேற்கொண்டனர். இதில் அந்த நபர் கடலூர் மாவட்டம் அகரம், தங்காளிக்குப்பம் பகுதியைச் சேர்ந்த ர. கோவிந்தராஜ் (26) என்பதும், அவர்தான் வெங்கடேஷின் சங்கிலியை பறித்தது மற்றும் விருத்தாசலம் ரயில் நிலையத்திலும் இதேபோல ஒரு திருட்டு சம்பவத்தில் அவருக்கு தொடர்பிருப்பதும் தெரியவந்தது. இதனையடுத்து போலீஸார் அவரைக் கைது செய்து திருச்சி மாவட்ட 4 ஆவது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.