Skip to main content

'நடராஜர் கோவிலுக்கு தனிச்சட்டம் வேண்டும்...' -சிபிஎம் கையெழுத்து இயக்கம்!

Published on 19/06/2022 | Edited on 19/06/2022

 

'Natarajar temple needs separate law ...' - CPM signature movement!

 

சிதம்பரம் நடராஜர் கோவில் தீட்சிதர்கள் கட்டுப்பாட்டிலிருந்து வருகிறது. கோவிலில் பல்வேறு முறைகேடுகள் நடைபெறுவதாகவும், கனகசபையில் பக்தர்களை வழிபட அனுமதிப்பதில்லை என்பது குறித்து பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகள் கடிதங்களாக இந்து சமய அறநிலைத்துறையினருக்கு பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் அனுப்பியிருந்தனர்.

 

'Natarajar temple needs separate law ...' - CPM signature movement!

 

இந்நிலையில் நீதிமன்ற உத்தரவின்படி கோவில் கனகசபையில் ஏறி வழிபட அரசு ஆணை பிறப்பித்தது. அதன் பேரில் பக்தர்கள் வழிபட்டு வருகின்றனர். இந்நிலையில் கோவிலில் உள்ள அசையும், அசையா சொத்துக்கள் கணக்கு விபரம், அறக்கட்டளை குறித்த விவரம் கேட்பதற்காக கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு இந்து சமய அறநிலையத் துறை அலுவலர்கள் கோவிலுக்கு வந்தனர். இவர்களைக் கோவில் தீட்சிதர்கள் கணக்கு கேட்கத் தமிழக அரசுக்கு அதிகாரம் இல்லை என திருப்பி அனுப்பி விட்டனர்.

 

'Natarajar temple needs separate law ...' - CPM signature movement!

 

இதற்குக் கண்டனம் தெரிவித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் போராட்டம் நடைபெற்றது. நடராஜர் கோவில் பாதுகாப்பது குறித்து வரும் 20, 21 தேதிகளில் இந்துசமய அறநிலையத்துறை தபால் மூலமாகவோ, நேரடியாக ஆலோசனைகளை வழங்கலாம் என அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதனையொட்டி நடராஜர் கோவிலைப் பாதுகாக்க வேண்டியும், நடராஜர் கோவிலுக்குத் தனிச்சட்டம் இயற்றி அரசின் இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் கொண்டுவர வேண்டும் என்பதை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யுனிஸ்ட் கட்சியின் சார்பில் சிதம்பரம் நகரம், கொத்தங்குடி, அண்ணாமலை நகர், மண் ரோடு, தெற்கிருப்பு  உள்ளிட்ட 30 மையங்களில் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது.  இதில் சிதம்பரம் நகர செயலாளர் ராஜா, மாவட்டக்குழு உறுப்பினர்கள் முத்துக்குமரன், ஜெயசித்ரா, நகர் குழு உறுப்பினர்கள், வார்டு கிளை செயலாளர்கள் கட்சியினர் கலந்துகொண்டு வீடு வீடாகச் சென்று நடராஜர் கோவிலில் நடைபெறும் முறைகேடுகளை பொதுமக்களுக்கு விளக்கிக்கூறி கையெழுத்து இயக்கத்தில் ஈடுபட்டனர்.

 

கையெழுத்து இயக்கத்தில் பெறப்பட்ட அனைத்து மனுக்களையும் வரும் 20, 21-ல் கடலூரில் நடராஜர் கோவில் குறித்து நடைபெறும் ஆலோசனை கேட்பு கூட்டத்தில் அறநிலையத்துறை அலுவலர்களிடம் அளிக்க உள்ளனர். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

சிதம்பரம் நடராஜர் கோயிலில் உழவாரப் பணிகள் குறித்து ஆய்வு

Published on 15/03/2024 | Edited on 15/03/2024
 study on tillage work at Chidambaram Natarajar temple

சிதம்பரம் நடராஜர் கோயிலில் கடலூர் மாவட்ட இந்து அறநிலையத்துறை இணை ஆணையர் பரணிதரன் தலைமையில் கோட்ட பொறியாளர் அசோகன் ஆலய நிலங்கள் தனி வட்டாட்சியர் செந்தில்வேலன், மண்டல ஸ்தபதி, கோயில்கள் ஆய்வாளர் உள்ளிட்டவர்கள் அடங்கிய கோயில் உழவாரப் பணிகள் குறித்த நிலையான ஆய்வுக் குழுவினர் கோயிலில் பல்வேறு இடங்களில் கோயில் எவ்வாறு பராமரிக்கப்படுகிறது. சுத்தமாக உள்ளதா? என்பது குறித்து நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் ஆய்வுகளை மேற்கொண்டனர்.

இவர்கள் தெற்கு கோபுர வாயில், மேல கோபுர வாயில், கோயில் உட்பிரகாரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ஆய்வு செய்தனர். இது குறித்து இணை ஆணையர் பரணிதரன், கோயில்கள் எவ்வாறு பராமரிக்கப்படுகிறது என்பது குறித்து நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் ஆய்வு செய்ததாகவும் இது குறித்த தகவலையும் நீதிமன்றத்தில் தெரிவிக்க உள்ளதாகவும் செய்தியாளர்களிடம் கூறினார்.

இதனைத் தொடர்ந்து கோவில்களில் வெளி பிரகாரங்களில் கழிவு நீர் வெளியேறி துர்நாற்றம் வீசுவதையும், தெற்கு வீதி, கீழ வீதி கோபுரம் அருகில் மாட்டு தொழுவம் அமைக்கப்பட்டுள்ளதால் அங்கு மாட்டு சாணிகள் மலைபோல் குவிக்கப்பட்டுள்ளது. இதனால் இவ்வழியாக வரும் பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் துர்நாற்றம் தாங்காமல் அவதிப்படுவதாக உழவார பணிகள் ஆய்வுக் குழுவினரிடம் தெரிவித்தனர். இந்த கருத்தை ஏற்றுக்கொண்டு நீதிமன்றத்தில் தெரிவிப்பதாக கூறினார்கள்.

முன்னதாக ஆய்வுக் குழுவினர் கோயிலுக்கு உள்ளே வரும்போது இது தீட்சிதர்கள் கட்டுப்பாட்டில் உள்ள கோயில் இந்து அறநிலையத்துறைக்கும் கோயிலுக்கும் சம்பந்தம் இல்லை. இங்கு உழவார பணிகள் குறித்து ஆய்வு செய்வது கண்டிக்கத்தக்கது. இதற்கு ஆட்சேபனை தெரிவிக்கிறோம். இது உள்நோக்கம் கொண்டது என கோயில் தீட்சிதர்களின் செயலாளர் ஆய்வு குழுவினரிடம் கடிதம் அளித்துள்ளார். கோயிலில் உழவார பணிகள் குறித்து ஆய்வு செய்தது கோயிலில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story

‘சிதம்பரம் நடராஜர் கோயில் நிர்வாகம் வரவு, செலவு கணக்கை தாக்கல் செய்க’ - உயர்நீதிமன்றம் உத்தரவு

Published on 24/02/2024 | Edited on 24/02/2024
Nataraja Temple administration to submit income and expenditure account  orders High Court

சிதம்பரம் நடராஜர் கோவிலை பொது தீட்சிதர்கள் நிர்வாகம் செய்து வருகின்றனர். இந்தச் சூழலில் சிதம்பரம் நடராஜர் கோவிலின் நான்கு கோபுரங்கள் அமைந்துள்ள பகுதியிலும், கோவிலின் முதல் மற்றும் இரண்டாவது பிரகாரங்களிலும் எந்த அனுமதியுமின்றி கட்டுமானங்கள் மேற்கொள்ளப்படுவதாகவும் அதற்குத் தடை விதிக்கக் கோரியும், இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

அறநிலையத்துறையின் மனுவில், பழமையான கோவில்களில் எந்த அனுமதியும் பெறாமல் கட்டுமானங்களை மேற்கொள்ளக்கூடாது என உயர்நீதிமன்றமே உத்தரவிட்டுள்ளபோதும், அதை மீறி ஆறு அடிக்கு மேல் தோண்டப்பட்டுள்ளதாகவும், எந்த மாதிரியான பணிகள் நடக்கின்றன என்பதே தெரியவில்லை எனவும், கோவிலுக்குள் இருந்த நூறு ஆண்டுகள் பழமையான மரங்கள் வெட்டப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இந்த வழக்கு விசாரணை, சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் ஆர். மகாதேவன், பி.டி. ஆதிகேசவலு அமர்வின் முன்பாக நடைபெற்று வந்தது. பொது தீட்சிதர்கள் குழு தரப்பில் கடைகளோ அன்னதான கூடமோ கட்டவில்லை என்றும், தற்காலிக அமைப்பில் அலுவலகம் தான் செயல்படுகிறது என விளக்கம் அளித்தனர். இந்த வழக்கு விசாரணையின்போது, புராதனமிக்க எந்த கோவிலிலும் அனுமதியின்றி எவரும் கை வைக்க நீதிமன்றம் அனுமதிக்காது என்றும், கோவில்கள் பக்தர்களுக்கானது மட்டுமே என்றும், வேறு நோக்கத்தில் யாரும் கை வைத்தால் அவர்களை இந்த நீதிமன்றம் தடுக்கும் எனவும் எச்சரிக்கை விடுத்தது உயர்நீதிமன்றம்.

இந்நிலையில், சிதம்பரம் நடராஜர் கோவில் நிர்வாகம், ஆருத்ரா தரிசன அறக்கட்டளை ஆகியவற்றின் கடந்த 3 ஆண்டு வரவு, செலவு கணக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று தீட்சிதர்கள் சபைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.