Skip to main content

நடராஜர் கோயில் திருவிழா..! பொதுமக்கள் வழிபட கோயில் தீட்சிதர்கள் கட்டுப்பாடு அறிவிப்பு..! 

Published on 06/07/2021 | Edited on 06/07/2021

 

Natarajar Temple Festival ..! Public Worship Temple Diocese Restriction Announcement ..!


சிதம்பரம், நடராஜர் கோயிலில் ஆனி திருமஞ்சன திருவிழாவிற்கு ஜூலை 6ஆம் தேதி காலை 7 மணியிலிருந்து 8 மணிக்குள் கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெறும். அதனைத் தொடர்ந்து உற்சவம் நடைபெறும். இந்தக் காலத்தில் அரசின் வழிகாட்டுதல்படி 6ஆம் தேதி முதல் காலை 9 மணிமுதல் 12 மணிவரையிலும் மாலை 5 மணிமுதல் 8 மணிவரையிலும் பொதுமக்கள் தரிசனத்திற்காக அனுமதிக்கப்படுவார்கள்.  

 

7ஆம் தேதிமுதல் 13ஆம் தேதிவரை காலை 7 மணிமுதல் 10 மணிவரையிலும் மாலை 5 மணிமுதல் 8 மணிவரையிலும் பொதுமக்கள் தரிசனத்திற்காக அனுமதிக்கப்படுவார்கள். தேர் அன்று (14.7.2021) காலை 9 மணிமுதல் 12 மணிவரை ஆயிரங்கால் மண்டபம் முகப்பில் நடராஜரை தரிசிக்கலாம் என்றும் 15.7.2021 தரிசனத்தன்று தரிசனம் முடிந்த பிறகு பொதுமக்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்றும் பொது தீட்சிதர்கள் தெரிவித்துக்கொள்கிறார்கள்  என்று கோயிலில் பேனர் வைத்துள்ளனர். 

 

தமிழ்நாடு அரசு கோயில்களில் திருவிழா மற்றும் குடமுழக்கு நடத்த தடைவிதித்து பொதுமக்கள் வழிபட மட்டும் அனுமதியளித்துள்ள நிலையில், தீட்சிதர்கள் பொதுமக்களைத் திருவிழா நேரத்தில் கோயிலுக்குள்ளே வர தடைவிதித்து திருவிழாவை நடத்துகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து சிதம்பரம் பகுதியில் உள்ள பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் சிதம்பரம் நடராஜர் கோயில் ஆனி திருமஞ்சன திருவிழாவுக்கு கொடியேற்றும் நிகழ்ச்சிக்கு 6ஆம் தேதி பொதுமக்களுக்கு காலை 9 மணிவரை அனுமதி இல்லை என்று அறிவித்துள்ளனர். 

 

அதேநேரத்தில், தீட்சிதர் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள், கோயில் ஊழியர்கள் உள்ளிட்ட 1,800க்கும் மேற்பட்டவர்கள் திருவிழாவில் கலந்துகொள்வார்கள் என்றும் இதற்குப் பத்திரிகையாளர்கள், காவல்துறை, வருவாய்துறையினருக்கு அனுமதி இல்லை என்றும் அறிவித்துள்ளனர். கோயில் உள்ளே ஒரே நேரத்தில் கூடும் அனைவரும் கோவிலுக்குள்ளே இருக்கப் போவது இல்லை. கொடியேற்றம் மற்றும் திருவிழா காலம் முடிந்தவுடன் அனைவரும் பொதுமக்கள் இருக்கும் இடத்திற்கு செல்லும்போது நோய் தொற்று ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே கொடியேற்றம் மற்றும் கோயில் திருவிழா நிகழ்ச்சிக்கு சம்பந்தபட்ட தீட்சிதர்கள் மற்றும் ஊழியர்களை அனுமதித்து நோய் தொற்று பரவாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.  

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

மாணவர்களுக்கு கோடைக்கால இலவச விளையாட்டுப் பயிற்சி துவக்கம்

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Summer free sports training for students begins in Chidambaram

கோடைக்காலத்தில் மாணவர்களை நல்வழிப்படுத்தும் விதமாக இலவச விளையாட்டு பயிற்சிகள் துவக்கப்பட்டது.

சிதம்பரம் அரசு உதவி பெறும் ஆறுமுக நாவலர் மேல்நிலைப்பள்ளி சார்பாக சின்ன மார்க்கெட் பகுதியில் உள்ள பள்ளியின் விளையாட்டு மைதானத்தில் பள்ளி மாணவர்களை கோடைக்காலத்தில்  நல்வழிப்படுத்தும் விதமாக  இலவசமாக காலை மற்றும் மாலை வேலைகளில் யோகா, சிலம்பம், இறகு பந்து, கூடைப்பந்து, கபடி ஆகிய விளையாட்டுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. 

இதன் துவக்க நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை மாலை பள்ளி மைதானத்தில்  நடைபெற்றது.  இந்நிகழ்சிக்கு ஆறுமுக அரசு உதவி பெறும் பள்ளி குழு செயலாளர் அருள் மொழி செல்வன் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினர்களாக பள்ளி குழு தலைவர் சேது சுப்பிரமணியன் மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் ராஜமாணிக்கம் ஆகியோர் கலந்து கொண்டு விளையாட்டு பயிற்சிகள் குறித்தும், அதனால் ஏற்படும் உடல் ரீதியான நன்மைகள் குறித்தும் பேசினார்கள்.

Summer free sports training for students begins in Chidambaram

இந்நிகழ்ச்சியில் பள்ளியின் தலைமை ஆசிரியர் ராம்குமார், உடற்கல்வி ஆசிரியர் எத்திராஜன், சிலம்பகளை ஆசிரியர் ராஜா ராம் யோகக்கலை ஆசிரியர் முத்துக்குமாரசாமி, கூடைப்பந்து நடராஜன், அண்ணாமலை பல்கலைக்கழக உடற்கல்வி பயிற்றுநர்கள் கலந்து கொண்டு மாணவ மாணவிகளுக்கு பயிற்சிகளை அளித்தனர். இதில் சிதம்பரம் நகரத்தில் உள்ள பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர். நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி, பள்ளியின் தமிழாசிரியர் செல்வம் நன்றி கூறினார் இதில் பள்ளியின் இருபால் ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் திரளாகக் கலந்து கொண்டனர்.

Next Story

சிதம்பரத்தில் மாணவ மாணவிகளுக்கு உயர் கல்வி வழிகாட்டல் நிகழ்ச்சி

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Higher education guidance program for students in Chidambaram

சிதம்பரம் அரசு நந்தனார் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில்  ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வு எழுதிய  மாணவ மாணவிகளுக்கு  உயர் கல்வி வழிகாட்டல் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்சிக்கு  சிதம்பரம் சார் ஆட்சியர் ராஷ்மிராணி தலைமை தாங்கி மாணவர்கள் மத்தியில் பேசுகையில்  பன்னிரெண்டாம் வகுப்பு  முடித்து  அடுத்து என்ன படிக்கலாம்.  மாணவர்களின் கனவுகளை நினைவாக்கும்  படிப்புகள்  எவை,   உயர்கல்விக்கு செல்ல ஏராளமான உதவித் தொகை வாய்ப்புகள் உள்ளது என்றும்,   தேர்ச்சி பெற்ற அனைத்து  மாணவர்களுக்கும்  உயர் கல்விக்கான  வழிகாட்டுதல்களைத் தமிழக அரசு சிறப்பாகச் செய்து வருகிறது.  சிறந்த வாய்ப்புகளுக்கு எந்தக் கல்லூரியிலும்  சேர்ந்து படிக்கலாம்,  வருங்காலத்தைப் பலப்படுத்த எந்தப் பாடப்பிரிவைத்  தேர்ந்தெடுக்கலாம் என்பது குறித்து  மாணவர்களிடம் விளக்கி பேசினார்.

Higher education guidance program for students in Chidambaram

இதனைத் தொடர்ந்து மாவட்ட ஆதிதிராவிட  மற்றும் பழங்குடியின நல அலுவலர்  லதா அனைவரையும் வரவேற்றார். மண்டல உதவி இயக்குநர் சுப்பிரமணியன்,  ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி மாவட்ட உதவி திட்ட அலுவலர் சரவணகுமார்,  நந்தனார் ஆண்கள் மேல் நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் குகநாதன், குமராட்சி வட்டார வள மைய மேற்பார்வையாளர் இளவரசன்,  ஒருங்கிணைப்பாளர் பூங்குழலி,  பள்ளித்துணை ஆய்வாளர்  வாழ்முனி,  ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.

இதில் மண்டல ஒருங்கிணைப்பாளர்கள் ரவி, அருள்சங்கு, நந்தனார் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் ராதாகிருஷ்ணன்,  சுவாமி சகஜானந்தா மணி மண்டப ஒருங்கிணைப்பாளர் பாலையா, குமராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பாலமுருகன், உள்ளிட்ட கடலூர் மாவட்டத்தில் உள்ள  ஆதி திராவிட நலத்துறை   பள்ளிகளின் மாணவ மாணவிகள்  300-க்கும் மேற்பட்டவர்கள்  கலந்து கொண்டு  உயர்கல்வி குறித்து ஆலோசனைகளைப் பெற்றனர்.   இவர்களுக்கு உயர் கல்வி குறித்த விவரங்களை கருத்தாளர் கோபி வழங்கினார். சிதம்பரம் ஆதிதிராவிடர் நலத்துறை தனி வட்டாட்சியர் சுதா அனைவருக்கும் நன்றி கூறினார்.