கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த பழையபட்டினம் கிராமத்தில் வசித்து வருபவர் அப்துல் ஜலீஸ். இவர் தனக்கு சொந்தமான முந்திரி தோப்பில் நபார்டு திட்டத்தின் கீழ் நீர் ஆதாரத்தை பெருக்க வேண்டும் என்பதற்காக இயந்திரத்தின் மூலம் குழி தோண்டி உள்ளார். அப்போது சுமார் இரண்டு அடியில் ஐம்பொன்னால் ஆன நடராஜர் சிலை, மணிகள், பூஜை சாமான்கள் வைக்க பயன்படுத்தப்படும் தட்டுகள், கமண்டலம் உள்ளிட்ட இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
பின்னர் ஆலடி காவல்துறையினருக்கு தகவல் அளித்ததன் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் மற்றும் வருவாய் அதிகாரிகள் சிலை மற்றும் அதன் உடன் இருந்த அனைத்துப் பொருட்களையும் கைப்பற்றி, தொல்லியல்துறை ஆய்வுக்காக கொண்டு சென்றனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.