ம.நடராஜன் உடலுக்கு தலைவர்கள் அஞ்சலி...{படங்கள்}
சார்ந்த செய்திகள்
Next Story
கிரிக்கெட் வீரர் நடராஜனுக்கு கரோனா!
கரோனா பரவல் காரணமாக ஒத்திவைக்கப்பட்டிருந்த, ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் கடந்த 20/09/2021 அன்று துபாயில் மீண்டும் தொடங்கியது.
இன்று (22.09.2021) டெல்லி கேபிடல்ஸ் அணிக்கும் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கும் போட்டி நடைபெற இருந்தநிலையில், சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர் நடராஜனுக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதனால் நடராஜனுடன் தொடர்பில் இருந்த விஜய் சங்கர் உட்பட அணி நிர்வாகிகள் 6 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். கிரிக்கெட் வீரர் நடராஜனுக்கு கரோனா உறுதி செய்யப்பட்டிருந்தாலும் இன்றைய போட்டி திட்டமிட்டபடி நடக்கும் என ஐபிஎல் நிர்வாகம் அறிவித்துள்ளது.
Next Story
கடைசி டெஸ்ட் போட்டி.. களமிறங்கும் தமிழக வீரர் நடராஜன்..!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் இந்திய அணி சார்பில் தமிழக வீரர் நடராஜன் மற்றும் சுழல் பந்து வீச்சாளர் வாஷிங்கடன் சுந்தர் ஆகியோர் களமிறங்கியிருக்கிறார்கள்.
4-வது மற்றும் கடைசி டெஸ்ட் பிரிஸ்பேன் நகரில் இன்று தொடங்கி நடைபெற்றுவருகிறது. ஆஸ்திரேலியா - இந்தியா அணிகளுக்கு இடையில் நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. முதல் டெஸ்டில் ஆஸ்திரேலியாவும், 2-வது டெஸ்டில் இந்தியாவும் வெற்றி பெற்றது. 3-வது டெஸ்ட் டிராவில் முடிந்தது. இந்த போட்டியில் வெற்றிபெறும் அணி தொடரை கைப்பற்றும். இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி பேட்டிங்கைத் தேர்வு செய்து விளையாடி வருகிறது.
ஆஸ்திரேலியா அணி 27 ஓவர்கள் முடிவில் 65 இரன்களுக்கு இரண்டு விக்கெட்களை இழந்து ஆடிவருகிறது. இந்திய அணியின் மொஹம்மத் சிராஜ், ஷர்துல் தாகூர் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தியுள்ளனர்.