(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
நடராஜர் கோவிலில் அதிகமானோர் கலந்து கொண்ட நாட்டியாஞ்சலி நிகழ்ச்சி உலக சாதனை படைத்துள்ளது. இந்த உலக சாதனை நடன நிகழ்ச்சியை பிரபல நாட்டிய கலைஞர் பிரபா சுப்பிரமணி ஆரம்பித்து வைத்தார்.
நடராஜர் கோவில் வளாகத்தில் குழு குழுவாக நாட்டியாஞ்சலி நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதில் நாடு முழுவதும் இருந்து வந்திருந்த ஐந்து வயதிற்கு மேற்பட்ட 7,190 நடன கலைஞர்கள் கலந்துகொண்டு ஒரே நேரத்தில் நடனமாடி நடராஜருக்கு அர்ப்பணித்தனர்.
இந்நிலையில்இந்த நிகழ்வுஅதிக நடன கலைஞர்கள் பங்கேற்ற சாதனையாக உலகசாதனை பட்டியலில் இடம்பெற்றுள்ளது. இதற்கு முன் கடந்த 2017- ஆம் ஆண்டு சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 4 ஆயிரத்து 525 பேர் நடனம் ஆடினார்கள் அதனை தற்போது முறியடிக்கப்பட்டுள்ளது.