Advertisment

காவல்துறையின் சாதுரியத்தால் கைப்பற்றப்பட்ட நடராஜர் சிலை 

Nataraja statue seized by the fact police

சிலைகளைக் கடத்தி விற்பனை செய்யும் கும்பலிடம், சிலையை விலைக்கு வாங்குவதுபோலபேரம் பேசிஅந்தச் சிலையைக் கொண்டு வரச்செய்து சிலையையும், சிலையை எடுத்து வந்தகாரையும்சிலைகடத்தல் தடுப்புப் பிரிவு காவல்துறையினர்பறிமுதல் செய்துள்ளனர்.

Advertisment

அந்தச் சிலையைக் கொண்டு வந்த கேரள மாநிலம் பாலக்காட்டைச் சேர்ந்த சிவ பிரசாத் நம்பூதிரி என்பவரையும்அவரது கார் ஓட்டுநர் ஜெயந்த் என்பவரையும் பிடித்துச் சிலைகடத்தல் தடுப்புப் பிரிவு காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Advertisment

Nataraja statue seized by the fact police

இந்த கும்பல் அந்தச் சிலைக்கு ரூ.10 கோடி கேட்டதாகவும், காவல்துறையினர்ரூ.8 கோடி தருவதாகவும் பேரம் பேசி சிலையைக் கொண்டு வரச் செய்தனர். கோவை பல்லடம் சாலையில் இருகூர் பிரிவு ரோட்டில் காரை மடக்கிப் பிடித்து சிலையைக் கைப்பற்றினோம் எனச் சிலைகடத்தல் தடுப்புப் பிரிவு திருச்சி சரக கூடுதல் காவல் கண்காணிப்பாளர் பாலமுருகன் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.

கைப்பற்றப்பட்ட திருவாச்சியுடன் கூடிய நடராஜர்சிலைஉலோகத்திலானது. அந்தச் சிலைஎந்தக் கோவிலுக்குச் சொந்தமானது? அது எந்தக் காலத்தில் வடிவமைக்கப்பட்டது? அந்தச் சிலையின் மீது ஏதேனும் வழக்குகள் எதுவும் நிலுவையில் உள்ளனவா? என்பது குறித்துத்தொடர்ந்து காவல்துறையினர்விசாரணை நடத்தி வருகிறார்கள்.

police statue trichy
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe