Skip to main content

கரோனா பாதுகாப்பு வழிகாட்டு நெறிமுறை... நீதிமன்றத்தின் பேனர் உத்தரவு காற்றில் பறந்துவிட்டதா... பிரதமர் மோடியின் பிறந்தநாள் விழா!

Published on 17/09/2020 | Edited on 17/09/2020

 

Narendra modi birthday celebration in tamilnadu by L.Murugan


பிரதமர் மோடியின் 70 -ஆவது பிறந்தநாளான இன்று (17/09/2020) அவருக்கு காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மற்றும் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் பல்துறை பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். அது மட்டுமின்றி மோடியின் 70 -ஆவது பிறந்தநாள் இந்தியா முழுக்க பல்வேறு மாநிலங்களில் பா.ஜ.க சார்பாகக் கொண்டாடப்பட்டது. தமிழக பா.ஜ.க தலைவர் எல்.முருகன் தலைமையில் சென்னையில் இன்று மோடியின் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. இந்நிகழ்வில் தமிழக பா.ஜ.கவின் மாநிலம், மாவட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர். சென்னையில் இந்த விழாவின்போது மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.


சென்னையின் முக்கிய சாலைகளில் தமிழக பா.ஜ.கவின் பேனர்கள் வைக்கப்பட்டிருந்தது. காலை, சென்னை மதுரவாயில் மேம்பாலம் அருகே புதிதாக அமைக்கப்பட்ட 70 அடி உயர கொடிக் கம்பத்தில் எல்.முருகன் பா.ஜ.க கொடியை ஏற்றினார். பின் பாண்டிபஜாரில் பா.ஜ.கவின் கலை இலக்கிய அணி சார்பில் மோடியின் சாதனைகள் டிஜிட்டலில் திரையிடப்பட்டது. அங்கிருந்து சாரட்டு வண்டியில் யாத்திரை சென்றார். இதில் பா.ஜ.கவின் தொண்டர்கள் உயர்மட்ட நிர்வாகிகள் பலர் பாடல், நடனம் என உற்சாகமாக இருந்தனர். பின் 70 அடி நீள கேக் வெட்டப்பட்டது. 

 

Narendra modi birthday celebration in tamilnadu by L.Murugan

 

2019 -ஆம் ஆண்டு சென்னை பள்ளிக்கரனையில் அ.தி.மு.க முன்னாள் கவுன்சலர் மகன் திருமணத்திற்காக பேனர் வைக்கப்பட்டது. அந்த போனர் விழுந்து ஐ.டி ஊழியர் சுபஸ்ரீ என்ற இளம்பெண் உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து சென்னை உயர்நீதிமன்றம் அனுமதியின்றி பேனர்களை வைக்கக்கூடாது என்றும் மீறினால் கடுமையான தண்டனை வழங்கப்படும் என்றும் எச்சரித்தது. ஆனால், இன்று சென்னையில் இருந்த பா.ஜ.கவினரின் பேனர்கள் அனுமதியுடன்தான் வைக்கப்பட்டதா எனக் கேள்வி எழுந்துள்ளது.

 

Narendra modi birthday celebration in tamilnadu by L.Murugan

 

தமிழகத்தில் கரோனா தொற்று தினமும் சராசரியாக 5,500 என பதிவாகிறது. இதில் சென்னையில் மட்டும் தினசரி 1,000 பேருக்கு குறையாமல் தொற்று பரவுகிறது. மக்கள் கரோனா தொற்றிலிருந்து பாதுகாப்பாக இருக்க வேண்டும், தனிமனித இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும், முகக்கவசம் அணியவேண்டும் என பல்வேறு அறிவுரைகளை மத்திய அரசு வழங்கி வருகிறது. அதேபோல் தமிழகத்தில் முகக்கவசம் அணியாமல் சென்றால் ரூ.200 அபராதம் என வசூலிக்கப்படுகிறது. அதன்படி சென்னையில் மட்டும் ரூ.2 கோடிக்கும் மேல் வசூலிக்கப்பட்டுள்ளது. தொற்று பராவமல் இருக்க இத்தனை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழக அரசு எடுத்துவருகிறது.

 

Narendra modi birthday celebration in tamilnadu by L.Murugan

 

இந்நிலையில் இன்று எல்.முருகன், சென்னை பாண்டி பஜாரிலிருந்து சாரட்டு வண்டி மூலமாக யாத்திரை சென்றபோது பெரும்பாலமான பா.ஜ.க தொண்டர்கள் முகக்கவசம் அணியவில்லை. யாருமே தனிமனித இடைவெளியைக் கடைப்பிடிக்கவும் இல்லை.

 

Ad

 

மக்களுக்காக சேவை செய்ய வந்திருக்கும் கட்சி மக்களுக்கு முனுதாரணமாக இருக்க வேண்டும் என இந்த யாத்திரை குறித்து பொதுமக்கள் கருத்துத் தெரிவிக்கின்றனர். இது ஒருபுறமிருக்க மயிலாப்பூர் பல்லக்கு மாநகர்ப் பகுதியில் நடைபெற்ற மோடி பிறந்தநாள் விழாவின்போது, அப்பகுதி மக்களுக்கு இலவச சேலை மற்றும் உணவு வழங்கப்பட்டது. அதைப் பெற்றுக் கொள்ள தனிமனித இடைவெளி இல்லாமல் மக்கள் முண்டியடித்து வாங்கிச் சென்றனர். 

 

Narendra modi birthday celebration in tamilnadu by L.Murugan

 

அரசின் கரோனா பாதுகாப்பு வழிகாட்டு நெறிமுறை, நீதிமன்றத்தின் பேனர் உத்தரவு எல்லாம் காற்றில் பறந்துவிட்டதா என மக்கள் கேள்வி எழுப்புகின்றனர். 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“சர்ச்சைக்குரிய கருத்தை வெளிப்படுத்துவது இந்திய இறையாண்மைக்கு உகந்ததல்ல” - இ.பி.எஸ்.!

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Expressing controversial opinion is not conducive to Indian sovereignty EPS

ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாராவில் பிரதமர் மோடி நேற்று முன்தினம் (21.04.2024) தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது, “காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் தாய்மார்கள் மற்றும் மகள்கள் வைத்திருக்கும் தங்கம் கணக்கீடு செய்யப்பட்டு பங்கீடு செய்யப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது. முன்பு காங்கிரஸ் ஆட்சி காலத்தின் போது நாட்டின் உடைமைகளில் இஸ்லாமியர்களுக்கு முன்னுரிமை இருக்கிறது என்று கூறினார்கள். அப்படியென்றால் யாருக்கு உங்கள் வளங்கள் போகப்போகிறது?. நாட்டில் ஊடுருவி வருபவர்களுக்கும், அதிக குழந்தைகளைப் பெற்றெடுப்பவர்களுக்கும், மக்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த செல்வத்தை காங்கிரஸ் கட்சி பங்கிட்டுக் கொடுத்துவிடும்.

அதாவது, காங்கிரஸ் கட்சியினர் இந்தியாவுக்குள் ஊடுருவிய, அதிக குழந்தைகள் பெற்றுக் கொண்டவர்களுக்கு சொத்துகளை வழங்குவோம் என்கிறார்கள். நீங்கள் கடினமாக உழைத்து சேர்த்த சொத்தை அவர்களுக்குக் கொடுக்க ஒப்புக்கொள்ளப் போகிறீர்களா?” எனப் பேசினார். இதனையடுத்து பிரதமரின் இந்தப் பேச்சு பெரும் சர்ச்சையானது. மேலும் பிரதமர் மோடியின் இந்த பேச்சுக்கு பல்வேறு தரப்பினரும் தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் இது குறித்து அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி விடுத்துள்ள அறிக்கையில், “பிரதமர் நரேந்திரமோடி ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாராவில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தின் போது, இஸ்லாமிய மக்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளார். இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடாகும். வாக்கு வங்கி அரசியலுக்காக அரசியல் கட்சித் தலைவர்களும், நாட்டின் உயர் ஆட்சிப் பதவியில் உள்ள பிரதமரும் இதுபோன்ற சர்ச்சைக்குரிய கருத்தை வெளிப்படுத்துவது இந்திய இறையாண்மைக்கு உகந்ததல்ல.

இஸ்லாமிய மக்களுடைய மனது புண்படும்படி இதுபோன்ற கருத்துகளை தெரிவிப்பது ஏற்புடையதல்ல. அரசியல் கட்சித் தலைவர்களும், ஆட்சி அதிகாரத்தில் மாண்பைமிகு உயர் பதவியில் உள்ளவர்களும் இதுபோன்ற கருத்துகளைத் தவிர்ப்பது நாட்டின் நலனுக்கும், மத நல்லிணக்கத்திற்கும் நல்லது. அரசியல் கட்சித் தலைவர்களின் இதுபோன்ற சர்ச்சை கருத்துகளால் சிறுபான்மையின மக்கள் மனதில் அச்சத்தை ஏற்படுத்துவதாகவும், மத உணர்வுகளைத் தூண்டும் விதமாகவும் அமைகிறது. தேர்தல் பிரச்சாரத்திற்காக கண்ணியம் தவறிய இதுபோன்ற மத துவேச கருத்துகளை யார் பேசினாலும் அது, இந்திய இறையாண்மைக்கு எதிரானதாகும். நாட்டின் நலனுக்காக இது முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார். 

Next Story

கர்நாடக முதல்வர் சித்தராமையா போராட்டம்!

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Karnataka Chief Minister Siddaramaiah struggle

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கியது. நாடு முழுவதும் மொத்தமாக ஏழு கட்டங்களாக மக்களவைத் தேர்தல் நடைபெறுகிறது. இறுதிக் கட்ட தேர்தல் ஜூன் 1ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4ஆம் தேதி நடைபெற்று அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கின்றன. இந்தத் தேர்தலை எதிர்கொள்ள நாடு முழுவதும் உள்ள அரசியல் கட்சிகள், தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றன. அந்த வகையில், மொத்தம் 28 தொகுதிகள் கொண்ட கர்நாடகா மாநிலத்தில், ஏப்ரல் 26 மற்றும் மே 7 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாகத் தேர்தல் நடைபெறவிருக்கிறது.

இந்நிலையில் கர்நாடகா மாநிலத்திற்கு மத்திய அரசு வழங்க வேண்டிய வறட்சி நிவாரணம் வழங்காததை கண்டித்து அம்மாநில முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் டி.கே. சிவக்குமார் உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள் பெங்களூரு விதான சவுதாவில் உள்ள காந்தி சிலை முன்பு இன்று (23.04.2024) போராட்டம் நடத்தினர். அப்போது மத்திய அரசு மாற்றாந்தாய் போக்குடன் நடத்துகிறது என கார்நாடக அரசு சார்பில் குற்றம் சாட்டப்பட்டது.

இது குறித்து கர்நாடக மாநில முதல்வரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான சித்தராமையா கூறுகையில், “காங்கிரஸ் கட்சி சார்பில், மத்திய அரசை கண்டித்து போராட்டம் நடத்தினோம். நரேந்திர மோடியும், அமித்ஷாவும் கர்நாடக விவசாயிகளை வெறுக்கிறார்கள். கடந்த செப்டம்பர் 22 ஆம் தேதி மத்திய அரசுக்கு வறட்சி குறித்து குறிப்பாணை (memorandum) கொடுத்தோம். பிறகு மத்திய குழு வந்தது.  அதன் பின்னர் மாநிலத்தின் 223 தாலுகாக்களில் வறட்சி நிலவி வருவதை அமித் ஷா ஆய்வு செய்தார். இதுவரை காலதாமதமாக விவசாயிகளுக்கு 650 கோடி ரூபாய் மத்திய அரசு வழங்கியுள்ளது. கர்நாடகாவுக்கு உரிய நிவாரணம் வழங்காததற்கு நிர்மலா சீதாராமனும், நரேந்திர மோடியும் தான் காரணம்” எனத் தெரிவித்தார்.