பிரதமர் வழியனுப்பி வைத்த தமிழக ஆளுநர், முதல்வர், அமைச்சர்கள்...

நேற்று மாமல்லபுரம் கடற்கரை கோயில் வளாகத்தில் பிரதமர் மோடி சீன அதிபர் ஜின்பிங் ஆலோசனையில் ஈடுபட்டனர்.

modi

இரவு உணவு விருந்து முடிந்து சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக இருநாட்டு தலைவர்களும் ஆலோசனையில் ஈடுபட்டனர். இந்த ஆலோசனையில் இருநாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர்கள், தேசிய பாதுகாப்பு ஆலோசகர்கள் பங்கேற்றனர்.

இந்த ஆலோசனைக்குப் பிறகு சீன அதிபரை பிரதமர் மோடி மாமல்லபுரத்திலிருந்து வழி அனுப்பி வைத்தார் பிறகு அவரும் கோவளம் புறப்பட்டு சென்றார்.

இரண்டுவது நாளான இன்று சீன அதிபரும், இந்திய பிரதமர் நரேந்திர மோடியும் கோவளத்தில் சந்திக்க உள்ளனர். சுமார் இரண்டு மணிநேரம் பேச்சுவார்த்தை நடைபெற இருக்கிறது. இந்நிலையில், சென்னையில் இரண்டாம் நாளான இன்று ஜின்பிங்கின் அட்டவணை வெளியாகியுள்ளது. 9:05 க்கு காலை ஹோட்டலில் இருந்து கிளம்ப வேண்டிய அதிபர் சற்று தாமதமாக கிளம்பி கோவளம் சென்றடைந்தார். மோடி அவரை வரவேற்று கோவளம் கடற்கரை ஹோட்டலில் இரண்டாவது நாள் பேச்சுவார்த்தையை தொடங்கினார்கள். இருவரும் ஒரு மணிநேரம் தனியாகவே பேச்சுவார்த்தையை நடத்தினார்கள். அதன்பின் ஜின்பிங் சென்னை விமான நிலையத்திற்கு வந்து தனி விமானத்தில் நேபாளத்திற்கு புறப்பட்டு சென்றார்.

இந்நிலையில், 2 நாள் சென்னை பயணத்தை முடித்துக்கொண்டு டெல்லி புறப்பட்டார் பிரதமர் மோடி. வழியனுப்பும் போது பிரதமர் மோடிக்கு ஆளுநர், முதல்வர் பழனிசாமி நினைவுப் பரிசு வழங்கினர்.

Narendra Modi Tamil Nadu
இதையும் படியுங்கள்
Subscribe