Skip to main content

மக்களை தேடி குறைகளை தீர்க்கும் ‘மக்கள் குரல்’ புதிய திட்டம்; புதுச்சேரியில் நாராயணசாமி தொடங்கி வைத்தார்!

Published on 19/07/2019 | Edited on 19/07/2019

புதுச்சேரி மாநிலத்தில் வருவாய் மற்றும் சமூக நலத்துறை இணைந்து அரசின் மற்ற துறைகளை ஒருங்கிணைத்து ‘மக்கள் குரல்’ என்ற பெயரில் சட்டமன்ற தொகுதிகள் வாரியாக மக்கள் குறைகேட்பு கூட்டம் நடத்த முதலைமைச்சர் நாராயணசாமி மற்றும் அமைச்சர்கள், அதிகாரிகள் முடிவெடுத்துள்ளனர்.  மக்கள் குரல் மூலம் அந்தந்த தொகுதிகளுக்கு அமைச்சர்களும், அதிகாரிகளும் நேரில் சென்று குறைகளை கேட்டு நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுப்பதென திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.  

 Narayanasamy launches ''makkal kural'' project in Puducherry


அதன்படி இந்த திட்டம் மாநிலத்தில் முதன் முறையாக நெட்டப்பாக்கத்தில் நேற்று தொடங்கி வைக்கப்பட்டது. சமூக நலத்துறை அமைச்சர் கந்தசாமி தலைமை தாங்கினார். சபாநாயகர் சிவக்கொழுந்து, அமைச்சர்கள் நமச்சிவாயம், மல்லாடி கிருஷ்ணாராவ், ஷாஜகான், கமலக்கண்ணன், விஜயவேணி எம்.எல்.ஏ. ஆகியோர் முன்னிலை வகித்தனர். நலத்துறை செயலாளர் ஆலிஸ்வாஸ் வரவேற்றார். மக்கள் குரல் திட்டம் குறித்து வருவாய்த்துறை செயலர் அசோக்குமார், மாவட்ட ஆட்சியர் அருண் ஆகியோர் விளக்கவுரையாற்றினர்.

 திட்டத்தை தொடங்கி வைத்து முதலமைச்சர் நாராயணசாமி பேசுகையில், “

 

 Narayanasamy launches ''makkal kural'' project in Puducherry


புதுவை மாநில மக்களுக்கு பல்வேறு பிரச்சினைகள் உள்ளன. விவசாயிகளுக்கு உரிய நேரத்தில் விதை, உரம் கிடைக்க வேண்டும், விவசாய விளைபொருட்களுக்கு சரியான விலை கிடைக்கவேண்டும் உள்ளிட்ட பிரச்சனைகள் உள்ளன. குடும்ப அட்டை குளறுபடி தொடர்பான பிரச்சனைகளுக்கும், வருவாய் துறையில் பட்டா மாற்றம், குடியுரிமை சான்றிதழ் போன்றவைகளுக்கும் இந்த கூட்டங்களின் மூலம் தீர்வு காணப்படும்.

இது தவிர அரசு துறைகள் மூலம் தொழில் தொடங்குவது, நலத்திட்ட உதவிகள் வழங்குவது, வங்கிகள் மூலம் கடனுதவி வழங்குவது ஆகியவைகள் ஏற்பாடு செய்யப்படும்” என்று கூறினார்.

நிகழ்ச்சியில் நெட்டப்பாக்கம் தொகுதியை சேர்ந்த மடுகரை, சூரமங்கலம், கல்மண்டபம், ஏரிப்பாக்கம், கரையாம்புத்தூர், நத்தமேடு உள்பட பல்வேறு கிராமங்களில் இருந்து 200-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்துகொண்டு தங்கள் பகுதியில் உள்ள குறைகள் தொடர்பாக புகார் மனுக்களை வழங்கினர்.

 Narayanasamy launches ''makkal kural'' project in Puducherry


மனைப்பட்டா, முதியோர் உதவித்தொகை, விவசாய பிரச்சனை தொடர்பான மனுக்கள் அதிகமாக இருந்தன. அந்த மனுக்களின் மீது விசாரணை நடத்தி விரைவாக நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு நாராயணசாமி உத்தரவிட்டார். பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில் வருவாய்த்துறை, பொதுப்பணித்துறை, சமூகநலத்துறை, வேளாண்துறை, குழந்தைகள் நலம் மற்றும் மேம்பாடு, ஆதிதிராவிடர் நலத்துறை உள்ளிட்ட துறைகளை சேர்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

சார்ந்த செய்திகள்

Next Story

'பாஜக காங்கிரஸ் பணம் தருகிறது' - தனி ஆளாக போராட்டத்தில் இறங்கிய சுயேச்சை வேட்பாளர்

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
'BJP Congress gives money' - Independent candidate goes into the struggle alone

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை நேற்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. மேலும் இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகத்திலும், புதுச்சேரியிலும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் புதுச்சேரியில் பாஜக, காங்கிரஸ் ஆகிய அரசியல் கட்சியினர் வாக்குக்கு பணம் தருவதாக குற்றச்சாட்டு தெரிவித்து சுயேட்சை வேட்பாளர் ஒருவர் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார். புதுச்சேரி மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ், பாஜக, அதிமுக, நாம் தமிழர், சுயேச்சைகள் என மொத்தமாக 26 பேர் களத்தில் உள்ளனர். இந்நிலையில் சுயேச்சை வேட்பாளர் மாஸ்கோ என்பவர் காங்கிரஸ் மற்றும் பாஜக நிர்வாகிகள் வாக்காளர்களுக்கு பணம் தருவதாக புகார் தெரிவித்துள்ளார். உடனடியாக இரு கட்சி வேட்பாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் அல்லது தேர்தலை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் எனக் கருப்பு கொடியை ஏந்தியபடி சாலையின் நடுவே அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார். உடனடியாக அங்கு வந்த போலீசார் அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தி அனுப்பி வைத்தனர்.

Next Story

தாமரை வடிவில் அலங்காரம்; புகாரில் சிக்கிய வாக்குச்சாவடி!

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Decoration in the shape of a lotus at the polling station

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை நேற்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. மேலும் இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகத்திலும், புதுச்சேரியிலும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் புதுச்சேரியில் பாகூர் வாக்குச்சாவடியில் நுழைவு வாயிலில் தாமரை வடிவிலான அலங்காரம் செய்யப்பட்டதாக புகார்கள் எழுந்த நிலையில், தற்பொழுது அவை நீக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி மாநிலம் பாகூரில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளி ஒன்றில் 11/23 என்ற எண் கொண்ட வாக்குச்சாவடி அமைக்கப்பட்டது. அந்த வாக்குச்சாவடியின் நுழைவு வாயிலில் பேப்பரால் செய்யப்பட்ட தாமரைகளைக் கொண்டு அலங்காரம் செய்யப்பட்டது. உடனடியாக இதுகுறித்து திமுக மற்றும் கம்யூனிஸ்ட் கட்சியினர் தேர்தல் நடத்தும் அதிகாரிகளிடம் புகார் அளித்தனர். புகாரைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்குச் சென்ற அதிகாரிகள் நுழைவு வாயிலில் ஒட்டப்பட்டிருந்த தாமரை வடிவிலான பேப்பர் பூக்களை அகற்றினர்.